முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வாதி முதல் பள்ளி மாணவி வரை ஆக்கப்பூர்வமாய் வெற்றி பெற்றிருக்கோமா ?

 தியேட்டர்ல டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கிறோம், இல்லாட்டி ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்றோம். ரெண்டுக்கும் கொஞ்ச காத்திருக்கணும். 

அட , உக்காந்த இடத்தில சொமோட்டால ஆர்டர் போட்ட கூட காத்திருக்கணும். காத்திருந்தாதான் தெரியும் அது முடியுமா முடியாதானு.... வந்தது நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும்.

என்ன சொல்ல வரேன்னா எதுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்திய நீதி ஆணையத்தில் செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ ஒரு தாமதம் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் அங்கே குழுமி அறிக்கை தரவேண்டுமென்ற அடிப்படையே இதற்கு காரணம். 

ஒரு சாலைவிபத்தில் இன்சூரன்ஸ் கேட்டு அலைந்து பாருங்கள் எத்தனை டிபார்மெண்ட் அதில் உள்ளே வருகிறது என தெரியும். அட ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டிப்பாருங்கள் என்னென்ன டிபார்மெண்ட் அதில் உள்ளே வந்து நிக்குமென தெரியும். இவர்கள் எல்லாருமே ஒரே நாளில் அமர்ந்து கையெழுத்திடும் அமைப்பு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மோசமாய் இருந்து கொண்டே இயங்குகிறது. 

ஸ்வாதி என்றொரு பெண் இறந்து போகிறாள். உடனே நாம் கொதிக்கிறோம். அவன வெட்டுங்க, போலீஸ் என்ன செய்யுது, பாதுகாப்பில்லையா என பதட்டம் கொள்கிறோம். உடனே கொன்றவர்களே ஒரு நாடகம் ஆடி, இதோ பாருங்க இவன் தான் பாருங்க என சொல்லி நம் கண் முன்னே அவனை கொன்றுவிடுகிறார்கள். நாமும் சமாதானம் ஆகிறோம். ஆனால் உண்மை காரணம் வேறொன்றாக இருக்கிறது.

இதோ சமீபத்தில் ஒரு மாணவி பள்ளியில் இறந்து போகிறாள். அதன் விசாரணையில் கவனம் செலுத்தாமல் நாம் உடனே பொது புத்தியோடு அவரை கைது செய், இவரை கைது செய் என பதிய ஆரம்பித்தோம். பதட்டப்பட ஆரம்பித்தோம். விளைவு அவர்களே ஒரு நாடகம் ஆடத் தொடங்கிவிட்டர்கள்.

நமது அவசரத்தை அவர்கள் அழகாக பயன்படுத்திக்கொண்டார்கள். நாம் என்ன செய்திருக்க வேண்டும் ? மத்தியரசின் ஜிப்மர் வேண்டாம் அரசு மருத்துவமனை என நகர்ந்திருக்க வேண்டும். மாநில அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். 

நான்கு நாட்கள் அமைதியாக இருந்தோமே... என்றால், நாலு நாள்ள இங்க கோரிக்கை கூட அரசு காதுக்கு போயிருக்காது. அதான் நிஜம். அதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சு இப்ப வழக்கு முழுக்க முழுக்க நீதிமன்றமே நகர்த்தி செல்கிறது.

நாங்க சொல்ற டாக்டர்

நாங்க சொல்றோம் எரிச்சுடு

நாங்க சொல்றோம் கூட்டம் கூடாதேனு... என யாரோ வழிநடத்துகிறார்கள்.



இதான் நடக்குது. கண்டிப்பா இதுல நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை. ஏன்னா நம்ம சிஸ்டம் அப்படி. ஆட்சியாளர்கள் அப்படி. எதிர்கட்சியா இருக்கும் போது ஓடிய பல கால்கள் இப்போது அமைதியாக இருக்க காரணம் அதிகாரம். முன்னால் வெறும் மனிதர்கள், இப்போது அதிகாரம். இந்த அதிகாரத்தோடு போனால் நாம் என்ன கேட்போம் ? இங்க வந்து என்ன செய்ய போறே.. போய் கொலைகாரனை தூக்கில போடுனு சொல்லுவோம் வரலனா என்ன சொல்லுவோம்... எட்டிக்கூட பார்க்கலனு சொல்லுவோம். அவன் என்ன செய்றான் அரசு நடவடிக்கை எடுக்கும்னு பதுங்கிகிறான்.

நம்முடைய அவசரமே கட்சிகளின் அதிகாரங்களில் பதுங்கு குழி ஆகிறது. எது ஒன்றையாவது ஆக்கப்பூர்வமாய் நிதானமாய் யோசித்து அதன் நோக்கத்தை நோக்கி நகர்த்தி வெற்றி பெற்றிருக்கோமா ? அதற்கான காலத்தை கொடுத்திருக்கிறோமா ?

காந்தி ஏன் அமைதியா போராடினார் என்றால்,அந்த  செவிட்டு அதிகாரத்திடம் பேசினால் கேட்க நாளாகும். கேட்க நாளாகிறது என அடிக்க தொடங்கினால் அது உங்கள் வாயை மூடிவிட்டு வேறு ஒரு பட்டம் கொடுத்து முடக்கிவிடும்.அதுதான் சுதந்திர இந்தியாவில் நடந்துகொண்டே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...