முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமாவில் இவர்களையும் கவனித்து கொண்டாடுங்கள்

சிவாஜி, எம்.ஜியார், கமல், ரஜினி இவர்கள் எல்லாரும் இன்னும் பலரும் தங்களை நடிகராக நீருபித்தவர்கள். சிவாஜியின் பாசமலர் இறுதிக்காட்சியை அந்த கால இளைஞர்கள் கூட்டம் கதறி அழுது கொண்டாடியது. எம்ஜியாரின் ஆயிரத்தின் ஒருவன் மேன்லி லுக்கை கொண்டாடி தீர்த்தது. கமலில் நாயகன் அட பாருய்யா நம்ம நாட்ல ஒரு உலக நடிகன் என்றெல்லாம் எழுதி தீர்த்தது. ரஜினி அண்ணாமலை சவால் காட்சியை தியேட்டர் உரைந்துபோய் ரசித்தது. இப்படி ஒரு படமில்லை பல படங்கள் குவிந்திருக்கிறது.

இவர்கள் எல்லாரும் நடிகராக பல்வேறு வேடங்களில் வெளிப்பாடுகளில் தங்களை நீருபித்து நூற்றாண்டு சினிமா உலகின் கீரிடத்தில் வைரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் அவர்கள் 99% நடிகர்களாகவே மின்னியிருக்கிறார்கள். பெர்ஃபார்மராக ரொம்ப ரொம்ப குறைவே. இதில் ரஜினி எம்.ஜியார் 99.99% நடிகர் தான். மற்ற இருவரும் சில படங்களில், அல்லது ஒரு படத்தில் நடிகர் என்பதை தாண்டி சில இடங்களில் பெர்ஃமாராக(நிகழ்த்துபவராக) மின்னியிருக்க்கிறார்கள். சிவாஜியில் எல்லா படங்களையும் ஒரு தட்டில் வைத்து முதல் மரியாதை படத்தை ஒரு தட்டில் வைத்தால் முதல் மரியாதையின் நடிகர் சிவாஜி கொஞ்சம் மறைந்துபோய் பெர்ஃபாமர் சிவாஜி வெளியே வந்திருப்பார். கமலுக்கு அப்படி மொத்த படமும் இல்லையென்றாலும் சில படங்களில் சில காட்சிகள் உண்டு. உதாரணம் தேவர்மகன் சிவாஜியுடனான அவரின் வெளிப்பாடுகள். 

நடிகன் சொல்லிகொடுத்ததை சரியாக கேமரா பார்த்து லெனஸ் பார்த்து ப்ரேமில் இங்கே இருப்போம் என புரிந்து மீட்டர் தெரிந்து வெளிப்படுவார்.

பெர்ஃபாமர் இவையெல்லாம் தெரிந்திருக்க அவசியமில்லை. அந்த கதாபாரத்திற்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் அதன் உடல்மொழியை உள்வாங்கி இயல்பாக வெளிப்படுவார்கள்.

நடிகர்களை நடிகருக்கு  என உருவாக்கப்பட்ட பிம்பம் பிண்ணனி இசை சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கும். ஆனா இந்த எம்.ஆர் ராதா, எம்.எஸ்.பாஸ்கர் ,சில படங்களில் ரகுவரன் சில படங்களில் பத்மினி இவர்கள் எல்லாம் நடிகர்கள் தாண்டி பெர்ஃபாமராக மின்னுவார்கள்.  இன்னும் பெரிய லிஸ்ட் உண்டு.

உதாரணமாக, உத்தமவில்லனில், எம்.எஸ்.பாஸ்கர் வாழ்ந்திருப்பார். அப்புச்சி என அவர் பேசும் வசனம் கமல்ஹாசனால் கூட செய்ய  முடியாது. விஜய்சேதுபதி 96 படத்தில் நடிகர் என்பதை தாண்டி ஒரு பெர்ஃபாமராக மின்னுவார். தனுஷ் வடசென்னை படத்தில் அன்பு பாத்திரத்தில் அப்படி இருப்பார். புஷ்பா படத்தில் கடைசியில் வரும் பகத்ஃபாசில் மிரட்டிவிட்டு செல்வார். காரணம் அவர் நடிகர் இல்லை பெர்ஃபாமர்.

நடிப்பு என்பது வேஷம் போடுவது, முகத்தை மாற்றுவது என்பதெல்லாம் தாண்டி அது வேறு ஒன்று. இந்த புரிதலில் நாம் படங்களை பார்க்க தொடங்கும் போது நம்மால் நல்ல படங்களை உள்வாங்க முடியும். அதைவிட்டு 10 வேசம், ஒரே பிரேமில் கதை சொல்றோம், உடம்பு 15கிலோ ஏத்தியிருக்கிறார் என்பதெல்லாம் வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே. ரஜினியிடமே போய் நீங்க நடிச்ச படம்னு கேட்டா முள்ளும்மலரும் மட்டுந்தான் சொல்ல முடியும். ஏன்னா அதுல அவர் பெர்ஃபாமரா கொஞ்சம் எட்டிப்பார்த்த படம்.

ஏன்னா பான் இந்தியா படம்ங்கிற பேர்ல பிரம்மாண்ட செட் நாலு மொழி நடிகர்களை தூக்கி போட்டு அவியல் சினிமா வரும் காலத்தில் இந்த பெர்ஃபாமர்கள் காணமல் போவார்கள். ஏனெனில் அங்கே வசனம் போதுமென்ற தன்மையும், பெரிய நடிகர் வேல்யூவும் போதுமென உருவாகும். விளைவு நல்ல சினிமா இழக்கும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே அது கொஞ்சம் தான் வருது.



நடிகர்களை கொண்டாடுங்கள். பெர்ஃபாமர்களையும் கவனித்து கொண்டாடுங்கள். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...