முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வாதி முதல் பள்ளி மாணவி வரை ஆக்கப்பூர்வமாய் வெற்றி பெற்றிருக்கோமா ?

 தியேட்டர்ல டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கிறோம், இல்லாட்டி ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்றோம். ரெண்டுக்கும் கொஞ்ச காத்திருக்கணும். 

அட , உக்காந்த இடத்தில சொமோட்டால ஆர்டர் போட்ட கூட காத்திருக்கணும். காத்திருந்தாதான் தெரியும் அது முடியுமா முடியாதானு.... வந்தது நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும்.

என்ன சொல்ல வரேன்னா எதுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்திய நீதி ஆணையத்தில் செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ ஒரு தாமதம் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் அங்கே குழுமி அறிக்கை தரவேண்டுமென்ற அடிப்படையே இதற்கு காரணம். 

ஒரு சாலைவிபத்தில் இன்சூரன்ஸ் கேட்டு அலைந்து பாருங்கள் எத்தனை டிபார்மெண்ட் அதில் உள்ளே வருகிறது என தெரியும். அட ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டிப்பாருங்கள் என்னென்ன டிபார்மெண்ட் அதில் உள்ளே வந்து நிக்குமென தெரியும். இவர்கள் எல்லாருமே ஒரே நாளில் அமர்ந்து கையெழுத்திடும் அமைப்பு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மோசமாய் இருந்து கொண்டே இயங்குகிறது. 

ஸ்வாதி என்றொரு பெண் இறந்து போகிறாள். உடனே நாம் கொதிக்கிறோம். அவன வெட்டுங்க, போலீஸ் என்ன செய்யுது, பாதுகாப்பில்லையா என பதட்டம் கொள்கிறோம். உடனே கொன்றவர்களே ஒரு நாடகம் ஆடி, இதோ பாருங்க இவன் தான் பாருங்க என சொல்லி நம் கண் முன்னே அவனை கொன்றுவிடுகிறார்கள். நாமும் சமாதானம் ஆகிறோம். ஆனால் உண்மை காரணம் வேறொன்றாக இருக்கிறது.

இதோ சமீபத்தில் ஒரு மாணவி பள்ளியில் இறந்து போகிறாள். அதன் விசாரணையில் கவனம் செலுத்தாமல் நாம் உடனே பொது புத்தியோடு அவரை கைது செய், இவரை கைது செய் என பதிய ஆரம்பித்தோம். பதட்டப்பட ஆரம்பித்தோம். விளைவு அவர்களே ஒரு நாடகம் ஆடத் தொடங்கிவிட்டர்கள்.

நமது அவசரத்தை அவர்கள் அழகாக பயன்படுத்திக்கொண்டார்கள். நாம் என்ன செய்திருக்க வேண்டும் ? மத்தியரசின் ஜிப்மர் வேண்டாம் அரசு மருத்துவமனை என நகர்ந்திருக்க வேண்டும். மாநில அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். 

நான்கு நாட்கள் அமைதியாக இருந்தோமே... என்றால், நாலு நாள்ள இங்க கோரிக்கை கூட அரசு காதுக்கு போயிருக்காது. அதான் நிஜம். அதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சு இப்ப வழக்கு முழுக்க முழுக்க நீதிமன்றமே நகர்த்தி செல்கிறது.

நாங்க சொல்ற டாக்டர்

நாங்க சொல்றோம் எரிச்சுடு

நாங்க சொல்றோம் கூட்டம் கூடாதேனு... என யாரோ வழிநடத்துகிறார்கள்.



இதான் நடக்குது. கண்டிப்பா இதுல நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை. ஏன்னா நம்ம சிஸ்டம் அப்படி. ஆட்சியாளர்கள் அப்படி. எதிர்கட்சியா இருக்கும் போது ஓடிய பல கால்கள் இப்போது அமைதியாக இருக்க காரணம் அதிகாரம். முன்னால் வெறும் மனிதர்கள், இப்போது அதிகாரம். இந்த அதிகாரத்தோடு போனால் நாம் என்ன கேட்போம் ? இங்க வந்து என்ன செய்ய போறே.. போய் கொலைகாரனை தூக்கில போடுனு சொல்லுவோம் வரலனா என்ன சொல்லுவோம்... எட்டிக்கூட பார்க்கலனு சொல்லுவோம். அவன் என்ன செய்றான் அரசு நடவடிக்கை எடுக்கும்னு பதுங்கிகிறான்.

நம்முடைய அவசரமே கட்சிகளின் அதிகாரங்களில் பதுங்கு குழி ஆகிறது. எது ஒன்றையாவது ஆக்கப்பூர்வமாய் நிதானமாய் யோசித்து அதன் நோக்கத்தை நோக்கி நகர்த்தி வெற்றி பெற்றிருக்கோமா ? அதற்கான காலத்தை கொடுத்திருக்கிறோமா ?

காந்தி ஏன் அமைதியா போராடினார் என்றால்,அந்த  செவிட்டு அதிகாரத்திடம் பேசினால் கேட்க நாளாகும். கேட்க நாளாகிறது என அடிக்க தொடங்கினால் அது உங்கள் வாயை மூடிவிட்டு வேறு ஒரு பட்டம் கொடுத்து முடக்கிவிடும்.அதுதான் சுதந்திர இந்தியாவில் நடந்துகொண்டே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...