முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை போராட்டத்தில் மன்னிக்க முடியாத மன்னிப்பு..?

கமல் ஒரு படத்தில சொல்லுவாரு மன்னிப்பு கேட்கிறவன் மனுசன். மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்னு சொல்லுவாரு.

இங்க தப்பு செய்யாதவனும் இல்லை. மன்னிப்பு கேட்காதவனும் இல்லை. ஆனா மன்னிப்பு கொடுக்கிறவன் இருக்கானானு பார்த்தா ரொம்ப கம்மிங்க. ஏன்னா நம்ம உளவியல் அப்படி.

இப்ப ஒரு உறவில X ம் Yம் நெருங்கி இருக்காங்க. ஒரு கட்டத்தில் இந்த X ஏதோ தப்பு செஞ்சுட்டாரு. Yக்கு அதுனால மனசு பாதிப்பு. பொருளாதார பாதிப்பு. இப்படி ஏதோ ஒரு பாதிப்பு. அது பெருசு சிறுசு எல்லாம் அவருக்கு தான் தெரியும்.

காலமாற்றத்தில் X தன் தவறை உணர்ந்து Yகிட்ட மன்னிப்பு கேட்பாரு. இப்ப Yக்கு சிக்கல். அந்த சூழல் நிலைமை பாதிப்பு எல்லாமே கண் முன்ன வந்து போகும். ஏன்னா அவர் அதை எதிர்கொண்டாவர் Y தானே. இப்ப மன்னிப்பு கொடுக்கலனா இன்னும் ஏதாச்சும் பெருசா வருமோ, இல்லாட்டி ஊர் உலகம் ஏதாச்சும் சொல்லுமோனு பயந்து Xஅ மன்னிப்பாரு.

இந்த Xக்கும் ஒரு சந்தோஷம். நிம்மதி எல்லாமே கிடைக்கும். மன்னிப்பு கேட்ட மறுநாளே Y கிட்ட பழைய படி உறவை அன்பை புதுப்பிக்க முயலும். ஆனால் Y ஒரு நாடக தன்மையிலே இருக்கும். ஏன்னா உளவியல் பயம் அப்படி. 

சரி இப்ப என்ன செய்றது.

Y ட்ட என்ன சொல்றதுன்னா , மன்னிச்சே ஆகணும். ஏன்னா வெறுப்புலையோ, இல்லை ஒதுக்கி வைக்கிறதிலையே வாழ்க்கை முடியாது . காலம் பூரா அந்த வேதனையை தூக்கி சுமக்க முடியாது. அதுனால முழுசா மன்னிங்க. அவங்க மறுபடியும் பேசும் போது முழுசா பேசுங்க.

Xட்ட சொல்றது என்னானா.. கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன்னா நீங்க செஞ்ச செயல்ல அல்லது வார்த்தையில உங்க முன்னால் நட்பு அல்லது உறவு எதையோ இழந்திருக்கு. அது ஆற டைம் வேணும். அவங்க அவங்களையே மீட்டெடுக்க டைம் வேண்டும். அதைவிட முக்கியம் உங்கள்ட்ட பழைய மாதிரி பேச நீங்க இன்னும் கொஞ்சம் மெனக்கெடனும். இந்த பொறுமை இருந்தா மட்டுமே மன்னிப்பு கேட்ட உறவுகிட்ட பேச தயாரா இருங்க. இல்லாட்டி மன்னிப்பு கொடுத்த அடுத்த நிமிசம் உங்க வாழ்க்கைய பார்த்துட்டு போய்டுங்க. ஏன்னா நாந்தான் மன்னிப்பு கேட்டேன்ல அப்புறம் ஏன் இன்னும் அதையே நினைக்கிறேனு கேட்டா .. மனசு அப்படித்தாங்க. ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு செயல் பழசு எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டும். ஏன்னா மனசே ஒரு குரங்கு. அதுகிட்ட போய் குரங்க நினைக்காதானு சொன்னா வாழ்க்கையோட சோலி முடிஞ்ச்.

நீங்க மன்னிப்பு கொடுக்கலாம். கேட்கலாம். எதுவா இருந்தாலும் அது நம்ம நிம்மதிக்கு தான். அய்யோ இத செஞ்சுட்டோமோனு குற்றவுணர்ச்சியோட வாழ்றத விட இது கொஞ்சம் சுலபம். அந்த பக்கம் அவனை/ அவளை நினைச்சாலே எரிச்சல் வருதேங்கிற நிலையில இருந்து அதான் மன்னிப்பு கேட்டாங்கள்ள விட்டு தள்ளுனு நமக்கு ஒரு வலி நீக்க மருந்து கிடைக்கும். 

அவ்ளோதான். வெகு சொற்பமாகவே மன்னிப்பு கேட்ட உறவில் அடுத்த நொடியோ பூ பூக்கும். மற்ற எல்லாமே கொஞ்சம் காலம் எடுக்கும். அதற்கு சூழல் அமைப்பு வார்த்தை காலம்னு எல்லாமே முக்கியம்.

நம்பிக்கைங்கிறது பூ மாதிரி. அத கசக்கிட்ட அவ்ளோதான். மறுபடியும் ஒன்னும் செய்ய முடியாது. எட்ட நின்னு நீ நல்லாருக்கியா ? நா நல்ல இருக்கேன். அது எப்டி இருக்கு. இது எப்டி இருக்குனு பொதுவான உரையாடலோடு மட்டுமே இருங்கள். காலமும் சூழலும் அமைந்தால் முன்னைவிட அன்பாகலாம். அப்படியான உறவுகளும் நட்புக்களும் இங்கே ஏராளம்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுசன்

மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...