முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1000 எதுக்கு தரங்கனு தெரியுமா..?

ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் பெண்கள் அவர்கள் கணவர்கள் பேசினார்கள். அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண்களில் 98% பேரின் ஏடிஎம் கார்டு அவர்கள் கைகளில் இல்லை. கணவர் கைகளில் தான் இருந்தது. அதில் 75% பேருக்கு பாஸ்வேர்டு கூட தெரியாது. இவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை சொல்லி பணம் எடுத்து தர சொல்லுவோம் என்றார்கள். இவர்கள் எல்லாரும் படித்த ஆசிரியர் வங்கி போஸ்ட் ஆபிஸ் என்ற பெரிய வேலையில் இருப்பவர்கள்.





இன்னொரு  பக்கம் கிராமங்களில் அல்லது எளிய குடும்பங்களில் வேறு கதை. மனைவியின் சம்பளத்துக்கு கணவர்கள் 25ம் தேதியே செலவு கணக்கு எழுதிடுவார்கள். வாடகை, ஈபி பில், வட்டி, சீட்டு என கணக்கு இருக்கும். இவர்கள் பெட்ரோலுக்கு, ஆபிஸ் கொலிக் திருமணத்திற்கு கிப்ட் என நிற்க வேண்டும். அதிலும் அவர்கள் தான் தொகை முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளம் எவ்வளவு, ஏன் குறைவாக கொடுக்கிறார் என்றெல்லாம் மனைவியால் கேட்கவே முடியாது.


என் கம்யூனிஸ்டு  தோழர்  ஒருமுறை இதுகுறித்து பேசிய போது ஒன்று சொன்னார், ஒரு பெண் தன் சம்பளத்தில் இருந்து தன் அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் பெண் படிப்புக்கு, தொகை கொடுத்துவிட்டால் வீட்டில் வரும் கேள்வி, என்னடி சம்பாதிக்கிற திமிரா ? வீட்ல கேட்கணும்னு தோணல. இதே ஆண் செய்துவிட்டு வந்து சொன்னால் அது பெருமை. சமூக கடமை. ஒரு நல்லது செய்வதற்கு கூட அவளிடம் பணம் இருந்தாலும் அதில் ஏகப்பட்ட தடைகள் உண்டு. 


என்னங்க இன்னைக்கு பொண்ணு வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன் ? ஏதோ மூணு நாளா மாரு வலினு சொல்லிட்டு இருக்கா ? போய்டு வரட்டா ? என்ற கேள்விக்கு பதில் “ பார்க்கலாம்”. என்பதாக இருக்கும். இத்தனைக்கும் அடுத்த 9 கிலோமீட்டரில் தான் ஊர் இருக்கும்.  


இந்த சமூக சூழ்நிலையில் குடும்பதலைவிக்கு  மகளிர் உரிமைத் தொகை என்பதை கண்டிப்பாக வரவேற்பேன். காரணம் அது சமூக பொருளாதார சுழற்சி. பெண்களின் வாழ்வாதார அடிப்படை நம்பிக்கை கொடுக்கும் விடயம். மாதம் தோறும் அந்த ஆயிரத்தில் அவர் செஷல்ஸ் தீவில் இடம் வாங்க போவதில்லை. ஆனால் அதனை தன் குடும்பத்துக்கு செலவழிப்பார். என்ன செலவழிப்பார் ? தின்பண்டங்களாக இருக்கலாம் ? சீட் கட்டலாம் ? பேருகால மகளுக்கு மருமகளுக்கு நல்ல உணவுக்காய் இருக்கலாம்.. ? நல்ல துணிமணிக்காய் இருக்கலாம்... ? எல்லாமே இங்கே சமூகத்தில் தான் உழல போகிறது அந்த பணம்.


இல்லையில்லை அந்த ₹1000த்தில் வேலை வாய்ப்பு, தொழில் என்றெல்லாம் சொல்பவர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தயவு செய்து பக்கத்து வீடு வாட்சப் புரட்சி வசனம் மட்டுமே உலகென இருக்காதீர்கள். சமூகத்தை கண் திறந்து பாருங்கள் என்பேன். இந்த சமூக சாதீய பெண்ணடிமை சிக்கல் தீர இதெல்லாம் வழி முறைகள் என்பேன். நான் வரவேற்கிறேன். அவர்களுக்கு மிக்சி கொடுத்தது கிரைண்டர் கொடுத்தது, கல்விக்கு பணம் கொடுத்தது என எல்லாவற்றையும் வரவேற்கிறேன். 


ஏனெனில் ரஞ்சித் ஒரு வசனம் சொல்லுவார் “ எங்களுக்கு ஓட்டு இருக்குனு தானே உசுரோடு வச்சிருக்கிங்க இல்லாட்டி கடல் தாண்டி போட்ற மாட்டிங்க" என்பார். அதே தான் பெண்களுக்கும். 

ஏதோ அரசு தாலிக்கு தங்கம், அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரில சேர்ந்து படிச்ச மாதம் ₹1000, பேறு கால உதவி என செய்வதால் மட்டுமே அமைதியாக இருக்கிறார்கள். இல்லையேல் இப்பவும் சமூகத்திற்கு கள்ளிப்பால் கொடுக்க தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...