முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஜித், விஜயை கொண்டாடும் ரசிகர்கள் மட்டுமே மூடர்களா..?

அஜித் ரசிகர் ஒருவர் இறந்து போயிருக்கிறார். உடனே பலரும் அறிவுரைகளை வாரி வழங்குகிறார்கள். உடனே தமிழ்நாட்டு ஆரிய கும்பல் ஒரு கொடி பிடிக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் தான் வடக்கு மக்கள் இங்கே வருகிறார் என சைடு கேப்பில் தன் ஆரிய விசுவாசத்தை காட்டுகிறார்கள். சுயமூளையற்ற அறிவாளிகளே, இங்கே வடக்கன் வருவது தமிழன் வேலை பார்க்க மறுப்பதால் இல்லை. கூலி பிரச்சினை. இன்றைக்கும் சிவகாசி பட்டாசு ஆலையின் அடிப்படை ஊதியம் தெரியுமா ? ஒரு ஆபிசில் ஒரு பெண் வேலைக்கான அடிப்படை சம்பளம் 5000 ரூபாய்.  ஆண் வேலைக்கு 7500 ரூ. ஆனால் அதே ஊரில் டாய்லெட் வசதியுடன் வீட்டு வாடகையே 5,500. இது  தமிழ்நாடு முழுக்க நிலவும் பிரச்சினை. இங்கே நிலவுவது தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற பெரும் பொய்யான கருத்துருவாக்கம் தான். நான் சொல்கிறேன் இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய அவன் தயாராக இருக்கிறான். ஆனால் சம்பளம் தான் முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை விசுவாசம். சமீபத்தில் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர், வேலையை விட்டுவிட்டு  வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். கேட்ட போது அவர் சொன்...

வாழ்க்கை போராட்டத்தில் மன்னிக்க முடியாத மன்னிப்பு..?

கமல் ஒரு படத்தில சொல்லுவாரு மன்னிப்பு கேட்கிறவன் மனுசன். மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்னு சொல்லுவாரு. இங்க தப்பு செய்யாதவனும் இல்லை. மன்னிப்பு கேட்காதவனும் இல்லை. ஆனா மன்னிப்பு கொடுக்கிறவன் இருக்கானானு பார்த்தா ரொம்ப கம்மிங்க. ஏன்னா நம்ம உளவியல் அப்படி. இப்ப ஒரு உறவில X ம் Yம் நெருங்கி இருக்காங்க. ஒரு கட்டத்தில் இந்த X ஏதோ தப்பு செஞ்சுட்டாரு. Yக்கு அதுனால மனசு பாதிப்பு. பொருளாதார பாதிப்பு. இப்படி ஏதோ ஒரு பாதிப்பு. அது பெருசு சிறுசு எல்லாம் அவருக்கு தான் தெரியும். காலமாற்றத்தில் X தன் தவறை உணர்ந்து Yகிட்ட மன்னிப்பு கேட்பாரு. இப்ப Yக்கு சிக்கல். அந்த சூழல் நிலைமை பாதிப்பு எல்லாமே கண் முன்ன வந்து போகும். ஏன்னா அவர் அதை எதிர்கொண்டாவர் Y தானே. இப்ப மன்னிப்பு கொடுக்கலனா இன்னும் ஏதாச்சும் பெருசா வருமோ, இல்லாட்டி ஊர் உலகம் ஏதாச்சும் சொல்லுமோனு பயந்து Xஅ மன்னிப்பாரு. இந்த Xக்கும் ஒரு சந்தோஷம். நிம்மதி எல்லாமே கிடைக்கும். மன்னிப்பு கேட்ட மறுநாளே Y கிட்ட பழைய படி உறவை அன்பை புதுப்பிக்க முயலும். ஆனால் Y ஒரு நாடக தன்மையிலே இருக்கும். ஏன்னா உளவியல் பயம் அப்படி.  சரி இப்ப என்ன செய்றது. Y ...