முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல..இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க...

ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாலை போடுறது  எல்லாம் அவ்ளோ பெருசா இல்லை. அப்புறம் சினிமா மூலமா கொண்டு வந்தாங்க. ரஜினி மாலை போட்டாரு, நம்பியார் மாலை போட்டாரு, அமிதாப் மாலை போட்டாரு, படங்கள் கட்டுரைகள் என பெரும் விளம்பரத்துக்கு பின்னாடி ஐயப்பன் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் கடவுளாகிப்போனார்.


இன்று வழக்கமாய் செல்லும் சாலையில் அந்த கோவில் திடீரென கொஞ்சம் கூட்டம் அதிகமாய் தெரிந்தது. பின்னர் விபரம் புரிந்தது இன்று கார்த்திகை. மாலைபோடுவார்கள். விரதம் இருப்பார்கள். தனித்த அடையாளத்தோடு ஆடைகள் அணிந்துகொள்வார்கள். அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு தீட்டாவார்கள். வீட்டில் அவர்கள் தனித்துவமாய் தெரிவார்கள். வீட்டில் பெண்களுக்கு இன்னும் வேலைகள் கூடும். சாஸ்திரம் சம்பிரதாயமென கூடும்.  எனக்கு இப்பவும் புரியாத விடயம், மட்டன் சிக்கன் சாப்பிட்ட சத்து தான் அவர்கள் மலையேற உதவப்போகுது. அதனால் ஊறிய ரத்தம் உடம்பில் இருக்கும். இந்த ஒரு 60 நாளோ 40 நாளோ விரதம் இருந்தால் கொழுப்பு குறையும். மத்தபடியே எல்லாமே அதே தானே. அது போதுமா கடவுளுக்கும். இந்த 60 நாள் மட்டும் அவர் சீர்தூக்கி பார்த்து அனுக்கிரகம் செய்வாரா ?

யோசித்தால் ஒரு கடவுள் பெண்களை தீட்டென்கிறார். அதற்கு ஆதரமாய் அவர் ஆண்களால் பிறந்ததாக ஒரு கதை ஓடும். ஆனால் உண்மையான வரலாறு வேறு. அதனை கேரள அறிவார்ந்த மக்களிடம் கேட்டாலே சொல்லுவார்கள்.  அல்லது தேடிப்படித்தாலே புரியும். ஆனாலும் பெண்களை தீட்டு என்ற கோவிலுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் ஆண்கள் செல்கிறார்கள். இதே நிலை பெண்களுக்கும் உண்டு. அவர்களும் இப்படி ஆண்களை ஒதுக்கி வழிபடுவதை அவர்களும் சில கடவுளை வரவேற்கிறார்கள்.

ஆணுமல்லன் பெண்ணுமல்லன் அலியுமல்லன் என்பதெல்லாம் சும்மா போல. கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல. இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க.

இப்போதும்  ஜோதி தரிசனம் கூட்டம் அள்ளும். ஐயப்பனின் தரிசனம் என சொல்லுவார்கள். ஜோதிவடிவாய் காட்சியளிக்கிறார் என சொல்லுவார்கள். என் பள்ளி காலத்தில் என் வீட்டில் அந்த ஜோதி தரிசனத்திற்கு அழைத்து சென்றார்கள். ஜோதியும் தெரிந்தது. நானெல்லாம் ஒரு நல்ல இந்துவாய் சில்லரைகளை சிதறவிட்டேன்.

அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு வழக்கில் அரசும், ஆலய நிர்வாகமும் சொல்லியது. அது நாங்கள் ஏற்றும் ஜோதிதான் என. தானாகவெல்லாம் எரியவில்லை என.   அடப்பாவிகளா இதையேண்டா இத்தனை வருசம் மறைச்சிங்கனு இருக்கும். ( காஷ்மீர் பனி லிங்க கதையும் இப்படித்தான் வெளியானது ) என்ன செய்ய கூட்டம் சேர்க்கனும். அதுக்கு இப்படி அப்படி கதைவிட்டா தானே நடக்கும்.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.. இன்னைக்க்கு வியாழக்கிழமையும் கூட. இப்பவே நடிகர் அஜித் சந்தானம் எல்லாரும் சாய்பாபா புகழ் பாட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் காவடியோ இல்லை விரதமோ இல்லை ஏதோ ஒன்று பிரபலமாய் இருக்கும். அதை இப்பவே நீங்க பழகிட்டிங்கன்னா.. 30 வருசமா போறேன். 40 வருசமா போறேனு பெருமையா  பேசிக்கலாம்.

ஏன்னா இங்க பக்திங்கிறது ஒன்னு அரசியல், இல்லாட்டி பெருமை தானே.

ஐயப்ப சாமியே சத்ய சாய் சரணம்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...