முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Jovika விற்கு 🔥 விட்ட அறிவாளிகள் படிக்க வேண்டிய அவசிய பதிவு ⚠

அது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ளும் எல்லாரும் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “. தான். 





 ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எரிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எரி.. உனக்கு ஒரு டாலர் தரேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக்கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அது ஒரு நிகழ்ச்சி... தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள்.

அதன் நவீன வடிவம் தான் பிக்பாஸ்.

அதில் பங்கேற்கும் பலரும் ஒரு விதத்தில் “செலிபிரேட்டி பைத்தியங்கள் “ கூடவே அதுக்கு கொஞ்சம் காசும் கொடுக்கிறாங்க என்பதுதான். பார்க்கும் மக்கள் எல்லாரும் முட்டாளாக்கிவிடலாம் என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம்.ஆனால் அதனை நிஜமென நம்ப வைப்பார்கள்.

அதில் பேசப்படும் எல்லாமே சமூக கழிவுகளின் எச்சம்தான். ஆனால் என்ன ஒன்று... ஒரே சமயத்தில் கோடி பேர்களை சென்றடைகிறது. அதுதான் பிரச்சினை.

படிப்பு கெளரவமா என்றால் இல்லை.

படிப்பு முக்கியமா என்றால் ஆம் முக்கியம். ரொம்ப முக்கியம்.

ஒரு படிப்பு பல வாசல்களை திறக்கும் திறவுகோல். இதனை செய்ய இன்னொரு கருவி இருக்கிறதா என்றால் அது பணம். பரம்பரை பணம். 

காமராசர் ஜெயிச்சாரு டெண்டுலர் ஜெயிச்சாருனா அது வேற கதை. அவங்க படிக்க போகாம ஒருத்தர் டெய்லி பேப்பர் படிச்சி அரசியல் தெரிஞ்சு இருந்தாரு. தன்னை தயார் படுத்துகிட்டாரு. இன்னொருத்தர் கிரிக்கெட் பேட்டோட கிடந்தாரு. அவரும் தன்னை தயார் செய்துகொண்டிருந்தார். அதுவே ஒரு கல்விதான். ஜெயகாந்தன் படிக்கலனா ... அந்த சங்கீ படிச்சா என்னா படிக்காட்டி என்ன ? முழுக்க வக்கிரங்கள் நிரம்பிய மனம் அது. 

படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல ... என்பது இன்னொரு குற்றச்சாட்டு. உன் படிப்பை ஆயிரம் பேர் படிக்கும் போது அதில் நீ எந்த இடம் என்பதிலும் படிப்பின் ஆழம் என்ன என்பதும் அதில் இருக்கிறது. ஆனால் அந்த படிப்பு அவனை அடிமையாக உழைக்க விடாது. உழைப்பை சுரண்ட விடாது. இந்த இடத்தில் தான் கல்வி நம்மை சிந்திக்க வைக்கிறது. 

இந்த சிந்தனையை உடைக்கத்தான் சீமான் வகையறாக்கள் படிப்பு முக்கியமில்லை என்கிறார்கள். அதன் வழியாக விவசாயம் என்பதை குளோரிபை செய்கிறார்கள். உன் அப்பனும் தாத்தானும் நல்லா உழைப்பாளிகள் தான். விவசாயம் செய்தார்கள் தான். ஆனால் ஏன் நிலமெல்லாம் இன்னொருத்தன் கைகளில் சிக்கியது. அறியாமை. அந்த அறியாமையை நீக்க கல்வி அவசியம்.

மீண்டும் சொல்கிறேன்... படிப்பு கெளரவமல்ல ஆனால் .அவசியம். இது புரிந்தால் நீங்கள் லட்சங்களை எடுத்துகொண்டு தனியார் பள்ளி வாசலில் நிற்கமாட்டீர்கள். படிக்க வேண்டிய வயதில் குழந்தைகளை படிக்க விடாமால் தடுக்கவும் மாட்டீர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...