முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்படியாக இருந்தாலும் மனோஜிடம் தோற்றுவிட்ட பாரதிராஜா

மனோஜ் : தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனரின் மகன். பாரதிராஜா படங்களில் சாதீயம் இருந்தாலும் தமிழகத்தின் கிராமங்களை கொஞ்சம் காட்டியவர் என்ற வகையில் அவர் படங்கள் தமிழ் சினிமாவின் புதியபாதை என சொல்ல முடியும். அவரை யொற்றி சிலர் அவரையும் தாண்டி சென்றார்கள். ஆனாலும் அவரின் பாதை தனிப்பாதைதான். மனோஜ். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக உச்சம் தொட வேண்டியவர். அவரின் முகம் இயல்பாகவே குற்ற உணர்ச்சி கதாபாத்திரத்திற்கு அப்டியே பொறுந்தி போகும் தன்மையுள்ளது. பல படங்களில் மனோஜ் நடித்திருந்தாலும் அல்லி அர்ஜூனா, கடல் பூக்கள் அவர் பயணத்தில் முக்கியமானது.  இரண்டு படங்களில் இறுதிக்காட்சியில் அவர் அந்த கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வியை கொண்டு வந்திருப்பார். ஆனால் இரண்டுமே கண்டுகொளப்படவில்லை.  பெரிய வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அவரும் அமைத்துக் கொள்ளவில்லை. பாரதிராஜா அவருக்கு கொடுத்த துவக்கம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன். கல்லையும் நடிக்க வைப்பார் என்பது பாரதிராஜா பற்றி சொல்லும் சொல். ஆனால் பாரதிராஜாவின் திரைகதையாக்கத்தில் ஒரு கல்லும் நடிகராக தெரியும் என்றே நான் ...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...