முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் சித்தாந்தம் இல்லாமல் எப்படி செயல்படுகிறது..?

காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. 

யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது.


முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை. 

அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாறியது.


சரி அப்படியெனில் காங்கிரஸ் முதலாளித்துவ கட்சியா என்றால் அப்படி மட்டுமேயில்லை. அது ஒரு பெரிய உண்மைதான். ஆனால் அதன் ஊடாக வேறு சிலவும் இருக்கிறது. அதற்கு என தனி சித்தாந்தம் இல்லையே தவிர, மக்கள் மனநிலை என்னவோ அதனை கொண்டே ஆட்சியை நகர்த்தும். மக்களை பிரிப்போம், உரிமையை புடுங்குவோம், நாம் தான் எல்லாமே என இருக்காது. இடையில் இந்திரகாந்திக்கு அந்த ஆசை வர… பின்னர் வரலாறு அவருக்கு பாடம் கற்பித்தது.

இன்றைய இந்தியா வேறு, சுதந்திரம் பெற்ற இந்தியா வேறு.

அங்கே பசி பட்டினி, பெரிய வறுமை எல்லாம் இருந்தது. இன்றைக்கு சாலையில் ஒரு நாய் காலையில் அடிபட்டு கிடப்பதை பார்ப்பீர்கள். மாலையில் அது இருக்காது. ஆனால் சுதந்திரம் பெற்ற காலத்தில் சாலையில் அப்படி மனிதர்கள் இருந்தார்கள் என்றால் நம்ப முடியுமா?

 பல நாள் நாறிக்கொண்டு இருந்தார்கள், பிணங்களாக… இதனை செய்ய நிர்வகாமே இல்லை. அவர்கள் உருவாக்கினார்கள். வேலையில்லை. பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்கள். கல்விச்சாலைகள் உருவாக்கினார்கள். ஐந்தாண்டு திட்டம் உருவாக்கி மாநிலங்களுக்கு என்ன தேவையென உணர்ந்து உருவாக்கினார்கள். இதில் குறைகள் உண்டு. மறுக்கவில்லை. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்கள். 

நீங்க நம்ப மாட்டிங்க பசியால் ஒருவன் சாக கூடாது என்பதை நிறுத்தவே இங்கே பல ஆண்டுகள் ஆகின. காங்கிரசக்கு என சித்தாந்தம் இல்லையே தவிர மக்களுக்கு என்ன தேவை என்பதை கொஞ்சம் முதலாளித்துவ பார்வையோடு அணுகும் தன்மை இருந்தது. அதன் பலன்கள் தான் பல லாக்டவுண் கடந்தும் இங்கே பட்டினி சாவுகள் பெரிதாக இல்லை. 


ஒரு அடிப்படையான சித்தாந்தம் இல்லை. இதனாலே காங்கிரஸ் இன்று திணருகிறது. அங்கே இருப்பவர்கள் எவருக்கும் ஒன்றும் புரியாது. காமராசருக்கே புரியவில்லையே ? புரிந்திருந்தால் ஒருவரை உண்ணாவிரதம் இருக்கவிட்டு சாக விட்டிருப்பாரா ? அதன் பிறகு காங்கிரஸ் எழவே முடியவில்லை.

இந்திரா காந்தி ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் என வலிமையாக அமரும் போது அது வேலை செய்யும். இல்லாத போது அவர்களுக்கு என்ன செய்ய என தெரியாது. அந்த கட்சியில் இருப்பவர்களை பிடித்து கேளுங்கள் என்ன சித்தாந்தம் என்று, மக்களுக்கு நல்லது செய்யனும் என்பார்கள். அவ்ளோதான் தெரியும். ஆனால் இந்தியாவில் மக்கள் என்பது மக்கள் கூட்டம் மட்டுமில்லை. அவர்களுக்கு மதமுண்டு, சாதியுண்டு, உட்பிரிவுண்டு, மொழியுண்டு, இனமுண்டு இது எதுவும் காங்கிரசுக்கு புரியாது. 



இதையெல்லாம் புரிந்து பிஜேபி ஆடுகிறது. பிரித்து வைத்து தன் நலனை காத்துக்கொள்கிறது.

தனக்கென ஒரு சித்தாந்தம் இல்லாமல் போனதால் ஒரு தலைமுறையை ஈர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது. அதன் விளைவுதான் கார்த்திக் போன்ற அரைகுறை எம்பிக்கள் அங்கே நிரம்பி வழிகிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு தேவை காங்கிரஸ் தான். பிஜேபி அல்ல. காரணம் பிஜேபியால் மக்கள் வாழ முடியாது. மதம் வேண்டுமானால், மத நிறுவனங்கள் வேண்டுமானல் கோடிகளில் வாழலாம். அதனை அண்டிபிழைக்கும் சிலர் வாழலாம். 

காங்கிரசால் மட்டுமே மக்கள் மக்களாக வாழ முடியும். ஆயிரம் குறைகள் இருந்தாலும் காங்கிரஸ் மக்கள் இயக்கம். பிஜேபி பாசிச இயக்கம். இது புரிந்தால் தான் காங்கிரஸ் பக்கம் நம் பார்வை செல்லும். ஆனால் ஆக பெரிய சோகம் இது காங்கிரசுக்கே தெரியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...