முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலினங்கள் அறிவியல் உடைத்து...காலம் ஏற்கும் சூழல் என்றோ?

 பாலினங்களில் நமக்கு தெரிந்தது ஆண் பெண் மட்டுமே. பிறகு திருநங்கை திருநம்பி என்ற மாற்றுப்பாலினங்கள் நமக்கு தெரியவந்தது. இப்போது அவர்களுக்கான உரிமைகள் குறித்து பேசிவருகிறோம். தன்பாலின ஈர்ப்பு குறித்தும் இப்போது பேச தொடங்கி இருக்கிறோம். ஆனால் பாலினங்கள் இத்தனை தானா ? என்றால் இல்லை என்கிறது அறிவியல். இவையெல்லாம் காலம் காலமாக இருந்தாலும் அறிவியல் இப்போது அதனை வகை படுத்துகிறது. ஆனால் மத நிர்வாக அரசுகளே அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. அது அப்படித்தான் தன் மத கொள்கைகளுக்கு  பாதிப்பு என கள்ள மெளனம் சாதித்து வரும். ஆனால் அறிவியல் உடைக்கும். காலம் ஏற்கும்.



சமீபத்தில் தமிழக அரசு ஒரு அட்டவணையை வெளியிட்டது. அதில் பலவகையான பாலினங்கள் இருந்தன. சிலர் அதில் சிரித்திருந்தார்கள். பலர் இதெல்லாம் இப்ப தேவையா என வழக்கம் போல நடுநிலையாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாய் அதனை யாரும் புரியவில்லை என்றே நினைக்கிறேன்.

அவன் ஆண். ஆண் தன்மையில் தான் இருக்கிறான். வாழ்கிறான். ஆனால் பெண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் ஆண்களையும் அவன் நாடமாட்டான். திருமண தாம்பயத்தில் பெரிய விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு வாழ்ந்திருப்பான். அவனுக்கு குழந்தை இருக்கும்.

அவள் பெண். பெண் தன்மையில் தான் இருக்கிறாள். வாழ்கிறாள். ஆனால் ஆண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் பெண்களை விரும்ப மாட்டாள். திருமண தாம்பயத்தில் ஈடுபட விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு வாழ்ந்திருப்பாள். அவளுக்கு குழந்தை இருக்கும்.

இந்த இருவரும் சமூக பொறுப்பு, மத கடமை, என திருமணம் செய்திருப்பார்கள். ஒருவேளை இந்த இருவரும் ஜோடியாக திருமணம் செய்திவிட்டால் அது நல்ல வாழ்கை. காரணம் இருவருமே வெளிப்பார்வைக்கு ஆண் பெண். ஆனால் அதன் தன்மையில் ஈடுபாடில்லை.  மாறாக இது போன்ற பெண் அல்லது ஆண் சாதரணமான இணையை தேடினால் என்ன ஆகும் வாழ்க்கை. அதாவது வாரம் இரண்டும் முறையாவது செக்ஸ் தேடும் இணையர் என்றால் என்ன ஆகும் வாழ்க்கை ?

சரி, இது போன்ற பாலினங்கள் இப்போது தானா என்று தேடினால் காலம் காலமாய் இருந்திருக்கிறது. ஆனால் குடும்ப கெளரவம், பொம்பள இப்படி பேசலாமா ? இப்படி சொன்னா ஆம்பளைய என்ன நினைப்பாங்க? கலாச்சாரம் என பொத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் கல்வி கேட்க சொல்கிறது. உனக்கு என்ன பிரச்சினை ? உண்மையில் இது பிரச்சினை இல்லை. இது ஒரு அடிப்படை படைப்பு. மாற்றுப்பாலினமாக தன்னை அறிவித்துக்கொண்டவர் வெளியில் தெரிவார்கள். ஆனால் இந்த மாறுபட்ட பாலினம் அவர்களாக சொன்னால் தான் உண்டு. அவர்கள் திருமணம் குறித்து பேசத்தொடங்கும் போது எனக்கு விருப்பமில்லை என்பார்கள். ஆனால் விட்டுவிடுமா கலாச்சாரம்… பண்ஃபாடு… பேசி மிரட்டி அழுது திருமணம் செய்து வைக்கும்.

பின்னர் இது அப்பாற்பட்ட உறவுகளில் வந்து நிற்கும். அல்லது நீதிமன்றங்களில் வந்து நிற்கும். திருமணம் தான் ஒரு ஆண் முழுமையாகிறான், பெண் முழுமையாகிறாள் என்ற மனப்பாங்கு இருக்கும் வரை இது தொடரும். குழந்தை தான் நீ ஆண் என்பதை சொல்லும் எனும் சமூகத்தில் இது இப்படியே தொடரும்.  இதெல்லாம் புரியவே நம் சாதீய சமுகத்திற்கு  இன்னும் ஆண்டுகள் ஆகும்.

இது தவிர இன்னும் சில பாலின தன்மைகள் இருக்கிறது.  அது தன் உடம்பை அமைப்பு அருவெறுப்பாய் உணரும் பாலினம். இது இயல்பாகவே பெண்கள் அதிகம் இந்த பாலினத்தில் வருகிறார்கள்.  ஏன் காரணம் என்றால் அதற்கான விடை,  மதப்புத்தங்களில் சமூக சடங்குகளில் பண்பாடுகளில் சிக்கியிருக்கிறது. அதனை உணர நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

பாலினங்களில் பல்வேறு வகை இருக்கிறோம். இதனையெல்லாம் புரிந்து இதையெல்லாம் பேசவேண்டிய சமூகமாகிய நாம்,ரொம்பவே சுருங்கி இருக்கிறோம். பாலினம் மாற்றுபாலின பாலியியல் வேட்கையை பற்றி மட்டுமே பேசுகிறோம். காரணம் அப்போது தான் நாம் வெளிப்படுவோம் என நம்புகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...