முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெற்றோராக உங்களது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

 பாலூட்டி இனங்கள் என  எடுத்துக்கொண்டால் மனிதன் தான் கடைசி என நினைக்கிறேன். அப்படியிருக்கையில் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு உணர்வு உண்டு அது தங்களால் இந்த உயிர் வந்திருக்கிறது குறிப்பிட்ட காலம் வரை நான் பேணி வளர்க்க வேண்டும். பிறகு அதன் வாழ்வை அது பார்த்துக்கொள்ளும் என்ற அறிவு உண்டு. கடைசி காலத்தில் நாம போட்ட முட்டையில இருந்து வந்த புறா நம்மை பார்த்துக்கொள்ளுமா ? நாம போட்ட யானைக்குட்டி வயதான காலத்தில் நமக்கு தழை ஏதும் கொண்டு வந்து கொடுக்குமா (அதுகளத்தான் பிரிச்சு கோவில்ல பிச்சை எடுக்க வச்சிருவோமா அப்புறம் எப்படி தாய் பாசம் வரப்போது பாகன் பாசம் வேணும்னா வரலாம், நாமும் அத பெருமையா பேசலாம் ) என்றெல்லாம் யோசிக்குமா என தெரியவில்லை. 

ஆனால் இந்த மனிதன் மட்டுமே தாய்மை புனிதம், தந்தமை தியாகமென உருவாக்கி வைத்திருக்கிறனோ. 

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? 

இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா? என சொல்லியிருப்பார் கண்ணதாசன். யோசித்தால் அது உண்மை. ஆனால் அதுதான் வாழ்க்கை. இங்கே சமூகம் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதனை நாகரீகம் வழி நடத்திச் செல்கிறது. இது ஒரு சங்கிலி. அதற்கு மேல் அதில் பெரிய தத்துவங்களோ போதனைகளோ கோட்பாடுகளோ இல்லை.

இயல்பாகவே சார்ந்து வாழும் தன்மை மனித இனத்திற்கு கொஞ்சம் அதிகமே உண்டு. எங்கே அது தப்பி போய்விடுமோ என பயந்து உருவாக்கியதே மத கோட்பாடு எனும் சமூக இயங்கியல் இதில் எல்லாம் உச்சம் நாகரிகம் என்ற சமூகத்தில் எல்லாமே உண்டு. ஆக நாம் உருவாக்கியது எல்லாமே நம்மை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே. இந்த சுய பாதுகாப்பு சில கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கிறது. ஆனால் என்ன வளர்த்தாலும் அந்த சுயம் சிந்திக்க தொடங்கும் போது எல்லாம் உடைப்பட்டு போகிறது. 

ஏன் என்ற கேள்வி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எதற்கு என்பது அதன் தொடர்ச்சியே. இந்த கேள்விகள் வர வர அவன் ஒன்றை ஒன்றாக உடைக்கிறான். தாய்மை என்ற சங்கிலியை உடைப்பவன் மனைவி என்ற சங்கிலிக்குள் பிணைத்துக்கொள்வான். இப்படித்தான் எல்லாமே… 

ஆண் பெண் சார்ந்து வாழ்தல் என்பது இயற்கை நியதி. மற்றவை எல்லாமே நாம் உருவாக்கிய மேக் அப்.

என் குழந்தைகள் என் மூலமாக வந்திருக்கிறார்கள்.எனக்காக அல்ல என்ற புரிதல் வேண்டும்.ஒரு குழந்தையின் வயது தான் ஒரு தாயாக ஒரு பெற்றோராக என் வயது என்ற புரிதல் வேண்டும். 

நான் அவர்களுக்கு முன்னால் வாழ வந்தவன்(ள்) தான். அதனாலே எல்லாம் சரியாகிவிடாது. அதே சமயம் எனக்கு கிடைப்பதைவிட வேறுசில வசதிகள் அவனுக்கு(வளுக்கு) கிடைக்கிறது. எனக்கு கிடைத்த சில அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. ஆகையால் நானும் குழந்தைகளோடு வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் மட்டுமே எனக்கு அது இன்னொரு உயிர் என புரியும்.

எப்போது இன்னொரு உயிர் என புரிந்துகொண்டீர்களோ… அப்போது அவர்கள் உங்கள் எதிர்கால டெபாசிட் இல்லையென புரிந்துகொள்ள முடியும். உங்கள் முதுமையை சமாளிக்க உங்களுக்கு சுய சிந்தனை வரும். அதே சமயம் அப்படி வளரும் குழந்தைகளுக்கு நீங்களும் ஒரு உயிர் அதனை காப்பது தன் வாழ்வில் ஒரு பகுதி என புரியும்.

இதை உணராத வரை…பெற்றோர்களுக்கு குழந்தைகள் எதிர்கால டெபாசிட்டே. குழந்தைகளுக்கு வயதான பெற்றோர் ஒரு சுமையே... 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...