முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாடிஸ் லீட்டில் பிரின்ஸை விட தனித்த சூட்சமமான உறவு மம்மிஸ் எம்பரர்..!

 


நம்ம எல்லாருக்கும் “டாடிஸ் பிரின்சி(Dad's little princess)” பத்தி தெரியும். அதே பிரின்சி திருமணத்திற்கு பிறகு அம்மாவின் பின்னாலே அலையும் உளவியலும் நமக்கு புரியும். ஆனாலும் அவர் எப்போதும் டாடியின் பிரின்சியாகவே தொடர்வார் தன் காலம் முழுவதும். அதை அவளோட கணவனால் கூட ஒன்றும் செய்ய முடியாது. இது நமக்கு தெரிந்த உறவு. நமக்கு தெரியாத இன்னொரு உறவு இருக்கிறது. அது #மம்மிஸ்_எம்பரர். தன் மகனை ராஜாவாக வளர்க்கும் மம்மி(அம்மா)களின் உளவியல் அது. இன்னும் சொல்லப்போனால் அது டாடிஸ் பிரின்சியை விட ரொம்ப நுட்பமானது. தனித்துவமனாது. சூட்சமமானது.


வெளியில் இருந்து பார்க்கும் டாடி - பிரின்சி போல இது தெரியாது.

அதில் அப்பா சொன்னால் மகள் கேட்பாள்.

மகள் பேச்சுக்கு அப்பா மறுக்கமாட்டார். அப்பாவின் பார்வை பார்த்து மகள் தனக்கு பிடிக்குமென்றாலும் செய்யாமல் தவிர்த்துவிடுவார். ஆனால் அதைவிட பெரிய ஒன்றை தன் அன்பின் சிணுங்களில் சாதித்துக்கொள்வார். 

அப்பா மறுக்கும் விடயத்தில் மகள் கொஞ்சம் அடம் பிடித்து சிணுங்கினால் அப்பா உன் இஷ்டம் என விலகிகொள்வார்.இப்படித்தான் இந்த உறவு இருக்கும்.


ஆனால் இந்த மம்மி - எம்பரர் வகையறாக்கள் வெளியில் ஏதும் தெரியாது. அம்மா என்ன சொன்னாலும் கேட்காமல் ஆடுவார் எம்பரர்.

முடிய ஒட்ட வெட்டுடா.. னு அம்மா சொன்னா போம்மா இதாம்மா இப்ப பேஷன்,

இந்த கலர்ல டிரெஸ் எடுடா.. போம்ம அது பழைய டிசைன்..

டேய் தலைக்கு எண்ணெய் வைடா... போம்மா... இப்படி எல்லாமே எதிரும் புதிருமாய் இருக்கும். அதை தாண்டியும் அங்கே ஒரு மம்மி தன்னை காக்க, எதிர்காலத்திற்காக ஒரு எம்பரரை உருவாக்கி வைத்திருப்பார் உளவியல் ரீதியாக.


அவருக்கு பிடித்த ஒரு விசயத்தை அதை சொன்னால் இவன் கேட்கமாட்டான் என தெரிந்து கொண்டு சொல்லும் போது உங்கப்பா சொல்ல சொன்னாரு சொன்னேன் என நாசுக்காய் அதை சொல்லுவார்.அதாவது எனக்கு இதில் ஒன்னுமில்லை. உங்கப்பா சொன்னாரு. செய். இல்லாட்டி தேவையில்லாம சண்டைவரும் என்பது ஒரு சிக்னல். இதே அம்மா சில நேரம் அவனை ஏன் இப்படி பண்ரிங்க விடுங்க என்று அவன் முன்னாலே சொல்லி அவனை தன் பக்கம் இழுத்து வைப்பார். அதாவது அப்பாக்கு எதிராக மகனுக்கு ஆதரவாக இந்த வார்த்தைகள். இன்னும் சில நேரம் அவரு கிடக்காருடா என சீண்டியும் விடுவார். அப்பாவுக்கு தெரியாமல் இந்த மம்மி கொடுக்கும் செல்லம் ஒரு பேரரசரை அல்ல ஒரு சிப்பாயை ( படைவீரன் ) உருவாக்கி வைத்திருக்கும். இதில் ஆச்சர்யமான விசயம் இது அந்த பேரரசருக்கு தெரியவே தெரியாது. அவன் எங்கம்மா என்ன ஒரு ராஜா மாதி பார்த்துகிட்டாங்கனு நம்பிட்டு இருப்பான். ஒரு கட்டத்தில் அப்பா அம்மாவுக்கு எதிராக பேசும் போது பொங்கி எழுந்து பேச வைக்கும் எம்பரரை. அம்மாவுக்கு சார்பாக பேச வைக்கும். சண்டை போட வைக்கும். இதே சூழலில் டாடியின் பிரின்சி டாடியை சமாதனம் செய்யும் விடுங்க டாடி என சமாதனம் செய்யும்.ஒரு போதும் அம்மாவை பகைத்துக்கொள்ளாது. ஆனால் எம்பரர் தன் அம்மாவுக்காக சண்டையே செய்யும் அப்பாவிடம். இது தான் பிரின்சிக்கும் எம்பரர்க்கு உள்ள வேறுப்பாடு.


இன்னொரு முக்கிய விசயம் இந்த டாடி பிரின்சி இருக்கே அப்புறம் ஒருத்தனுக்கு இளவரசியா போகும். அதாவது இன்னொரு மம்மீஸ் எம்பரருக்கு. அப்பா இந்த டாடி ஒதுங்கிப்பாரு. என்னம்மா நல்லாயிருக்கியா…னு தள்ளி நிப்பாரு. இந்த பிரின்சி டாடிகிட்ட ஏதாச்சும் கேட்டா, அவருட்ட ( பிரின்சியோட இளவரசர்கிட்ட) சொல்லிட்டியா என அப்பாவியா தள்ளி நின்னுக்கும். இதனை பிரின்சி புரிந்துகொண்டு சரி இனி, இந்த இளவரசர் தான் நமக்கு என வாழ்ந்து கொள்வார். இதில் இன்னொரு நுட்பமான விசயத்திற்கு வருகிறேன். டாடியின் பிரின்சி திருமணத்திற்கு பிறகு கணவனை கொஞ்சம் ஏற்றுக்கொள்வார். இல்லை தன்னை மாற்றிக் கொள்வார். அல்லது சமாளித்துக்கொள்வார். 



ஆனால் இந்த எம்பரர் இருக்கிறார்களே... அவர்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. டாடி தன் பிரின்சியை விட்டுகொடுத்தது போல மம்மி தன் எம்பரரை விட்டுக்கொடுக்காது. வந்து பாருனு நிக்கும். ரெண்டுக்கும் இடையில் சிக்கி எம்பரர்கள் முழிப்பார்கள். இன்னொருவர் பிரின்சியை எப்படி தன் வீட்டில் ராஜகுமாரியக்குவது.. அல்லது தான் ஏற்கனவே சிப்பாயாக பணிபுரியும் இடத்தில் இவளை எப்படி இன்னொரு சிப்பாய் ஆக்குவது என்றே திணறிப்போவான். அப்பதான் சிலருக்கு தெரியும் நாம எம்பரர் இல்லை சிப்பாய். இப்ப நம்மளா நம்பி ஒரு இளவரசி வந்திருக்கா ? அல்ரெடி இங்கே ஒரு ராஜமாதா இருக்கா ? என்ன செய்யலாம்னு யோசிச்சு காலத்தை தள்ளுவான். ஒரு கட்டத்தில் அவனுக்கு தன்னை வளர்த்த அப்பா என்ற முன்னாள் சிப்பாய் நினைவுக்கு வருவான். தெய்வம்யா நீ ... என அம்மாவின் உளவியல் தாக்குதல் புரிந்துகொள்வான் அந்த எம்பரர்.

ஆனால் அவனே விரும்பினாலும் அந்த உளவியல் அவனை விடாது. அது கொஞ்சம் விட்டாலும் பெரும்பாலும் சிப்பாயாகவே இருக்க விரும்புகிறான். நீ கொஞ்சம் அனுசரிச்சு போயேன் என்பான், அல்லது இதெல்லாம் கிச்சனோட வச்சிக்கோ என்பான், அல்லது நா கேட்கிறேன் என தப்பிப்பான். அவனுக்கு தெரியும்.. இது ராஜகுமாரி, நான் சிப்பாய் என. சிப்பாய் என்ன செய்ய முடியும். அதுவும் அம்மா என்ற பெரும் அதிகாரம் முன்பு. அம்மாக்களின் கண்ணீருக்கு இந்த சிப்பாய்கள் உயிரையே விடுவார்கள். இதில் சிலரே தெரிந்து தெளிந்து கரையேறுகிறார்கள். ரொம்ப பேர் தொலைத்து விடுகிறார்கள்.


அழுத்தமாய் சொல்கிறேன் இங்கே பலபேர் சிப்பாய் தான். அதுவும் அம்மாவால் வார்க்கப்பட்ட “ உனக்கென்னடா நீ ராஜாடா “ என சொல்லப்பட்ட சிப்பாய் தான். நாமெல்லாம் இந்த டாடியின் பிரின்சியை கிண்டலடிக்கும் போது இந்த மம்மிகள் சிரித்து கொள்வார்கள். காரணம் அந்த மம்மி ஒரு டாடியின் பிரின்சியாக இருந்து, இளவரசியாக வந்து இன்று ஒரு சிப்பாயை உருவாக்கி இருக்கிறோம். சிப்பாய்களால் இளரசியை காக்க மட்டுமே முடியும். ஆனால் இளவரசிகளால் இன்னொரு சிப்பாயை உருவாக்க முடியும். நீங்கள் சிப்பாயா இல்லை பிரின்சியா என்பதெல்லாம் பிரச்சினையில்லை.. எங்கே சிப்பாய் எங்கே பிரின்சி என புரிந்தால் ... சிரித்தபடியே ஒரு ராஜ்ஜியத்தை ஆளவும் முடியும், சிரித்தபடியே இன்னொரு தேசத்திற்கு அன்பான அடிமையாக கப்பம் கட்டவும் முடியும்.

டாடிஸ் பிரின்சியால் குறைந்த பட்சம் எங்கப்பா யாரு தெரியுமானு கண்ணீரோடு கேட்க முடியும். ஆனால் மம்மீஸ் எம்பரர்க்கு அது கூட சொல்ல முடியாது. ஏனெனில் அவனின் எதிரில் இருப்பது ஒரு இளவரசி. மேல் இருப்பது ராஜகுமாரி. இந்த இளவரசி கையில் இன்னொரு பிரின்சியோ அல்லது வருங்கால எம்பரரோ இருக்கும் குழந்தையாக. அவன் அப்படியே பம்மிக்கொள்வான். அது ஒன்றுதான் அவனுக்கு இருக்கும் ஆகப்பெரிய தந்திரமும் வாழ்க்கை தத்துவம்.


27/11/2022 நீயா.. நானாவின் தாக்கத்தால் எழுத விழைந்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...