முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஜித், விஜயை கொண்டாடும் ரசிகர்கள் மட்டுமே மூடர்களா..?

அஜித் ரசிகர் ஒருவர் இறந்து போயிருக்கிறார். உடனே பலரும் அறிவுரைகளை வாரி வழங்குகிறார்கள். உடனே தமிழ்நாட்டு ஆரிய கும்பல் ஒரு கொடி பிடிக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் தான் வடக்கு மக்கள் இங்கே வருகிறார் என சைடு கேப்பில் தன் ஆரிய விசுவாசத்தை காட்டுகிறார்கள்.


சுயமூளையற்ற அறிவாளிகளே, இங்கே வடக்கன் வருவது தமிழன் வேலை பார்க்க மறுப்பதால் இல்லை. கூலி பிரச்சினை. இன்றைக்கும் சிவகாசி பட்டாசு ஆலையின் அடிப்படை ஊதியம் தெரியுமா ? ஒரு ஆபிசில் ஒரு பெண் வேலைக்கான அடிப்படை சம்பளம் 5000 ரூபாய்.  ஆண் வேலைக்கு 7500 ரூ. ஆனால் அதே ஊரில் டாய்லெட் வசதியுடன் வீட்டு வாடகையே 5,500. இது  தமிழ்நாடு முழுக்க நிலவும் பிரச்சினை.

இங்கே நிலவுவது தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற பெரும் பொய்யான கருத்துருவாக்கம் தான். நான் சொல்கிறேன் இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய அவன் தயாராக இருக்கிறான். ஆனால் சம்பளம் தான் முதல் பிரச்சினை.

இரண்டாவது பிரச்சினை விசுவாசம். சமீபத்தில் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர், வேலையை விட்டுவிட்டு  வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். கேட்ட போது அவர் சொன்ன காரணம் முதலாளி வரும் போது எழுந்து நிக்கவில்லையாம். பிரிண்டிங் சார்ந்த நிறுவனத்தில் அமர நேரம் கிடைப்பதே குறைவு. கிடைத்த நேரத்தில் அமர்ந்த அவருக்கு மரியாதை தெரியவில்லை என நீக்கிவிட்டார்கள். இவர்கள் எதிர்பார்பது விசுவாசம் என்ற கொத்தடிமைகளை.

காலம் வரும், வரும் வடக்கன்களின் மூர்க்கம் வரலாறு அறியும் ,ஏதோ ஒர் குடும்பத்தின் ஒட்டுமொத்த கழுத்தறுத்து கொல்லும் போது புரியும்.  தமிழ்நாட்டில் நடக்கும் பல பெரிய திருட்டுகளின் இன்பார்மர் இந்த வடக்கன்ஸ்தான். 

தமிழர்களின் வேலைத்திறன் எப்போதும் அதிகமானது. ஆனால் அது சுயமரியாதை எதிர்பார்க்கும். அதை கொடுக்க விடாமல் முதலாளித்துவமும், சனாதனமும் பார்த்துக்கொள்கிறது,

அப்புறம் இதுவரை தமிழ்நாட்டில், தியாகராஜர் காலம் முதல், இப்போது ஜிவிபிரகாஷ் காலம் வரை ரசிகர்கள் சண்டையில் ஒரு 50 பேர் இறந்திருப்பார்களா ?

ஆனால் உங்கள் பக்தி மூடத்தனத்தில் ? மத வெறியில் ? எத்தனை பேர் இறந்திருப்பார்கள்.  ரசிகர்கள் மட்டுமே மூடர்களா ? ஏழு லட்சம் ரூபாய் மாலை வாங்கிய அஜித் ரசிகர் முட்டாள் என்றால், அதே விலையில் பெருமாளுக்கு மாலை போட்டால்,  திருப்பதி கோவிலில் உண்டியலில் போட்டால், இல்லை அனுமாருக்கு வடை மாலை சாத்தியவர்கள் எல்லாம் அறிவின் உச்சமா ? இவனுக்காவது அஜித் வாழும் சாட்சி. ஆனால் கடவுள் எல்லாம் புராணா புருடாக்களில் மட்டுமே ?

ரசிகர்கள் செய்வது தவறு. ஆனால் அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது உங்கள் மதம் தான். உங்கள் கடவுள் தான். இன்னும் சில ஆண்டுகளில் அவன் அந்த மாயையில் இருந்து விடுபடுவான். ஆனால் உங்களின் இந்த மத பித்து ???



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...