முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் சினிமாவில் பார்த்திபனின் மெனெக்கடல்கள் என்றும் பிரச்சினை தான்..!

 ஒரு படம் பார்க்க தோன்ற முக்கிய காரணமாக அமைவது அதன் பின்னால் இருக்கும் நடிகர் இயக்குனர் மட்டுமே. இன்னொர் பக்கம்  படத்தின் பெயர் அதன் போஸ்டர் வடிவமைப்பு போன்ற மெனக்கெடல்களும்  சேர்ந்தது தான். சுப்பிரமணியபுரம் படம் அப்படித்தான் கவனத்தை ஈர்த்தது. கைதி போஸ்டர் வடிவமைப்பு இது ஏதோ வேறுமாதிரியான படமென நம்மை கவனிக்க வைத்தது. இப்படியான சில படங்கள் உண்டு.



இன்னொன்று இயக்குனர்கள். இவங்க இப்படித்தான் எடுப்பாங்கனு நம்மள நம்ப வைக்கிறது. ராஜமெளலி, ஷங்கர் படங்கள் எல்லாம் பிரம்மாண்டம் என பதிய வைப்பார்கள். இப்படியும் சில உண்டு. இன்னும் சில இயக்குனர்கள் வேறுமாதிரியான கதை களங்கள் தேர்வு செய்வார்கள். அது நமக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்.  ஒவ்வொரு படத்திற்கும் அது மாறுபடும். பாக்யராஜ், பாரதிராஜா  மணிவண்ணன் எல்லாம் இந்த வகையில் அடங்குவார்கள்.

இதில் பார்த்திபன் வேறு ஒரு தளத்தில் இயங்குகிறார். வித்தியாசமான படங்கள் கொடுத்தே ஆகவேண்டுமென மெனக்கெடுகிறார். ஆனால் அந்த மெனெக்கடல் தான் இங்கே பிரச்சினை.  அது என்ன செய்கிறது ஒரு கலைஞனை கதையை  கொலை செய்கிறது. ஒரு வீட்டில் இருக்கும் கடிகாரம் கூட வேறுபட்டு இருக்க வேண்டுமென மெனக்கெடும் அளவில் செல்லும் போது பார்வையாளானுக்கு ஒரு வித அயர்ச்சி தானே ஏற்படும். அவரின் கடைசி 5 படங்களை எடுத்து பாருங்கள். கலை விவகாரங்களில் அது படத்தில் இருந்து அந்நியப்பட்டு இருக்கும். அது ஒருவிதமான அந்நியத்தன்மையை திரைக்கதையில் காட்சியமைப்பில் கொடுக்கும்.

ஒரு அறையில் மட்டுமே கதை, ஒரு மனிதர் மட்டுமே நடிக்கும் கதை என உருவாக்க அமரும் போது அங்கே கதை செய்யப்படும். செய்யப்படும் கதைகளில் பெரிய ஈர்ப்பு இருக்காது.  குணா படத்தில் கமல் ஒரே ஷாட்டில் ஒரு அறையில் சுற்றி சுற்றி தொடர்ந்து பேசி கீழே விழுவார். இது மாறுபட்டு செய்யவேண்டுமென செய்திருக்கமாட்டார்கள். இந்த காட்சி கேட்கிறாது அதனை அப்படி காட்சிப்படுத்தலாம் என வரும் போது அது ரசிகனை ரொம்பவே ஈர்க்கும். அதைவிடுத்து இந்த படத்தில் இப்படி செய்ய போறேன், அடுத்த படத்தில் அப்படி செய்ய போகிறேன் என்றான பின்னர் அங்கே இருப்பது வெறும் வித்தைகாட்டுதல் தான். வித்தை காட்டுதலில் எந்த கலைத்தன்மையும் ரசிக்க வைக்கும் ஈர்ப்பும் இருக்காது.

இப்போது பார்த்திபன் ஏதோ சிங்கிள்ஷாட் படமென அனைத்து இடங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார். உலகளவில் முதல் படம், அவ்ளோ செலவாச்சு இவ்ளோ செலவாச்சு என்கிறார். உண்மையில் அது ஈர்ப்பை உருவாக்கவே இல்லை. மாறாக வேற வேலை இல்லையா என தோன்றுகிறது. 

கதையை உருவாக்குங்கள். அது கேட்கும் எல்லாவற்றையும் கொடுங்கள். ரசிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதைவிட்டுட்டு நான் யார் தெரியுமா என கதை உருவாக்காதீர்கள். கடந்துவிடுவார்கள் உங்களிடத்தில் இருந்து நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...