முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் சித்தாந்தம் இல்லாமல் எப்படி செயல்படுகிறது..?

காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.  யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது. முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை.  அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாற...

குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1000 எதுக்கு தரங்கனு தெரியுமா..?

ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் பெண்கள் அவர்கள் கணவர்கள் பேசினார்கள். அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண்களில் 98% பேரின் ஏடிஎம் கார்டு அவர்கள் கைகளில் இல்லை. கணவர் கைகளில் தான் இருந்தது. அதில் 75% பேருக்கு பாஸ்வேர்டு கூட தெரியாது. இவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை சொல்லி பணம் எடுத்து தர சொல்லுவோம் என்றார்கள். இவர்கள் எல்லாரும் படித்த ஆசிரியர் வங்கி போஸ்ட் ஆபிஸ் என்ற பெரிய வேலையில் இருப்பவர்கள். இன்னொரு  பக்கம் கிராமங்களில் அல்லது எளிய குடும்பங்களில் வேறு கதை. மனைவியின் சம்பளத்துக்கு கணவர்கள் 25ம் தேதியே செலவு கணக்கு எழுதிடுவார்கள். வாடகை, ஈபி பில், வட்டி, சீட்டு என கணக்கு இருக்கும். இவர்கள் பெட்ரோலுக்கு, ஆபிஸ் கொலிக் திருமணத்திற்கு கிப்ட் என நிற்க வேண்டும். அதிலும் அவர்கள் தான் தொகை முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளம் எவ்வளவு, ஏன் குறைவாக கொடுக்கிறார் என்றெல்லாம் மனைவியால் கேட்கவே முடியாது. என் கம்யூனிஸ்டு  தோழர்  ஒருமுறை இதுகுறித்து பேசிய போது ஒன்று சொன்னார், ஒரு பெண் தன் சம்பளத்தில் இருந்து தன் அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் பெண் படிப்பு...

உலகமே புரிய நீங்கள் இங்கு சென்று அமர்ந்து தான் பாருங்களேன்..!

பேருந்தில்லோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் யாருடை காலையாவது தெரியாமல் மிதித்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தெரிந்தே நம் உடனிருப்போர் குரல்வளையை நெரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதை எத்தனை பேர் உணர்த்திருக்கிறோம். ஒரு சில தினங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை மிகப்பெரிய நவீன வசதிகளை கொண்ட பிரபல மருத்துவமனை. என் பெரியப்பா ஐசியூவில் இருப்பதால்... நான் வெளியில் தான் இருக்கவேண்டும்.(பேஸ் மேக்கர் பொருத்தியிருக்கிறார்கள்... பயப்படும்படி தேவையில்லை).  மொத்தம் நான்கு பிளாக்குகள்... என்னிடம் பாஸ் இருப்பதால்.. சரி கொஞ்சம் சுற்றிப்பார்ப்போம்(?!) என பிளாக் பிளாகாக கிளம்பினேன். ஒட்டுமொத்த வார்டில்/ஐசியூவில்... வயதானவர்கள் 25% மட்டுமே.... 45 முதல் 55 வயதுவரை உள்ளவர்களே அதிகம்... காரணம்.. தவறான உணவுகள்.... உடல் பருமனால் மற்ற உறுப்புகள் செயல் இழப்பு... தவறான வாழ்க்கை முறை. ஐசியூவில் என் பெரியப்பாவுக்கு அருகிலிருந்தவர்... மிகப்பெரிய வக்கீல்... அவருக்கான சிகிச்சைக்கு பத்து லட்சம் கட்டவேண்டியிருக்கிறது... அவரது மகன் இப்போது ஏதோ கல்லூரியில் படிக்கிறான் போல... அவர் அழுதுகொ...