முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களது அன்பு எனும் பட்டாம்பூச்சி நம்பிக்கையாக எப்படி பறக்கிறது?

இங்கே எல்லாருக்குமே அன்புங்கிறது எப்போதும் பேசு பொருள் தான். அது பாலினத்துக்குள்ளேயாக இருந்தாலும்  சரி, எதிர்பாலினங்களுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி அன்பு என்ற வார்த்தை பயன்படுத்தியே வருவோம். 

அன்புடையார் எல்லாம் தமக்குரியர் என தமிழ் கிழவன் சொல்லியிருக்கிறான்.

எங்கே அன்பு இருக்குனு சொல்லிட்டிங்களோ அதுக்கு பின்னாடியே நம்பிக்கையும் வந்துடும். ரெண்டும் இரண்டு பக்கங்கள். ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்லை. 

நான் ஏதோ ஒரு உறவில அன்பா இருக்கேன்னா அங்கே அவங்களுக்கு நம்பிக்கையாவும் இருக்கேனு அர்த்தம். எங்கே உங்க அன்பானவங்க லிஸ்ட் எடுங்க… அவங்கள் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை கவனிங்க…. ரெண்டும் ஒன்னுபோல இருக்கும். இருந்தா அன்பில் நிறைந்து இருக்கோம்னு அர்த்தம்.

இல்ல நம்பிக்கை இருக்கிற மாதிரி தெரியல. அடிக்கடி வெரிபிகேஷன் என்கொயரி எல்லாம் நடக்குதுன்னா அங்க அன்பே இல்லைனு சொல்லுவேன். ஆனா அதுக்கு அவங்க ஒன்னு சொல்லுவாங்க… அதாவது நான் கொஞ்சம் பொசசிவ்னு. அதுனால இப்டி செய்றேன்னு.  இதுக்கு தமிழ்ழ உடமையாக்குதல்னு பேரு. ஒரு பொருளை உடமையாக்க முடியும்.  ஒரு உயிர எப்படி முடியும் ? ஒரு உயிரின் அன்பு என்பது பட்டாம்பூச்சி மாதிரி. அது பறக்கும், உங்க அன்பும் நம்பிக்கையும் அடர்த்தியா இருந்தா மீண்டும் வந்து அமரும். இல்லாட்டி உக்காந்த தடம் கூட இல்லாம பறந்து போகும். இவ்ளோதான். 

இல்லயில்ல அன்பெல்லாம் கொட்டிகிடக்கு ஆனாலும் நம்பிக்கையில்லைனு அடிக்கடி கேள்விகள் மூலமாக அன்பை வாங்க முயற்சித்தால் அங்கே அன்பு போல ஒன்னும் அழகா நடிச்சிட்டு இருக்கும். ஏன்னா உங்களுக்குதான் நம்பிக்கையே இல்லையே…. நம்பிக்கை இல்லாட்டி அங்கே ஒன்னுமே இருக்காது. 



மேலே தூக்கி எறியும் குழந்தையின் கண்களை கவனியுங்கள்… அதில் அன்பு பொங்கி வழியும்… கீழே இருக்கும் அந்த அன்பு தாங்கி பிடிக்கும்னு நம்பிக்கை அந்த பேரன்பை கொடுக்கும். என்றேனும் அந்த நம்பிக்கையை பொய்யாக்கி தவறவிட்டுவிட்டால் மீண்டும் அதே நிகழ்வில் கண்கள் முழுக்க பயம் தெரியும். அந்த பயம் உங்களை எதுவும் செய்ய விடாது.

அன்பாக இருங்கள். அதன் பொருள் அந்த உயிரின் மீது நம்பிக்கையாக இருக்கிறேன் என்பதாகவே இருக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...