முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களது அன்பு எனும் பட்டாம்பூச்சி நம்பிக்கையாக எப்படி பறக்கிறது?

இங்கே எல்லாருக்குமே அன்புங்கிறது எப்போதும் பேசு பொருள் தான். அது பாலினத்துக்குள்ளேயாக இருந்தாலும்  சரி, எதிர்பாலினங்களுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி அன்பு என்ற வார்த்தை பயன்படுத்தியே வருவோம். 

அன்புடையார் எல்லாம் தமக்குரியர் என தமிழ் கிழவன் சொல்லியிருக்கிறான்.

எங்கே அன்பு இருக்குனு சொல்லிட்டிங்களோ அதுக்கு பின்னாடியே நம்பிக்கையும் வந்துடும். ரெண்டும் இரண்டு பக்கங்கள். ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்லை. 

நான் ஏதோ ஒரு உறவில அன்பா இருக்கேன்னா அங்கே அவங்களுக்கு நம்பிக்கையாவும் இருக்கேனு அர்த்தம். எங்கே உங்க அன்பானவங்க லிஸ்ட் எடுங்க… அவங்கள் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை கவனிங்க…. ரெண்டும் ஒன்னுபோல இருக்கும். இருந்தா அன்பில் நிறைந்து இருக்கோம்னு அர்த்தம்.

இல்ல நம்பிக்கை இருக்கிற மாதிரி தெரியல. அடிக்கடி வெரிபிகேஷன் என்கொயரி எல்லாம் நடக்குதுன்னா அங்க அன்பே இல்லைனு சொல்லுவேன். ஆனா அதுக்கு அவங்க ஒன்னு சொல்லுவாங்க… அதாவது நான் கொஞ்சம் பொசசிவ்னு. அதுனால இப்டி செய்றேன்னு.  இதுக்கு தமிழ்ழ உடமையாக்குதல்னு பேரு. ஒரு பொருளை உடமையாக்க முடியும்.  ஒரு உயிர எப்படி முடியும் ? ஒரு உயிரின் அன்பு என்பது பட்டாம்பூச்சி மாதிரி. அது பறக்கும், உங்க அன்பும் நம்பிக்கையும் அடர்த்தியா இருந்தா மீண்டும் வந்து அமரும். இல்லாட்டி உக்காந்த தடம் கூட இல்லாம பறந்து போகும். இவ்ளோதான். 

இல்லயில்ல அன்பெல்லாம் கொட்டிகிடக்கு ஆனாலும் நம்பிக்கையில்லைனு அடிக்கடி கேள்விகள் மூலமாக அன்பை வாங்க முயற்சித்தால் அங்கே அன்பு போல ஒன்னும் அழகா நடிச்சிட்டு இருக்கும். ஏன்னா உங்களுக்குதான் நம்பிக்கையே இல்லையே…. நம்பிக்கை இல்லாட்டி அங்கே ஒன்னுமே இருக்காது. 



மேலே தூக்கி எறியும் குழந்தையின் கண்களை கவனியுங்கள்… அதில் அன்பு பொங்கி வழியும்… கீழே இருக்கும் அந்த அன்பு தாங்கி பிடிக்கும்னு நம்பிக்கை அந்த பேரன்பை கொடுக்கும். என்றேனும் அந்த நம்பிக்கையை பொய்யாக்கி தவறவிட்டுவிட்டால் மீண்டும் அதே நிகழ்வில் கண்கள் முழுக்க பயம் தெரியும். அந்த பயம் உங்களை எதுவும் செய்ய விடாது.

அன்பாக இருங்கள். அதன் பொருள் அந்த உயிரின் மீது நம்பிக்கையாக இருக்கிறேன் என்பதாகவே இருக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...