முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் சித்தாந்தம் இல்லாமல் எப்படி செயல்படுகிறது..?

காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. 

யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது.


முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை. 

அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாறியது.


சரி அப்படியெனில் காங்கிரஸ் முதலாளித்துவ கட்சியா என்றால் அப்படி மட்டுமேயில்லை. அது ஒரு பெரிய உண்மைதான். ஆனால் அதன் ஊடாக வேறு சிலவும் இருக்கிறது. அதற்கு என தனி சித்தாந்தம் இல்லையே தவிர, மக்கள் மனநிலை என்னவோ அதனை கொண்டே ஆட்சியை நகர்த்தும். மக்களை பிரிப்போம், உரிமையை புடுங்குவோம், நாம் தான் எல்லாமே என இருக்காது. இடையில் இந்திரகாந்திக்கு அந்த ஆசை வர… பின்னர் வரலாறு அவருக்கு பாடம் கற்பித்தது.

இன்றைய இந்தியா வேறு, சுதந்திரம் பெற்ற இந்தியா வேறு.

அங்கே பசி பட்டினி, பெரிய வறுமை எல்லாம் இருந்தது. இன்றைக்கு சாலையில் ஒரு நாய் காலையில் அடிபட்டு கிடப்பதை பார்ப்பீர்கள். மாலையில் அது இருக்காது. ஆனால் சுதந்திரம் பெற்ற காலத்தில் சாலையில் அப்படி மனிதர்கள் இருந்தார்கள் என்றால் நம்ப முடியுமா?

 பல நாள் நாறிக்கொண்டு இருந்தார்கள், பிணங்களாக… இதனை செய்ய நிர்வகாமே இல்லை. அவர்கள் உருவாக்கினார்கள். வேலையில்லை. பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்கள். கல்விச்சாலைகள் உருவாக்கினார்கள். ஐந்தாண்டு திட்டம் உருவாக்கி மாநிலங்களுக்கு என்ன தேவையென உணர்ந்து உருவாக்கினார்கள். இதில் குறைகள் உண்டு. மறுக்கவில்லை. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்கள். 

நீங்க நம்ப மாட்டிங்க பசியால் ஒருவன் சாக கூடாது என்பதை நிறுத்தவே இங்கே பல ஆண்டுகள் ஆகின. காங்கிரசக்கு என சித்தாந்தம் இல்லையே தவிர மக்களுக்கு என்ன தேவை என்பதை கொஞ்சம் முதலாளித்துவ பார்வையோடு அணுகும் தன்மை இருந்தது. அதன் பலன்கள் தான் பல லாக்டவுண் கடந்தும் இங்கே பட்டினி சாவுகள் பெரிதாக இல்லை. 


ஒரு அடிப்படையான சித்தாந்தம் இல்லை. இதனாலே காங்கிரஸ் இன்று திணருகிறது. அங்கே இருப்பவர்கள் எவருக்கும் ஒன்றும் புரியாது. காமராசருக்கே புரியவில்லையே ? புரிந்திருந்தால் ஒருவரை உண்ணாவிரதம் இருக்கவிட்டு சாக விட்டிருப்பாரா ? அதன் பிறகு காங்கிரஸ் எழவே முடியவில்லை.

இந்திரா காந்தி ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் என வலிமையாக அமரும் போது அது வேலை செய்யும். இல்லாத போது அவர்களுக்கு என்ன செய்ய என தெரியாது. அந்த கட்சியில் இருப்பவர்களை பிடித்து கேளுங்கள் என்ன சித்தாந்தம் என்று, மக்களுக்கு நல்லது செய்யனும் என்பார்கள். அவ்ளோதான் தெரியும். ஆனால் இந்தியாவில் மக்கள் என்பது மக்கள் கூட்டம் மட்டுமில்லை. அவர்களுக்கு மதமுண்டு, சாதியுண்டு, உட்பிரிவுண்டு, மொழியுண்டு, இனமுண்டு இது எதுவும் காங்கிரசுக்கு புரியாது. 



இதையெல்லாம் புரிந்து பிஜேபி ஆடுகிறது. பிரித்து வைத்து தன் நலனை காத்துக்கொள்கிறது.

தனக்கென ஒரு சித்தாந்தம் இல்லாமல் போனதால் ஒரு தலைமுறையை ஈர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது. அதன் விளைவுதான் கார்த்திக் போன்ற அரைகுறை எம்பிக்கள் அங்கே நிரம்பி வழிகிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு தேவை காங்கிரஸ் தான். பிஜேபி அல்ல. காரணம் பிஜேபியால் மக்கள் வாழ முடியாது. மதம் வேண்டுமானால், மத நிறுவனங்கள் வேண்டுமானல் கோடிகளில் வாழலாம். அதனை அண்டிபிழைக்கும் சிலர் வாழலாம். 

காங்கிரசால் மட்டுமே மக்கள் மக்களாக வாழ முடியும். ஆயிரம் குறைகள் இருந்தாலும் காங்கிரஸ் மக்கள் இயக்கம். பிஜேபி பாசிச இயக்கம். இது புரிந்தால் தான் காங்கிரஸ் பக்கம் நம் பார்வை செல்லும். ஆனால் ஆக பெரிய சோகம் இது காங்கிரசுக்கே தெரியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...