முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதையறிந்து பணம் ஈட்டுங்கள்...ஈர்க்கப்பட வைத்த நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும்..!

அதிக பணம் நிம்மதிக்கு கேடுங்கிறவன் எல்லாம் பணக்காரானவே இருக்கீங்க... கொடுங்க... வலிக்குதா செரிக்குதா நாங்க அனுபவிச்சு பார்த்து தெரிஞ்சுக்கிறோம்.... 

இது கார்த்திக் சுப்புராஜ் எழுத்துகள். எந்த  ஒரு மத ஆன்மிக சொற்பொழிவ கேட்டாலும்  இப்படி சொல்றானுக.  கோடி கோடியா சம்பாந்திச்சுட்டு இன்னும் சம்பாதிச்சுட்டு இருக்கிறவனும் இதையே சொல்றான். 

ஏன்ன்னா அவன் இடத்துக்கு இன்னொருத்தன் வருதை விரும்பாத எரிச்சலாக இருக்கலாம்.

ஒரு சாமியார் மடத்தில் அவரை அருகில் இருந்து பார்க்க ஒரு தொகை, அடுத்த கட்டம் ஒரு தொகை கடைசி வரை ஒரு தொகை என நிர்ணயிக்கிறார்கள். அந்த கார்ப்ரேட் சாமியோ பணம் பண்ரதுக்கா இங்க வாழ வந்தோம்னு வெக்கமே இல்லாம பேசுறாரு.

ஆடிட்டர் சொல் பேச்சு கேட்டு கார் தேவையா இல்லையானு கூட யோசிக்காம வருசம் ஒரு கார் இறக்கும் ஆசாமிகள் சொல்வார்கள்.... கயிற்று கட்டிலில் கூட உறக்கம், நிம்மதியான வாழ்க்கைனு. 

ஆனா இவனுக எவனுமே பணம் இல்லாம  எதையும் செய்ய மாட்டானுக. ஏன்னா அவனுகளுக்கு தெரியும்.. பணம் எவ்ளோ முக்கியம்னு. 

மாச வாடகை, பிள்ளைக படிப்பு,  தேவையான ஒரு நல்ல பொருளை வாங்க காத்திருக்கும் அவஸ்தை எல்லாமே அவனுகளுக்கு கிடையாது. அதுனால உபதேசம் செய்வான்.

நல்லா புரிஞ்சுகோங்க.. பணம் முக்கியம். அதுக்கான உழைப்பு முக்கியம். நீங்கள் வேலை பார்க்கலாம் சொந்த தொழில்ல இருக்கலாம்... என்ன வேணா இருங்க. ஆனா அந்த உழைப்பின் பின்னால் வரும் பணம் ரொம்ப முக்கியம்.

விருப்பபட்டு கேட்டாதான் இங்கே எதுவும் கிடைக்கும். இதான் பிரபஞ்ச விதி. இன்னொர் வகையில் சொன்னா ஈர்ப்பு விதிதான் பிரபஞ்ச விதி. ஈர்க்கப்படனும் ஈர்க்கப்பட வைக்கனும்.

ஒரு கட்டத்திற்கு பிறகு நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும். அடுத்தடுத்த நிம்மதிய முதல் நிம்மதிய நீங்க தக்கவச்சுக்கிறதுல இருக்கு. 

பணம் மட்டுமே  எல்லாம் என்றாலும் தவறு. பணம் தானே  என்றா அலட்சியமும்  தவறு. 

எவனாச்சும் பணமெல்லாம் முக்கியமில்லை அன்பு தான், அதுதான், இது தான் முக்கியம் என்றால்.... முகத்தை நன்றாக உத்துப்பார்துட்டு வந்து உங்க வேலைபாருங்க.  ஏன்னா அவன் திரும்ப உங்ககிட்ட வந்து ஒரு நாள் நிப்பான். நீங்க உழைங்க. பணத்தை தக்க வைக்க முயலுங்கள். அதன் ஊடான அமைதியை கொண்டு, நிம்மதியை கொண்டு இன்னும் அழகாய் வாழுங்கள்.

Money Vs Peace


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...