முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல..இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க...

ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாலை போடுறது  எல்லாம் அவ்ளோ பெருசா இல்லை. அப்புறம் சினிமா மூலமா கொண்டு வந்தாங்க. ரஜினி மாலை போட்டாரு, நம்பியார் மாலை போட்டாரு, அமிதாப் மாலை போட்டாரு, படங்கள் கட்டுரைகள் என பெரும் விளம்பரத்துக்கு பின்னாடி ஐயப்பன் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் கடவுளாகிப்போனார்.


இன்று வழக்கமாய் செல்லும் சாலையில் அந்த கோவில் திடீரென கொஞ்சம் கூட்டம் அதிகமாய் தெரிந்தது. பின்னர் விபரம் புரிந்தது இன்று கார்த்திகை. மாலைபோடுவார்கள். விரதம் இருப்பார்கள். தனித்த அடையாளத்தோடு ஆடைகள் அணிந்துகொள்வார்கள். அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு தீட்டாவார்கள். வீட்டில் அவர்கள் தனித்துவமாய் தெரிவார்கள். வீட்டில் பெண்களுக்கு இன்னும் வேலைகள் கூடும். சாஸ்திரம் சம்பிரதாயமென கூடும்.  எனக்கு இப்பவும் புரியாத விடயம், மட்டன் சிக்கன் சாப்பிட்ட சத்து தான் அவர்கள் மலையேற உதவப்போகுது. அதனால் ஊறிய ரத்தம் உடம்பில் இருக்கும். இந்த ஒரு 60 நாளோ 40 நாளோ விரதம் இருந்தால் கொழுப்பு குறையும். மத்தபடியே எல்லாமே அதே தானே. அது போதுமா கடவுளுக்கும். இந்த 60 நாள் மட்டும் அவர் சீர்தூக்கி பார்த்து அனுக்கிரகம் செய்வாரா ?

யோசித்தால் ஒரு கடவுள் பெண்களை தீட்டென்கிறார். அதற்கு ஆதரமாய் அவர் ஆண்களால் பிறந்ததாக ஒரு கதை ஓடும். ஆனால் உண்மையான வரலாறு வேறு. அதனை கேரள அறிவார்ந்த மக்களிடம் கேட்டாலே சொல்லுவார்கள்.  அல்லது தேடிப்படித்தாலே புரியும். ஆனாலும் பெண்களை தீட்டு என்ற கோவிலுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் ஆண்கள் செல்கிறார்கள். இதே நிலை பெண்களுக்கும் உண்டு. அவர்களும் இப்படி ஆண்களை ஒதுக்கி வழிபடுவதை அவர்களும் சில கடவுளை வரவேற்கிறார்கள்.

ஆணுமல்லன் பெண்ணுமல்லன் அலியுமல்லன் என்பதெல்லாம் சும்மா போல. கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல. இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க.

இப்போதும்  ஜோதி தரிசனம் கூட்டம் அள்ளும். ஐயப்பனின் தரிசனம் என சொல்லுவார்கள். ஜோதிவடிவாய் காட்சியளிக்கிறார் என சொல்லுவார்கள். என் பள்ளி காலத்தில் என் வீட்டில் அந்த ஜோதி தரிசனத்திற்கு அழைத்து சென்றார்கள். ஜோதியும் தெரிந்தது. நானெல்லாம் ஒரு நல்ல இந்துவாய் சில்லரைகளை சிதறவிட்டேன்.

அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு வழக்கில் அரசும், ஆலய நிர்வாகமும் சொல்லியது. அது நாங்கள் ஏற்றும் ஜோதிதான் என. தானாகவெல்லாம் எரியவில்லை என.   அடப்பாவிகளா இதையேண்டா இத்தனை வருசம் மறைச்சிங்கனு இருக்கும். ( காஷ்மீர் பனி லிங்க கதையும் இப்படித்தான் வெளியானது ) என்ன செய்ய கூட்டம் சேர்க்கனும். அதுக்கு இப்படி அப்படி கதைவிட்டா தானே நடக்கும்.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.. இன்னைக்க்கு வியாழக்கிழமையும் கூட. இப்பவே நடிகர் அஜித் சந்தானம் எல்லாரும் சாய்பாபா புகழ் பாட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் காவடியோ இல்லை விரதமோ இல்லை ஏதோ ஒன்று பிரபலமாய் இருக்கும். அதை இப்பவே நீங்க பழகிட்டிங்கன்னா.. 30 வருசமா போறேன். 40 வருசமா போறேனு பெருமையா  பேசிக்கலாம்.

ஏன்னா இங்க பக்திங்கிறது ஒன்னு அரசியல், இல்லாட்டி பெருமை தானே.

ஐயப்ப சாமியே சத்ய சாய் சரணம்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...