முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்கள் அறியாமலோ அறிந்தோ இந்து சனாதனத்தை கொண்டாடி கொண்டு தான் இருக்கிறீர்கள்..!

 காந்தாரா என்ற படம் பற்றி பலரும் பெருமையாக பேசினார்கள். நானும் சில  கட்டுரைகள் படித்தேன். படம் பார்க்க தயாரான போது இயக்குனரின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. கொஞ்சம் யோசித்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பார்த்தேன். ரொம்பவே யோசித்தேன். நான் யோசித்தது போலவே பலரும் யோசிக்க தொடங்கினார்கள். இப்போது புரிய தொடங்கி இருக்கும் அது டெக்னிகலாக, மிக நேர்த்தியாக நம் தலைக்குள் ஊற்றப்பட்ட விஷம் என்பது. நிற்க.


ஜெகன்மோகன்ரெட்டி எட்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு விசயம் சொன்னார்
“ ஆர்.எஸ்.எஸின் ஆப்ரேஷன் திராவிடம் திட்டம் “ தென்னகத்தை இனி சீர்குலைக்கும். அதனை எதிர்க்க எல்லாரும் ஒன்றினைய வேண்டுமென்றார். பின்னாளில் அவரும் அதில் ஒரு கண்ணியானர்.  சந்திரசேகரரெட்டி கிட்டதட்ட இதே கருத்தை வேறு ஒருதொனியில் சொன்னார். தென்னிந்தியாவை பலி கொடுத்து அதன் பொருளாதார அரசியல் சுதந்திரங்களை திருடி வடக்கே வாழ வைக்க முயல்கிறார்கள் என்றார்.

கூர்ந்து அரசியலை கவனியுங்கள். காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் ஓரளவு இருக்கிறது. இது போக அங்கே ஒன்று அல்லது இரண்டு மாநில கட்சிகள் இருக்கும். பிஜேபி என்பதே கிடையாது பல மாநிலங்களில். திடிரென ஊடகங்கள் ஒரு மாநில ஆட்சியை ஆஹா ஒஹோ என்கிறது. தொடர்ந்து பேசுகிறது. எலைட் பீப்பிள் அதனை தொடர்ந்து ஆமோதித்து பேசுகிறார்கள். 2ஜி ஆதர்ஷ் , ஊழலை அறவே ஒழிப்போம் கருப்பு பணம் மீட்பு என ஏதோ ஏதோ பேசுகிறார்கள். பெட்ரோல் விலை பாதியாக குறையும் என்கிறார்கள். டாலர் ரேட் குறையும் என்கிறார்கள். பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வருகிறது. சினிமா நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள். ஏற்கனவே இருந்த சில கட்சிகளை இவர்கள் வாங்கி நடத்துகிறார்கள். கூடவே  இவர்கள் மூன்றாவதாய் ஒரு கட்சி தொடங்குகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட செலபிரட்டிகள் பிஜேபியை ஆதரிக்கிறார்கள். அல்லது கொண்டாடுகிறார்கள்.  சினிமாவில் தீடிரென பக்தி படங்கள் அல்லது பார்ப்பனிய சிந்தனைகள்  அதிகம் வருகிறது. அல்லது இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் எங்களுக்கு ( ?) எதுவும் செய்யவில்லை என்ற கருத்தை அடிப்படையாக கொண்டவர்கள்  வருகிறார்கள். கடந்த 6 மாதங்களில் டிஸ்கவரி சேனலில் அதிகம் இடம்பெற்றது ராமர் பாலம் என்ற கட்டுக்கதை. அதுவும் சேனல் இது எங்கள் பொறுப்பில்லை என்ற சொல்லிய பின்னர் வரும் பொய்கள். நேஷனல் ஜாக்ரபி சேனலில் காசியின் புனிதத்துவம் என்ற பகுதி வந்துகொண்டே இருக்கிறது.

சமீபத்தில் தென் தமிழகத்தில் கடைக்கோடி ஊரில் ஒரு குலதெய்வம் ஆலயம் புதுப்பிக்கபட்டிருக்கிறது. அந்த ஆலயத்தில் இருப்பது ஒரு அருவாள் மற்றும் பூடம் மட்டுமே. ஆனால் எடுத்து கட்டியதில் விநாயகர், விஷ்னு, பெருமாள் இல்லாம் இடம்பெற்றிருக்கிறது. ஆலயத்தின் மேலே வடக்கே எல்லா ஆலயங்களிலும் பறக்கும் காவி கொடி பறக்கிறது.
திட்டமிட்டு நகர்கிறார்கள். காந்தாரா படமில்லை. ஒரு அறிவுரை. பன்றி வாகனமாக வணங்க சொல்லும் ஒரு அறிவுரை. நிலகுடிகளை வெளியேற்றி அரசிடம் ஒப்படையுங்கள் என்ற அறிவுரை. இந்தியாவில் காடுகள் பற்றியெறிந்த வரலாற்று புள்ளி விபரங்களை தேடினால் அவர்களை விரட்டிய பின்னர் தான் அது நடந்தது. கேரளாவில் பழங்குடியினரை கீழே இறக்கிய பின்னர் அங்கே காட்டு ரிசார்ட் சுற்றுலா தொழில்  களை கட்டியது. தமிழ்நாட்டில் பழங்குடியினரை  இறக்கிய பின்னர் வேதாந்தா அங்கே காலுன்றிவிட்டது.

அரசியல் ஊடகம் சினிமா குலதெய்வங்கள் இந்தியா குறித்த பெருமிதங்கள் எல்லாவற்றிலும் அவர்கள் இந்து சனாதனத்தை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். திப்பு சுல்தான் பெயரை தாங்கிய ஒரு புகை வண்டியின் பெயர் நீக்கப்பட்டு பிரிட்டிஷ் கம்பெனிக்கு பணிந்து வரிகட்டியவர்கள் பெயர்கள் கொண்டாடப்படுகிறது.   யோசிக்கவே தெரியாத வாட்சப் வரலாற்று பக்தர்கள், மன்னர்கள் பெருமித வாயர்கள், சாதி பெருமையாளர்கள் எல்லாரும் அதனை அவர்களை அறியாமலோ அறிந்தோ கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்.

இதையெல்லாம் அறிந்த சிலரும், சொல்ல வெட்கமாக இருக்கிறது, இருந்தாலும் சொல்கிறேன் எதிர்க்க துணிவில்லாமல் இருக்கும் நிலைக்கான காரணம் எதிரி கூட்டம் பெரிது என்பதல்ல. நாங்கள் இன்னும் ஒன்று சேரவில்லை என்பதனால்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மருத்துவக் கனவை யார் காணலாம்..? NEETன் சித்திரம்

தமிழ்நாட்டில் “பிளைண்ட்” பாலிடிக்ஸ் அதிகம். தனக்கு பிடித்தவர் சொல்கிறார் அதுதான் வேதவாக்கு என நம்பி பேசி அலையும் அரசியல். நீட் தேர்வு : நீட் தேர்வால் ஊழல் ஒழிப்பு, ஏழைகள் படிக்கலாம், கல்லூரிகளில் லஞ்சம் வாங்க முடியாது என உருட்டுவார்கள். கொஞ்சம் நெருங்கி அடுத்தடுத்து கேள்வி கேட்டால் தப்பி ஓடுவார்கள் இந்த மூடர்கள். நாம் கொஞ்சம் பேசிப்பார்ப்போம். நீட் தேர்வும், ஐ.ஏ.எஸ் தேர்வும் ஒன்றா ? இல்லை. ஐஏஎஸ் தேர்வு வேலைக்கானது. நீட் தேர்வு படிப்புக்கானது. சரி. நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் ஒன்றா ? அதுவும் இல்லை. ஜேஇஇ என்பது குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே சேருவேன், அதுதான் தகுதி, தரம், எனக்கான வாய்ப்பு என்பவர்களுக்கான தேர்வு. அதுவும் நீட்டும் ஒன்றல்ல. எனில் நீட் யாருக்கு ? நீட் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிக்க வேண்டும் என்பவர்களுக்கான தேர்வு. இந்தியாவில் உள்ள மருத்துவம் படிக்க விரும்பும் எவரும் இந்த தேர்வை எழுத வேண்டும். ஏன் எழுதினால் என்ன ? ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு படிப்பு இருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்ட படிப்புகள் இருக்கும் போது ஒரு படிப்பை அடிப்படையாக கொண்டு தேர்வு ...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...