முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தி படக் காட்சி உங்கள் வாழ்விலும் இப்படியொரு சூழலா

 


அது ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை. அன்றைக்கு தீபாவளி வேறு. ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் என 13 உடல்கள் வந்திருக்கிறது. ஒரு 13 வயது சிறுவன் தந்தை வெடி வாங்கி தரவில்லை என்ற தற்கொலை செய்திருக்கிறான். அவன் உடலும் அங்கே இருக்கிறது. அவனின் உறவுகள் எல்லாம் வெளியே கதறியபடி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அவன் உடல் வெளியே வருகிறது. ஒட்டுமொத்த சொந்தமும் கதறுகிறது. ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, அங்கே அழுது கொண்டிருக்கும் பெரியவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்யும் ஊழியர்கள், அய்யா இன்னைக்கு தீபாவளி என்கிறார்கள், அவரும் அழுபடியே சட்டைபையில் இருந்து ரூபாய் எடுத்து கொடுக்கிறார். அந்த காக்கி டவுசர் அணிந்த ஊழியர் வாங்கிகொண்டு அடுத்த உடலை எடுக்க செல்கிறார்.


இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும்  உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும் போது அவர்கள் சொல்லுவார்கள் எல்லாரும் கிளம்புங்கள் என்பார்கள். நாம் கண்ணீரோடு திரும்பும் போது அந்த குரல் வரும்.. முதலாளி ஒரு ஐநூறு ரூபாய் என்பார்கள். 


நம்மால் அப்போது ஏதும் செய்ய முடியாது. கோவம் வரும் நிலையில் கூட இருக்கமாட்டோம். அவர் கேட்பதை கொடுப்போமா என தெரியாது ஆனால் ஏதோ ஒரு தொகை கண்டிப்பாக கொடுப்போம். அவர்கள் முதலிலே கண்டுவிடுவார்கள், யார் கொள்ளி வைக்க போகிறார், யாரிடம் எல்லாரும் அனுமதி கேட்பார்கள் என்பதையெல்லாம் தேடி சரியாக கேட்பார்கள். இத்தனைக்கும் முதலிலே விறக்க்கு எவ்ளோ, சடங்கு சாங்கியம் கூலி எல்லாம் சேர்த்து ஒரு 25,000 பேசி வாங்கிவிடுவார்கள். அப்படியும் இது போன்ற பணம் கேட்கும் நிலை நடக்கும். 


இது சரியா தவறா என்றெல்லம் நான் யோசிக்க போவதில்லை. ஒரு மனிதன் தன் உறவொன்றை இழந்து ஒரு வெறுமையில் இருக்கும் சூழலில் ஒருவரால் பணம் கேட்க முடிகிறது எனில், அவரின் வாழ்வு சூழல் எப்படி இருக்கிறது? பணி சூழல் எப்படி இருக்கிறது. என்பதையே நான் யோசிக்கிறேன்.


பிணவறைக்கும், ஆப்ரேசன் தியேட்டருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஒன்று உயிரோடு இருக்கும் போது நடக்கிறது. இன்னொன்று இறந்த பின்னர் நடக்கிறது. இரண்டிலுமே உடல் ஒருவரை நம்பி ஒப்படைக்கபடுகிறது. ஆனால் வாழ்வின் தர சூழல் அவர்களை அப்படி மாற்றிவிடுகிறது.


பிறகு விசாரிக்கும் போது தெரிகிறது அவர்களின் அடிப்படை சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு. இப்படியான தொகை தான் அவர்கள் குடும்பத்தை கொஞ்சமாவது வாழ வைக்கிறது. 


ஒரே ஒரு முறை எம் எல் ஏ அல்லது எம். பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் போதும் சாகும் வரை பென்சன் வரும் , அதோடு இன்ன பிற வசதிகளும் உண்டு என்ற அதே தேசத்தில் தான், வாழ் நாள் முழுக்க இறந்து போன உடல்களோடு மட்டுமே சுவாசிக்கும் ஒருவன் மற்றவர்கள் அழும் போதும் எனக்கு ஏதாவது செய்ங்க முதலாளி (சார்) னு வந்து நிக்கிறான் எனில்... இங்கே யார் திருந்த வேண்டும் ? 

அவனை அப்படி கேட்க வைக்கும் சூழல் எது ? ஏன் இப்படி இவன் கேட்டுகிட்டே இருக்கான்னு நம்மை யோசிக்க வைக்கும் சூழல் எது ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...