முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே நாடு ஒரே ஆதாரு...அதுக்கு இணை இதுக்கும் இணை என்ன நடக்கிறது..?

  மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள் :  இப்ப வரைக்கு யார் இணைக்கணும், எப்படி இணைக்கனும்னு விபரங்கள் வருதே தவிர ஏன் இணைக்கணும் தெரியல. மின் இணைப்புல எதுக்கு ஆதாருனு கேட்டா நெறிப்படுத்த என சொல்கிறார்கள். அப்படியெனில் இதுவரை நெறிப்படுத்தவில்லையா ? ஆதார் முலம் மட்டுமே நெறிப்படுத்த முடியுமா ? ஆதார் என்பதே தோற்றுபோன ஒன்றாக அல்லது தரவுகளை விற்கும் ஒன்றாக மட்டுமே இந்தியாவில் இருக்கிறது.  இந்த லட்சணத்தில் தேர்தல் அடையாள அட்டையுடன் இணை, மின் இணைப்புடன் இணை என்பதெல்லாம் பணமதிப்பிழப்பில் வீதியில் நிறுத்தியது போலவே இருக்கிறது. மத்தி(ஒன்றி)ய அரசின் முட்டாள்தனங்களை எதிர்ப்பார்கள் என்றே திமுகவை நம்பினார்கள். ஆனால் இவர்களோ ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே பின் தொடர்கிறார்கள். ஒரு முணுமுணுப்பு கூட ஆளுங்கட்சியிடம் இல்லை.  நீட், ரம்மி, என மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுகிறார், அது  ஒன்றிய அரசின் சதியெனில், ஒன்றிய அரசின் ஆதார் இணைப்பை வாக்காளார் அடையாள அட்டை, மின் இணைப்பு என  சிரம் மேற்கொண்டு பணி செய்வது யாரின் சதி ? எரிவாயு மானியம் இல்லாமல் போனது எல்லாரும் அறிவார்கள். டோ...

கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல..இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க...

ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாலை போடுறது  எல்லாம் அவ்ளோ பெருசா இல்லை. அப்புறம் சினிமா மூலமா கொண்டு வந்தாங்க. ரஜினி மாலை போட்டாரு, நம்பியார் மாலை போட்டாரு, அமிதாப் மாலை போட்டாரு, படங்கள் கட்டுரைகள் என பெரும் விளம்பரத்துக்கு பின்னாடி ஐயப்பன் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் கடவுளாகிப்போனார். இன்று வழக்கமாய் செல்லும் சாலையில் அந்த கோவில் திடீரென கொஞ்சம் கூட்டம் அதிகமாய் தெரிந்தது. பின்னர் விபரம் புரிந்தது இன்று கார்த்திகை. மாலைபோடுவார்கள். விரதம் இருப்பார்கள். தனித்த அடையாளத்தோடு ஆடைகள் அணிந்துகொள்வார்கள். அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு தீட்டாவார்கள். வீட்டில் அவர்கள் தனித்துவமாய் தெரிவார்கள். வீட்டில் பெண்களுக்கு இன்னும் வேலைகள் கூடும். சாஸ்திரம் சம்பிரதாயமென கூடும்.  எனக்கு இப்பவும் புரியாத விடயம், மட்டன் சிக்கன் சாப்பிட்ட சத்து தான் அவர்கள் மலையேற உதவப்போகுது. அதனால் ஊறிய ரத்தம் உடம்பில் இருக்கும். இந்த ஒரு 60 நாளோ 40 நாளோ விரதம் இருந்தால் கொழுப்பு குறையும். மத்தபடியே எல்லாமே அதே தானே. அது போதுமா கடவுளுக்கும். இந்த 60 நாள் மட்டும் அவர் சீர்தூக்கி பார்த்து அனுக்கிரகம் செய...