முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகமே புரிய நீங்கள் இங்கு சென்று அமர்ந்து தான் பாருங்களேன்..!

பேருந்தில்லோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் யாருடை காலையாவது தெரியாமல் மிதித்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தெரிந்தே நம் உடனிருப்போர் குரல்வளையை நெரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதை எத்தனை பேர் உணர்த்திருக்கிறோம்.


ஒரு சில தினங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை மிகப்பெரிய நவீன வசதிகளை கொண்ட பிரபல மருத்துவமனை. என் பெரியப்பா ஐசியூவில் இருப்பதால்... நான் வெளியில் தான் இருக்கவேண்டும்.(பேஸ் மேக்கர் பொருத்தியிருக்கிறார்கள்... பயப்படும்படி தேவையில்லை). மொத்தம் நான்கு பிளாக்குகள்... என்னிடம் பாஸ் இருப்பதால்.. சரி கொஞ்சம் சுற்றிப்பார்ப்போம்(?!) என பிளாக் பிளாகாக கிளம்பினேன்.

ஒட்டுமொத்த வார்டில்/ஐசியூவில்... வயதானவர்கள் 25% மட்டுமே.... 45 முதல் 55 வயதுவரை உள்ளவர்களே அதிகம்... காரணம்.. தவறான உணவுகள்.... உடல் பருமனால் மற்ற உறுப்புகள் செயல் இழப்பு... தவறான வாழ்க்கை முறை.


ஐசியூவில் என் பெரியப்பாவுக்கு அருகிலிருந்தவர்... மிகப்பெரிய வக்கீல்... அவருக்கான சிகிச்சைக்கு பத்து லட்சம் கட்டவேண்டியிருக்கிறது... அவரது மகன் இப்போது ஏதோ கல்லூரியில் படிக்கிறான் போல... அவர் அழுதுகொண்டேயிருக்கிறார்.. என் மகன் படிப்பு என்னாகுமென.. அவர் மனைவி அவருக்கு தைரியம் சொல்கிறார்.... 


இன்னொரு பக்கம்... ஆல்கஹால்/குட்கா/டொபாக்கோ.. பிரிவு... வயது வேகத்தில் தவறான சிந்தாந்தகளால் டாஸ்மாக் உள்ளே இழுக்கப்பட்டு.. வாழ்க்கையை சக்கையாக்கி வெளியே தூக்கி எறிந்திருக்கிறது... எல்லார் கண்களிலும் உயிர் வாழும் ஆசையிருக்கிறது.. ஆனால் அந்த ஆசை காலம் கடந்து வந்திருக்கிறது..

ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மனிதனே.. எதை குடிக்க வேண்டும்... எதை உணவாக எடுத்துகொள்ளவேண்டும்... எப்படி வாழவேண்டும் என தீர்மானிக்க அவருக்கு உரிமை உண்டு... ஆனால் எப்போது திருமணம் செய்து குழந்தை பிறந்ததோ அப்போதாவது அவர்கள் வாழ்க்கைமுறை சற்றே மாற்றவேண்டும்... 

ஒரு குடிகார அப்பாவினால் குடும்பமே நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறது... தன் உடலை பாதுகாக்காமல்.. அதிக சக்கரையினால்.. ஒரு காலை இழந்து வீல் சேரில் செல்கிறார் ஒரு மார்கெட்டிங் ஊழியர்... அவரது குழந்தை விளையாட்டாக அந்த வீல்சேரை தள்ளி செல்கிறது...


கொஞ்சம் யோசியுங்கள்... உங்கள் வாழ்க்கை முறையை சற்றே உற்றுநோக்குங்கள்... உடற்பயிற்சி/யோகா/நடைபயிற்சி என ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள்.... உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆல்கஹால்/குட்கா/டொபாக்கோ முதலில் குறைக்க முயற்சியுங்கள்.... பின்னர் நிறுத்துவிடுங்கள்... இல்லையென்றால்... உங்கள் பாசமான குடும்பம் , நீங்கள் அவர்களுக்காய் சேர்த்துவைத்திருந்த பணத்தை மருத்துவமனையில் கட்டிவிட்டு... நிர்கதியாய் இருக்கும்...


ந்த மருத்துவமனையில் தசை நார் பிரச்சினைகள் தொடர்பான ஒரு பிரிவு இப்படியொரு பிரிவு இருப்பதே எனக்கு முன்பே தெரியாது. நடக்கவே முடியாதவர்கள், திரும்ப முடியாதவர்கள், உட்கார முடியாதவர்கள் என பலரை பார்த்தேன் அங்கு எல்லாருமே 45 வயதை கடந்தவர்கள். வாலிபத்தில் எல்லையில் இருக்கும் அவர்கள் குழந்தைகள் அவர்களை அமர வைத்துவிட்டு நின்று கொண்டே மொபைல் நோண்டுகிறார்கள். 


ஒரே ஒரு நாள்... ஏதேனும் மருத்துவமனையில் வெறும் மனிதனாக அமர்ந்து பாருங்கள்... உலகம் புரியும். கண்டிப்பாக இது உபதேசம் அல்ல என்னுடைய வலியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். 



நீங்கள் தனி மனிதர் எனில் இந்த பதிவை சிரித்துவிட்டு கடந்துவிடுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறது எனில் தயவு செய்து மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...