முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகமே புரிய நீங்கள் இங்கு சென்று அமர்ந்து தான் பாருங்களேன்..!

பேருந்தில்லோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் யாருடை காலையாவது தெரியாமல் மிதித்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தெரிந்தே நம் உடனிருப்போர் குரல்வளையை நெரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதை எத்தனை பேர் உணர்த்திருக்கிறோம்.


ஒரு சில தினங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை மிகப்பெரிய நவீன வசதிகளை கொண்ட பிரபல மருத்துவமனை. என் பெரியப்பா ஐசியூவில் இருப்பதால்... நான் வெளியில் தான் இருக்கவேண்டும்.(பேஸ் மேக்கர் பொருத்தியிருக்கிறார்கள்... பயப்படும்படி தேவையில்லை). மொத்தம் நான்கு பிளாக்குகள்... என்னிடம் பாஸ் இருப்பதால்.. சரி கொஞ்சம் சுற்றிப்பார்ப்போம்(?!) என பிளாக் பிளாகாக கிளம்பினேன்.

ஒட்டுமொத்த வார்டில்/ஐசியூவில்... வயதானவர்கள் 25% மட்டுமே.... 45 முதல் 55 வயதுவரை உள்ளவர்களே அதிகம்... காரணம்.. தவறான உணவுகள்.... உடல் பருமனால் மற்ற உறுப்புகள் செயல் இழப்பு... தவறான வாழ்க்கை முறை.


ஐசியூவில் என் பெரியப்பாவுக்கு அருகிலிருந்தவர்... மிகப்பெரிய வக்கீல்... அவருக்கான சிகிச்சைக்கு பத்து லட்சம் கட்டவேண்டியிருக்கிறது... அவரது மகன் இப்போது ஏதோ கல்லூரியில் படிக்கிறான் போல... அவர் அழுதுகொண்டேயிருக்கிறார்.. என் மகன் படிப்பு என்னாகுமென.. அவர் மனைவி அவருக்கு தைரியம் சொல்கிறார்.... 


இன்னொரு பக்கம்... ஆல்கஹால்/குட்கா/டொபாக்கோ.. பிரிவு... வயது வேகத்தில் தவறான சிந்தாந்தகளால் டாஸ்மாக் உள்ளே இழுக்கப்பட்டு.. வாழ்க்கையை சக்கையாக்கி வெளியே தூக்கி எறிந்திருக்கிறது... எல்லார் கண்களிலும் உயிர் வாழும் ஆசையிருக்கிறது.. ஆனால் அந்த ஆசை காலம் கடந்து வந்திருக்கிறது..

ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மனிதனே.. எதை குடிக்க வேண்டும்... எதை உணவாக எடுத்துகொள்ளவேண்டும்... எப்படி வாழவேண்டும் என தீர்மானிக்க அவருக்கு உரிமை உண்டு... ஆனால் எப்போது திருமணம் செய்து குழந்தை பிறந்ததோ அப்போதாவது அவர்கள் வாழ்க்கைமுறை சற்றே மாற்றவேண்டும்... 

ஒரு குடிகார அப்பாவினால் குடும்பமே நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறது... தன் உடலை பாதுகாக்காமல்.. அதிக சக்கரையினால்.. ஒரு காலை இழந்து வீல் சேரில் செல்கிறார் ஒரு மார்கெட்டிங் ஊழியர்... அவரது குழந்தை விளையாட்டாக அந்த வீல்சேரை தள்ளி செல்கிறது...


கொஞ்சம் யோசியுங்கள்... உங்கள் வாழ்க்கை முறையை சற்றே உற்றுநோக்குங்கள்... உடற்பயிற்சி/யோகா/நடைபயிற்சி என ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள்.... உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆல்கஹால்/குட்கா/டொபாக்கோ முதலில் குறைக்க முயற்சியுங்கள்.... பின்னர் நிறுத்துவிடுங்கள்... இல்லையென்றால்... உங்கள் பாசமான குடும்பம் , நீங்கள் அவர்களுக்காய் சேர்த்துவைத்திருந்த பணத்தை மருத்துவமனையில் கட்டிவிட்டு... நிர்கதியாய் இருக்கும்...


ந்த மருத்துவமனையில் தசை நார் பிரச்சினைகள் தொடர்பான ஒரு பிரிவு இப்படியொரு பிரிவு இருப்பதே எனக்கு முன்பே தெரியாது. நடக்கவே முடியாதவர்கள், திரும்ப முடியாதவர்கள், உட்கார முடியாதவர்கள் என பலரை பார்த்தேன் அங்கு எல்லாருமே 45 வயதை கடந்தவர்கள். வாலிபத்தில் எல்லையில் இருக்கும் அவர்கள் குழந்தைகள் அவர்களை அமர வைத்துவிட்டு நின்று கொண்டே மொபைல் நோண்டுகிறார்கள். 


ஒரே ஒரு நாள்... ஏதேனும் மருத்துவமனையில் வெறும் மனிதனாக அமர்ந்து பாருங்கள்... உலகம் புரியும். கண்டிப்பாக இது உபதேசம் அல்ல என்னுடைய வலியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். 



நீங்கள் தனி மனிதர் எனில் இந்த பதிவை சிரித்துவிட்டு கடந்துவிடுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறது எனில் தயவு செய்து மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...