முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சினிமாவில் இவர்களையும் கவனித்து கொண்டாடுங்கள்

சிவாஜி, எம்.ஜியார், கமல், ரஜினி இவர்கள் எல்லாரும் இன்னும் பலரும் தங்களை நடிகராக நீருபித்தவர்கள். சிவாஜியின் பாசமலர் இறுதிக்காட்சியை அந்த கால இளைஞர்கள் கூட்டம் கதறி அழுது கொண்டாடியது. எம்ஜியாரின் ஆயிரத்தின் ஒருவன் மேன்லி லுக்கை கொண்டாடி தீர்த்தது. கமலில் நாயகன் அட பாருய்யா நம்ம நாட்ல ஒரு உலக நடிகன் என்றெல்லாம் எழுதி தீர்த்தது. ரஜினி அண்ணாமலை சவால் காட்சியை தியேட்டர் உரைந்துபோய் ரசித்தது. இப்படி ஒரு படமில்லை பல படங்கள் குவிந்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் நடிகராக பல்வேறு வேடங்களில் வெளிப்பாடுகளில் தங்களை நீருபித்து நூற்றாண்டு சினிமா உலகின் கீரிடத்தில் வைரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் அவர்கள் 99% நடிகர்களாகவே மின்னியிருக்கிறார்கள். பெர்ஃபார்மராக ரொம்ப ரொம்ப குறைவே. இதில் ரஜினி எம்.ஜியார் 99.99% நடிகர் தான். மற்ற இருவரும் சில படங்களில், அல்லது ஒரு படத்தில் நடிகர் என்பதை தாண்டி சில இடங்களில் பெர்ஃமாராக(நிகழ்த்துபவராக) மின்னியிருக்க்கிறார்கள். சிவாஜியில் எல்லா படங்களையும் ஒரு தட்டில் வைத்து முதல் மரியாதை படத்தை ஒரு தட்டில் வைத்தால் முதல் மரியாதையின் நடிகர் சிவாஜி கொஞ்சம் மறைந்துபோய் பெர்ஃபாம...

பெற்றோராக உங்களது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

 பாலூட்டி இனங்கள் என  எடுத்துக்கொண்டால் மனிதன் தான் கடைசி என நினைக்கிறேன். அப்படியிருக்கையில் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு உணர்வு உண்டு அது தங்களால் இந்த உயிர் வந்திருக்கிறது குறிப்பிட்ட காலம் வரை நான் பேணி வளர்க்க வேண்டும். பிறகு அதன் வாழ்வை அது பார்த்துக்கொள்ளும் என்ற அறிவு உண்டு. கடைசி காலத்தில் நாம போட்ட முட்டையில இருந்து வந்த புறா நம்மை பார்த்துக்கொள்ளுமா ? நாம போட்ட யானைக்குட்டி வயதான காலத்தில் நமக்கு தழை ஏதும் கொண்டு வந்து கொடுக்குமா (அதுகளத்தான் பிரிச்சு கோவில்ல பிச்சை எடுக்க வச்சிருவோமா அப்புறம் எப்படி தாய் பாசம் வரப்போது பாகன் பாசம் வேணும்னா வரலாம், நாமும் அத பெருமையா பேசலாம் ) என்றெல்லாம் யோசிக்குமா என தெரியவில்லை.  ஆனால் இந்த மனிதன் மட்டுமே தாய்மை புனிதம், தந்தமை தியாகமென உருவாக்கி வைத்திருக்கிறனோ.  நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா?  இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா? என சொல்லியிருப்பார் கண்ணதாசன். யோசித்தால் அது உண்மை. ஆனால் அதுதான் வாழ்க்கை. இங்கே சமூகம் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதனை நாகரீகம் வழி நடத்திச் செல்கிறது. இது ஒரு சங்க...