முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதையறிந்து பணம் ஈட்டுங்கள்...ஈர்க்கப்பட வைத்த நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும்..!

அதிக பணம் நிம்மதிக்கு கேடுங்கிறவன் எல்லாம் பணக்காரானவே இருக்கீங்க... கொடுங்க... வலிக்குதா செரிக்குதா நாங்க அனுபவிச்சு பார்த்து தெரிஞ்சுக்கிறோம்.... 

இது கார்த்திக் சுப்புராஜ் எழுத்துகள். எந்த  ஒரு மத ஆன்மிக சொற்பொழிவ கேட்டாலும்  இப்படி சொல்றானுக.  கோடி கோடியா சம்பாந்திச்சுட்டு இன்னும் சம்பாதிச்சுட்டு இருக்கிறவனும் இதையே சொல்றான். 

ஏன்ன்னா அவன் இடத்துக்கு இன்னொருத்தன் வருதை விரும்பாத எரிச்சலாக இருக்கலாம்.

ஒரு சாமியார் மடத்தில் அவரை அருகில் இருந்து பார்க்க ஒரு தொகை, அடுத்த கட்டம் ஒரு தொகை கடைசி வரை ஒரு தொகை என நிர்ணயிக்கிறார்கள். அந்த கார்ப்ரேட் சாமியோ பணம் பண்ரதுக்கா இங்க வாழ வந்தோம்னு வெக்கமே இல்லாம பேசுறாரு.

ஆடிட்டர் சொல் பேச்சு கேட்டு கார் தேவையா இல்லையானு கூட யோசிக்காம வருசம் ஒரு கார் இறக்கும் ஆசாமிகள் சொல்வார்கள்.... கயிற்று கட்டிலில் கூட உறக்கம், நிம்மதியான வாழ்க்கைனு. 

ஆனா இவனுக எவனுமே பணம் இல்லாம  எதையும் செய்ய மாட்டானுக. ஏன்னா அவனுகளுக்கு தெரியும்.. பணம் எவ்ளோ முக்கியம்னு. 

மாச வாடகை, பிள்ளைக படிப்பு,  தேவையான ஒரு நல்ல பொருளை வாங்க காத்திருக்கும் அவஸ்தை எல்லாமே அவனுகளுக்கு கிடையாது. அதுனால உபதேசம் செய்வான்.

நல்லா புரிஞ்சுகோங்க.. பணம் முக்கியம். அதுக்கான உழைப்பு முக்கியம். நீங்கள் வேலை பார்க்கலாம் சொந்த தொழில்ல இருக்கலாம்... என்ன வேணா இருங்க. ஆனா அந்த உழைப்பின் பின்னால் வரும் பணம் ரொம்ப முக்கியம்.

விருப்பபட்டு கேட்டாதான் இங்கே எதுவும் கிடைக்கும். இதான் பிரபஞ்ச விதி. இன்னொர் வகையில் சொன்னா ஈர்ப்பு விதிதான் பிரபஞ்ச விதி. ஈர்க்கப்படனும் ஈர்க்கப்பட வைக்கனும்.

ஒரு கட்டத்திற்கு பிறகு நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும். அடுத்தடுத்த நிம்மதிய முதல் நிம்மதிய நீங்க தக்கவச்சுக்கிறதுல இருக்கு. 

பணம் மட்டுமே  எல்லாம் என்றாலும் தவறு. பணம் தானே  என்றா அலட்சியமும்  தவறு. 

எவனாச்சும் பணமெல்லாம் முக்கியமில்லை அன்பு தான், அதுதான், இது தான் முக்கியம் என்றால்.... முகத்தை நன்றாக உத்துப்பார்துட்டு வந்து உங்க வேலைபாருங்க.  ஏன்னா அவன் திரும்ப உங்ககிட்ட வந்து ஒரு நாள் நிப்பான். நீங்க உழைங்க. பணத்தை தக்க வைக்க முயலுங்கள். அதன் ஊடான அமைதியை கொண்டு, நிம்மதியை கொண்டு இன்னும் அழகாய் வாழுங்கள்.

Money Vs Peace


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...