உணவு சார்ந்த அரசியல் சமீப காலமாக பேசப்பட்டே வருகிறது. மாமிசம் சாப்பிடுறவா கிட்ட அந்த குணம் இருக்கும்னு யாரோ ஒருத்தர் சட்டை போடமா உக்காந்து பேசிட்டு இருக்கார். இது யாரோ ஒருத்தர் இல்லை. இந்த மாதிரி நிறைய பேரு பேஷிண்டு இருக்கார்கள். நாமும் அதனை நம்பி நல்ல நாளும் பொழுதுமா ஏண்ட கறிங்கிற அளவுக்கு தெளிவா யோசிச்சுட்டு குழம்பி இருக்கோம்..
முதலில் உணவு என்பது சுவை சார்ந்து மட்டுமில்லை. அதன் மூலக்கூறான புரதம் சார்ந்தது. ஒரு அஞ்சு மிளகு எடுத்து வாய்ல போட்டு மென்னு பாருங்க. வயிறு என்ன ரியாக்சன் காட்டுதுன்னு. அதே பத்து மிளகு நல்ல வறுத்து பொங்கல் போட்டு வரும் போது சாப்டு பாருங்க.. வேறுபாடு தெரியும்.
நாம எதையும் பச்சையா சாப்டுறது இல்லை. எல்லாமே வேக வச்சு பொறிச்சு, வதக்கினு ஏகப்பட்ட கொதி நிலைக்கு கொண்டு போறோம். இப்போது நமக்கு கிடைக்க கூடியது எல்லாமே அதன் சத்து சார்ந்தவைகள் மட்டுமே.
மாடு பால் கொடுக்கும்.
கோழி முட்டை கொடுக்கும்.
மாடு குட்டி போடும்.
கோழி குஞ்சு பொறிக்கும்.
இப்ப விசயத்துக்கு வரேன் கோழி சேவல் கூட சேரலனாலும் முட்டை போடும். சேவல் கூட சேர்ந்து போடுற முட்டையில தான் குஞ்சு பொறிக்கும். சேவல் கூட சேரலனா அந்த முட்டை தான் ஆம்லேட், ஆஃபாயில், பொடிமசால்... நு வருது.
நீங்க ஊருக்கு வெளியே பார்த்தா கோழிப்பண்ணை பெருசு பெருசா இருக்கும். நாம சாப்டுற முட்டை எல்லாம் சேவலால தான் வருதுனு நினைச்சா அவ்ளோ சேவல் உலகத்தில் இல்லை. அந்த கோழி எல்லாம் சேவல் இல்லைனாலும் குறிப்பிட்ட பருவம் தாண்டியதும் முட்டை போடும். முட்டை எண்ணிக்கை குறையவும் அது சிக்கன் ஆய்டும்.
பால் சைவம்னா முட்டையும் சைவம் தான்.அடுத்து இன்னொன்னு கோழிக்கு ஊசி போடுவாங்க. என்ன ஊசி. புரோட்டின் ஊசி ? அட அறிவாளி 100 கிராம் புரோட்டின் பவுடர் விலை தெரியுமா ? அத போட்டு ஒரு கோழி 250ரூ.க்கு கொடுக்கிற அளவுக்கு நல்லவங்க இருக்காங்களா என்ன ? நோய் தொற்று ஊசி அது. ஏன்னா ஒரு கோழி உடம்பு சரியில்லாம செத்துட்டா அடுத்த நொடி எல்லா கோழிக்கும் பரவிடும். அதுனால ஊசி போடுறாங்க.
அதான் ஊசி போடுறாங்களே.. அப்டினா மருந்து இருக்கும்லனு வந்திங்கன்னா... நீங்க வறுத்து பொறிச்சு அவிச்சு அந்த வெக்கையில கோழியோட புரதமே காணமா போது... மருந்து எல்லாம் இல்லாமலே போய்டும்.
அதுனால சிக்கன் சாப்ட்டா எனக்கு ஒத்துக்கலனா விட்றுங்க. எனக்கு கீரை சாப்டா ஒத்துக்காது. ஆனா மிக்ஸில அடிச்சு ஜூஸ் ஆக்கிட்டா ஒத்துக்கும். அந்த மாதிரி சிக்கன் எனக்கு சேரலனு சொல்லுங்க. ஆனால் சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிட்டா அது மாதிரியே ஆய்டுவோம் எவனாச்சும் சொன்னா மூடிட்டு போடானு சொல்லுங்க.
ஏன்னா அறுவாள எடுத்து எவன் வெட்டுனாலும் வெட்டும். நீங்க சைவமா அசைவமானு அது கேட்காது. பயன்படுத்துறவன் மூளையை பயிற்சியை பொறுத்தது. காந்திய சுட்ட துப்பாக்கி சைவம் சாப்பிடுபவன் கைகளில் இருந்தது. உலகையே தன் சைக்கோ டைப் கொலைகளால் போர்களால் மிரட்டிய ஹிட்ல சைவம். அன்னை தெரசா தன் இளவயதில் அசைவம். வயது முதிர்வால் சைவம். ( செரிமான பிரச்சினைகளினால் )
உணவு என்பது உடல் தேவைக்கு. எந்த புனித நாடகங்களுக்கும் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக