முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனியும் இந்தியாவின் மன்னராட்சி வரலாறு தெரியாமல் பொய்யாக கொண்டாடதீர்கள்

இயல்பாகவே நமக்கு தற்பெருமை அதிகம். ஒரு காலத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி என்றே படங்கள் வரும். அது மக்களுக்கு அறிவினை கொடுத்தது. இன்று மன்னராட்சி எப்படி இருந்தது தெரியுமா என கிராபிக்ஸ் படங்களை கொடுத்து முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை குழுவை வழி நடத்தினார்கள். பாகுபலி படத்தில் வசனம் வருமே “ நூறடி சிலை சில நூறு பேரையாவது பலிவாங்காதா “ என்ற வசனமே மன்னர்கள் வசனம். ஒருவேளை பாகுபலி மன்னராக வந்தால் அவன் பல்வாள் தேவன் போல தன் சிலையை வைக்கமால் இருப்பான், ஆனால் கோவில் கட்டுகிறேன் பலிகொடுப்பான். இதுதான் மன்னர்கள் ஆட்சி நிலை.  

சிலப்பதிகாரத்தில் ஒரு வியாபாரியின் மகன் திருமணத்தில் மன்னர் மூன்று நாட்கள் அமர்ந்திருப்பார். அப்பவே கார்ப்ரேட் அடிமைகள் தான் போல மன்னர்கள். எழுதியது சமணம் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனிய வாடை கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களை தீ எரிக்கலாம் என கோவலன் மிசஸ் சாபம் கொடுப்பார்கள்.

அதிலும் தமிழ்நாட்டு மன்னர்கள் கொஞ்சம் காமெடி பீஸ் தான். வடதிராவிட மன்னர்ககளுக்கு வெளியில் இருந்து ஊடுருவல் நடந்தபடியே இருந்தது. அவர்கள் எதிர்த்து சண்டையிட்ட ஊடுருவல் மன்னர்கள் அதிகம். ஆனால் இங்கே கதையே வேற. கொன்னது பூரா ஒரே மொழி மக்கள் தான். சோழனுக்கு பாண்டியன் ஆகாது, பாண்டியனுக்கு சோழன் ஆகாது. இவனுக்கு ரெண்டு பேருக்கும் சிறுசிறுமன்னர்கள் ஆகாது. கூடவே பழங்குடியினரை அவர்கள் தம் ஆட்சியாளர்களை கொன்ற கதையெல்லாம் மிஷனரிகள் கூட செய்யாத கொடூரங்கள்.

வீரதீர சோழன் தன் அண்ணனை கொன்றவர்கள் முன் மண்டியிட்டு ஊரைவிட்டு அனுப்பிய வரலாறு இன்றும் கல்வெட்டுதான். வேண்டுமானால் ஊரைவிட்டு வெளியே அனுப்புவது பெரிய தண்டனை என மோடி போல வடைசுடலாம். ஆனால் நிஜம் பார்ப்பனிய மனு அடிமைதனமே. குடவோலை முறையிலும் எல்லாருக்கும் வாக்கு இல்லை. அங்கேயும் வர்ணாசிரம தர்மம் தான்.

தஞ்சை பெரிய கோவில் பெரிய கட்டிட கலைதான். இந்தியளவில் அது இன்று வரையிலும் ஆச்சர்யம் தான். ஆனால் அது பாண்டியர்களை சுரண்டி அடிமையாக்கி கட்டிய ஒன்றுதான். சோழத் தமிழர்களை தெலுங்க நாயக்கர்களோடு சேர்ந்து பின்னர் வந்த பாண்டிய தமிழர்கள் அழித்தார்கள். பிறகு அந்த இன்று உலகமோ கொண்டாடும் ஆலயத்தை, தமிழர்களின் பொக்கிஷத்தை மூடிவிட்டு சென்றார்கள். பாண்டியர்கள் ஆட்சிகாலம் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் நாயக்கர் ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளப்பட்டது. 

பிற்கால பாண்டியர்கள், சோழர்கள் எல்லாருமே பார்ப்பனிய அடிமைகள்தான். இதில் இவர் அதிகம் அவர் குறைவு என்றுவேண்டுமானல் சொல்லலாம். மற்றபடி எல்லாம் அடிமைகள் தான். பெரும்பாலான மக்களை வதைத்துக்கொண்டு, சிலரை மட்டும் அண்டி அனுசரித்து வாழ்ந்தவர்கள் தான் நீங்கள் கிராபிக்சில் பார்த்து கைதட்டும் மன்னர்கள். தன் கனவு ஆலயத்தை உருவாக்க சுங்கவரியை கொண்டுவந்தார்கள். இப்போதும் நாம் டோல்கேட் என கட்டிக்கொண்டிருக்கிறோம். மன்னராட்சியின் நீட்சியான ஜமின் ஆட்சியில் கூட, விவேகானந்தர் அமெரிக்கா சென்று இந்து மதம் பற்றி பெருமை பேச பணம் கொடுத்தவர்கள், உள்ளூரில் தன் மக்களே கோவிலுக்கு வந்தால் விரட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் மன்னர் பரம்பரை தான். இதுதான் மன்னர்கள் வரலாறு,

இன்று நீங்கள் வாழும் வாழ்வு உங்கள் தாத்தாவின் கனவு வாழ்க்கை. அதனை கொடுத்தது ஜனநாயகமே. மன்னராட்சி இல்லை. மன்னாட்சியில் ஒரு வில்லு வண்டி வாங்க, வீட்டில் ஜன்னல் வைக்க, முற்றம் வைக்க எல்லாம் நீங்கள் மன்னரிடம் மண்டியிட்டு கேட்க வேண்டும். மன்னர் பார்ப்பனர்களிடம் கேட்பார். இதுதான் நிஜம். 

மன்னர்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பொய்யாக கொண்டாடாதீர்கள். காரணம் மன்னர்கள் வரலாறு என்பது ஜெயாவின் புகழ்பாடிய நமது எம்ஜியார், மோடியின் புகழ் பாடும் விஜயபாரதம், ஸ்டாலினின் புகழ் பாடும் முரசொலி வகையறாதான். வரலாறு வேறு.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...