முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கே கிடைக்காத வசதி, வாய்ப்பு...அத வச்சி என்ன செஞ்கிட்டுருக்கோம்!


இந்த ஒரு மாசத்தில நாம ஒரு தடவையாச்சும் பொன்னியின் செல்வன்ங்கிற பெயரை உச்சரிச்சு இருப்போம். அதை படிச்சிருக்கோம் படிக்கல,  புடிக்கும் புடிக்காதுங்கிறத தாண்டி பேசியிருப்போம்.


நாம பொது சமூகத்தோட  இணைச்சிருக்கோம். இணைக்கப்பட்டிருக்கோம்னு தெளிவா தெரியுது. உடனே ஒரு விசயம் பேசு பொருள் ஆகுது. ஒரு காலத்தில் எம்.ஜியார் படமோ சிவாஜி படமோ அட அரசின் ஏதோ ஒரு அறிவிப்போ வந்தா தண்டோட போடணும்( தற்போது தடை செய்யப்பட்டுள்ளது)... அது பரவ எப்படியும் ஒரு வாரமாகும். இது நகரத்திற்கு. அட எம்.ஜியார் இறந்த செய்தி தமிழ்நாடு முழுக்க  அதாவது கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர  24 மணி நேரத்துக்கு மேல ஆச்சு.

இன்னைக்கு அப்படியில்லை. சுடச்சுட இன்னும் சொல்லபோனா மாவு ரெடி செய்யலாமானு அவங்க பேசும் போதே நாம தெரிஞ்சுக்கிறோம். 

அட, நானெல்லாம் சாதரண ஆள், என்னோட நண்பர் குழுகிட்ட ஒரு வயலின் வாங்கலாம்னு இருக்கேனு சொல்றேன், அது பற்றி பேசுகிறேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு வயலின் வாங்க  சொல்லி கூகுளில் தானே விளம்பர தகவல் வருது.  பேஸ் புக் வந்தா.. வயலின் வகுப்பு விளம்பரம் வருது.

உலகம் இவ்ளோதான். இனி இப்படித்தான். ஒரு வகையில நல்லது. என்ன ஒரு ஆறுதல்னா.. இது கூடிய சீக்கிரம் போரடிச்சு போகும். ஏன்னே எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்க்கையில சுவாரசியம் போய்டும்.

முன்னாடி டாம் & ஜெர்ரியை குழந்தைகள் டிவியில் அப்டி பார்ப்பார்கள். எங்கயாச்சும் கிளம்பிட்டு இருக்கும் போது டிவியில வந்துட்டா அப்டியே உக்காந்துடுவார்கள். இப்ப  அப்டியில்லை.நினைச்ச நேரத்தில அத பார்க்கும் வசதி இருக்கு. இது நல்லதா கெட்டதானு கேட்டா.. காலத்திற்கு அறிவியலுக்கும் இயற்கைக்கும் அதெல்லாம் தெரியாது. அது வேலைய அது செஞ்சுட்டே இருக்கும். முடிஞ்சா வாழ்ந்துக்கோ. இல்ல ஓரமா உக்காந்து அழு. இதான் தாரக மந்திரம்.

இப்ப நாம செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னு தான். இப்ப இருக்கிற இந்த வசதியெல்லாம் ஒரு காலத்தில  நம்ம (?) கடவுளுக்கே (??) கிடைக்காத வசதிகள் வாய்ப்புகள். அத வச்சி என்ன செஞ்சோம்ங்கிறது மட்டும் தான் நம்மோட வாழ்க்கை அறிவு இருக்கு.

முன்னோர்கள் முட்டாள்கள் இல்லைனு  இன்னைக்கு கொஞ்ச பேரு உயர்த்தி பிடிக்கிறாங்க. ஆனா நம்மள முன்னோர தூக்கி பிடிக்க அந்த கொஞ்ச பேரும் இருக்கமாட்டாங்க போல.. ஏன்னா அறிவியலையும் காலத்தையும் அப்படித்தான் பயன்படுத்திட்டு வரோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...