முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெற்றோராக உங்களது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

 பாலூட்டி இனங்கள் என  எடுத்துக்கொண்டால் மனிதன் தான் கடைசி என நினைக்கிறேன். அப்படியிருக்கையில் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு உணர்வு உண்டு அது தங்களால் இந்த உயிர் வந்திருக்கிறது குறிப்பிட்ட காலம் வரை நான் பேணி வளர்க்க வேண்டும். பிறகு அதன் வாழ்வை அது பார்த்துக்கொள்ளும் என்ற அறிவு உண்டு. கடைசி காலத்தில் நாம போட்ட முட்டையில இருந்து வந்த புறா நம்மை பார்த்துக்கொள்ளுமா ? நாம போட்ட யானைக்குட்டி வயதான காலத்தில் நமக்கு தழை ஏதும் கொண்டு வந்து கொடுக்குமா (அதுகளத்தான் பிரிச்சு கோவில்ல பிச்சை எடுக்க வச்சிருவோமா அப்புறம் எப்படி தாய் பாசம் வரப்போது பாகன் பாசம் வேணும்னா வரலாம், நாமும் அத பெருமையா பேசலாம் ) என்றெல்லாம் யோசிக்குமா என தெரியவில்லை. 

ஆனால் இந்த மனிதன் மட்டுமே தாய்மை புனிதம், தந்தமை தியாகமென உருவாக்கி வைத்திருக்கிறனோ. 

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? 

இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா? என சொல்லியிருப்பார் கண்ணதாசன். யோசித்தால் அது உண்மை. ஆனால் அதுதான் வாழ்க்கை. இங்கே சமூகம் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதனை நாகரீகம் வழி நடத்திச் செல்கிறது. இது ஒரு சங்கிலி. அதற்கு மேல் அதில் பெரிய தத்துவங்களோ போதனைகளோ கோட்பாடுகளோ இல்லை.

இயல்பாகவே சார்ந்து வாழும் தன்மை மனித இனத்திற்கு கொஞ்சம் அதிகமே உண்டு. எங்கே அது தப்பி போய்விடுமோ என பயந்து உருவாக்கியதே மத கோட்பாடு எனும் சமூக இயங்கியல் இதில் எல்லாம் உச்சம் நாகரிகம் என்ற சமூகத்தில் எல்லாமே உண்டு. ஆக நாம் உருவாக்கியது எல்லாமே நம்மை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே. இந்த சுய பாதுகாப்பு சில கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கிறது. ஆனால் என்ன வளர்த்தாலும் அந்த சுயம் சிந்திக்க தொடங்கும் போது எல்லாம் உடைப்பட்டு போகிறது. 

ஏன் என்ற கேள்வி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எதற்கு என்பது அதன் தொடர்ச்சியே. இந்த கேள்விகள் வர வர அவன் ஒன்றை ஒன்றாக உடைக்கிறான். தாய்மை என்ற சங்கிலியை உடைப்பவன் மனைவி என்ற சங்கிலிக்குள் பிணைத்துக்கொள்வான். இப்படித்தான் எல்லாமே… 

ஆண் பெண் சார்ந்து வாழ்தல் என்பது இயற்கை நியதி. மற்றவை எல்லாமே நாம் உருவாக்கிய மேக் அப்.

என் குழந்தைகள் என் மூலமாக வந்திருக்கிறார்கள்.எனக்காக அல்ல என்ற புரிதல் வேண்டும்.ஒரு குழந்தையின் வயது தான் ஒரு தாயாக ஒரு பெற்றோராக என் வயது என்ற புரிதல் வேண்டும். 

நான் அவர்களுக்கு முன்னால் வாழ வந்தவன்(ள்) தான். அதனாலே எல்லாம் சரியாகிவிடாது. அதே சமயம் எனக்கு கிடைப்பதைவிட வேறுசில வசதிகள் அவனுக்கு(வளுக்கு) கிடைக்கிறது. எனக்கு கிடைத்த சில அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. ஆகையால் நானும் குழந்தைகளோடு வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் மட்டுமே எனக்கு அது இன்னொரு உயிர் என புரியும்.

எப்போது இன்னொரு உயிர் என புரிந்துகொண்டீர்களோ… அப்போது அவர்கள் உங்கள் எதிர்கால டெபாசிட் இல்லையென புரிந்துகொள்ள முடியும். உங்கள் முதுமையை சமாளிக்க உங்களுக்கு சுய சிந்தனை வரும். அதே சமயம் அப்படி வளரும் குழந்தைகளுக்கு நீங்களும் ஒரு உயிர் அதனை காப்பது தன் வாழ்வில் ஒரு பகுதி என புரியும்.

இதை உணராத வரை…பெற்றோர்களுக்கு குழந்தைகள் எதிர்கால டெபாசிட்டே. குழந்தைகளுக்கு வயதான பெற்றோர் ஒரு சுமையே... 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...