முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலினங்கள் அறிவியல் உடைத்து...காலம் ஏற்கும் சூழல் என்றோ?

 பாலினங்களில் நமக்கு தெரிந்தது ஆண் பெண் மட்டுமே. பிறகு திருநங்கை திருநம்பி என்ற மாற்றுப்பாலினங்கள் நமக்கு தெரியவந்தது. இப்போது அவர்களுக்கான உரிமைகள் குறித்து பேசிவருகிறோம். தன்பாலின ஈர்ப்பு குறித்தும் இப்போது பேச தொடங்கி இருக்கிறோம். ஆனால் பாலினங்கள் இத்தனை தானா ? என்றால் இல்லை என்கிறது அறிவியல். இவையெல்லாம் காலம் காலமாக இருந்தாலும் அறிவியல் இப்போது அதனை வகை படுத்துகிறது. ஆனால் மத நிர்வாக அரசுகளே அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. அது அப்படித்தான் தன் மத கொள்கைகளுக்கு  பாதிப்பு என கள்ள மெளனம் சாதித்து வரும். ஆனால் அறிவியல் உடைக்கும். காலம் ஏற்கும்.



சமீபத்தில் தமிழக அரசு ஒரு அட்டவணையை வெளியிட்டது. அதில் பலவகையான பாலினங்கள் இருந்தன. சிலர் அதில் சிரித்திருந்தார்கள். பலர் இதெல்லாம் இப்ப தேவையா என வழக்கம் போல நடுநிலையாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாய் அதனை யாரும் புரியவில்லை என்றே நினைக்கிறேன்.

அவன் ஆண். ஆண் தன்மையில் தான் இருக்கிறான். வாழ்கிறான். ஆனால் பெண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் ஆண்களையும் அவன் நாடமாட்டான். திருமண தாம்பயத்தில் பெரிய விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு வாழ்ந்திருப்பான். அவனுக்கு குழந்தை இருக்கும்.

அவள் பெண். பெண் தன்மையில் தான் இருக்கிறாள். வாழ்கிறாள். ஆனால் ஆண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் பெண்களை விரும்ப மாட்டாள். திருமண தாம்பயத்தில் ஈடுபட விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு வாழ்ந்திருப்பாள். அவளுக்கு குழந்தை இருக்கும்.

இந்த இருவரும் சமூக பொறுப்பு, மத கடமை, என திருமணம் செய்திருப்பார்கள். ஒருவேளை இந்த இருவரும் ஜோடியாக திருமணம் செய்திவிட்டால் அது நல்ல வாழ்கை. காரணம் இருவருமே வெளிப்பார்வைக்கு ஆண் பெண். ஆனால் அதன் தன்மையில் ஈடுபாடில்லை.  மாறாக இது போன்ற பெண் அல்லது ஆண் சாதரணமான இணையை தேடினால் என்ன ஆகும் வாழ்க்கை. அதாவது வாரம் இரண்டும் முறையாவது செக்ஸ் தேடும் இணையர் என்றால் என்ன ஆகும் வாழ்க்கை ?

சரி, இது போன்ற பாலினங்கள் இப்போது தானா என்று தேடினால் காலம் காலமாய் இருந்திருக்கிறது. ஆனால் குடும்ப கெளரவம், பொம்பள இப்படி பேசலாமா ? இப்படி சொன்னா ஆம்பளைய என்ன நினைப்பாங்க? கலாச்சாரம் என பொத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் கல்வி கேட்க சொல்கிறது. உனக்கு என்ன பிரச்சினை ? உண்மையில் இது பிரச்சினை இல்லை. இது ஒரு அடிப்படை படைப்பு. மாற்றுப்பாலினமாக தன்னை அறிவித்துக்கொண்டவர் வெளியில் தெரிவார்கள். ஆனால் இந்த மாறுபட்ட பாலினம் அவர்களாக சொன்னால் தான் உண்டு. அவர்கள் திருமணம் குறித்து பேசத்தொடங்கும் போது எனக்கு விருப்பமில்லை என்பார்கள். ஆனால் விட்டுவிடுமா கலாச்சாரம்… பண்ஃபாடு… பேசி மிரட்டி அழுது திருமணம் செய்து வைக்கும்.

பின்னர் இது அப்பாற்பட்ட உறவுகளில் வந்து நிற்கும். அல்லது நீதிமன்றங்களில் வந்து நிற்கும். திருமணம் தான் ஒரு ஆண் முழுமையாகிறான், பெண் முழுமையாகிறாள் என்ற மனப்பாங்கு இருக்கும் வரை இது தொடரும். குழந்தை தான் நீ ஆண் என்பதை சொல்லும் எனும் சமூகத்தில் இது இப்படியே தொடரும்.  இதெல்லாம் புரியவே நம் சாதீய சமுகத்திற்கு  இன்னும் ஆண்டுகள் ஆகும்.

இது தவிர இன்னும் சில பாலின தன்மைகள் இருக்கிறது.  அது தன் உடம்பை அமைப்பு அருவெறுப்பாய் உணரும் பாலினம். இது இயல்பாகவே பெண்கள் அதிகம் இந்த பாலினத்தில் வருகிறார்கள்.  ஏன் காரணம் என்றால் அதற்கான விடை,  மதப்புத்தங்களில் சமூக சடங்குகளில் பண்பாடுகளில் சிக்கியிருக்கிறது. அதனை உணர நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

பாலினங்களில் பல்வேறு வகை இருக்கிறோம். இதனையெல்லாம் புரிந்து இதையெல்லாம் பேசவேண்டிய சமூகமாகிய நாம்,ரொம்பவே சுருங்கி இருக்கிறோம். பாலினம் மாற்றுபாலின பாலியியல் வேட்கையை பற்றி மட்டுமே பேசுகிறோம். காரணம் அப்போது தான் நாம் வெளிப்படுவோம் என நம்புகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...