முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமாவில் இவர்களையும் கவனித்து கொண்டாடுங்கள்

சிவாஜி, எம்.ஜியார், கமல், ரஜினி இவர்கள் எல்லாரும் இன்னும் பலரும் தங்களை நடிகராக நீருபித்தவர்கள். சிவாஜியின் பாசமலர் இறுதிக்காட்சியை அந்த கால இளைஞர்கள் கூட்டம் கதறி அழுது கொண்டாடியது. எம்ஜியாரின் ஆயிரத்தின் ஒருவன் மேன்லி லுக்கை கொண்டாடி தீர்த்தது. கமலில் நாயகன் அட பாருய்யா நம்ம நாட்ல ஒரு உலக நடிகன் என்றெல்லாம் எழுதி தீர்த்தது. ரஜினி அண்ணாமலை சவால் காட்சியை தியேட்டர் உரைந்துபோய் ரசித்தது. இப்படி ஒரு படமில்லை பல படங்கள் குவிந்திருக்கிறது.

இவர்கள் எல்லாரும் நடிகராக பல்வேறு வேடங்களில் வெளிப்பாடுகளில் தங்களை நீருபித்து நூற்றாண்டு சினிமா உலகின் கீரிடத்தில் வைரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் அவர்கள் 99% நடிகர்களாகவே மின்னியிருக்கிறார்கள். பெர்ஃபார்மராக ரொம்ப ரொம்ப குறைவே. இதில் ரஜினி எம்.ஜியார் 99.99% நடிகர் தான். மற்ற இருவரும் சில படங்களில், அல்லது ஒரு படத்தில் நடிகர் என்பதை தாண்டி சில இடங்களில் பெர்ஃமாராக(நிகழ்த்துபவராக) மின்னியிருக்க்கிறார்கள். சிவாஜியில் எல்லா படங்களையும் ஒரு தட்டில் வைத்து முதல் மரியாதை படத்தை ஒரு தட்டில் வைத்தால் முதல் மரியாதையின் நடிகர் சிவாஜி கொஞ்சம் மறைந்துபோய் பெர்ஃபாமர் சிவாஜி வெளியே வந்திருப்பார். கமலுக்கு அப்படி மொத்த படமும் இல்லையென்றாலும் சில படங்களில் சில காட்சிகள் உண்டு. உதாரணம் தேவர்மகன் சிவாஜியுடனான அவரின் வெளிப்பாடுகள். 

நடிகன் சொல்லிகொடுத்ததை சரியாக கேமரா பார்த்து லெனஸ் பார்த்து ப்ரேமில் இங்கே இருப்போம் என புரிந்து மீட்டர் தெரிந்து வெளிப்படுவார்.

பெர்ஃபாமர் இவையெல்லாம் தெரிந்திருக்க அவசியமில்லை. அந்த கதாபாரத்திற்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் அதன் உடல்மொழியை உள்வாங்கி இயல்பாக வெளிப்படுவார்கள்.

நடிகர்களை நடிகருக்கு  என உருவாக்கப்பட்ட பிம்பம் பிண்ணனி இசை சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கும். ஆனா இந்த எம்.ஆர் ராதா, எம்.எஸ்.பாஸ்கர் ,சில படங்களில் ரகுவரன் சில படங்களில் பத்மினி இவர்கள் எல்லாம் நடிகர்கள் தாண்டி பெர்ஃபாமராக மின்னுவார்கள்.  இன்னும் பெரிய லிஸ்ட் உண்டு.

உதாரணமாக, உத்தமவில்லனில், எம்.எஸ்.பாஸ்கர் வாழ்ந்திருப்பார். அப்புச்சி என அவர் பேசும் வசனம் கமல்ஹாசனால் கூட செய்ய  முடியாது. விஜய்சேதுபதி 96 படத்தில் நடிகர் என்பதை தாண்டி ஒரு பெர்ஃபாமராக மின்னுவார். தனுஷ் வடசென்னை படத்தில் அன்பு பாத்திரத்தில் அப்படி இருப்பார். புஷ்பா படத்தில் கடைசியில் வரும் பகத்ஃபாசில் மிரட்டிவிட்டு செல்வார். காரணம் அவர் நடிகர் இல்லை பெர்ஃபாமர்.

நடிப்பு என்பது வேஷம் போடுவது, முகத்தை மாற்றுவது என்பதெல்லாம் தாண்டி அது வேறு ஒன்று. இந்த புரிதலில் நாம் படங்களை பார்க்க தொடங்கும் போது நம்மால் நல்ல படங்களை உள்வாங்க முடியும். அதைவிட்டு 10 வேசம், ஒரே பிரேமில் கதை சொல்றோம், உடம்பு 15கிலோ ஏத்தியிருக்கிறார் என்பதெல்லாம் வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே. ரஜினியிடமே போய் நீங்க நடிச்ச படம்னு கேட்டா முள்ளும்மலரும் மட்டுந்தான் சொல்ல முடியும். ஏன்னா அதுல அவர் பெர்ஃபாமரா கொஞ்சம் எட்டிப்பார்த்த படம்.

ஏன்னா பான் இந்தியா படம்ங்கிற பேர்ல பிரம்மாண்ட செட் நாலு மொழி நடிகர்களை தூக்கி போட்டு அவியல் சினிமா வரும் காலத்தில் இந்த பெர்ஃபாமர்கள் காணமல் போவார்கள். ஏனெனில் அங்கே வசனம் போதுமென்ற தன்மையும், பெரிய நடிகர் வேல்யூவும் போதுமென உருவாகும். விளைவு நல்ல சினிமா இழக்கும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே அது கொஞ்சம் தான் வருது.



நடிகர்களை கொண்டாடுங்கள். பெர்ஃபாமர்களையும் கவனித்து கொண்டாடுங்கள். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...