முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தி படக் காட்சி உங்கள் வாழ்விலும் இப்படியொரு சூழலா

 


அது ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை. அன்றைக்கு தீபாவளி வேறு. ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் என 13 உடல்கள் வந்திருக்கிறது. ஒரு 13 வயது சிறுவன் தந்தை வெடி வாங்கி தரவில்லை என்ற தற்கொலை செய்திருக்கிறான். அவன் உடலும் அங்கே இருக்கிறது. அவனின் உறவுகள் எல்லாம் வெளியே கதறியபடி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அவன் உடல் வெளியே வருகிறது. ஒட்டுமொத்த சொந்தமும் கதறுகிறது. ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, அங்கே அழுது கொண்டிருக்கும் பெரியவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்யும் ஊழியர்கள், அய்யா இன்னைக்கு தீபாவளி என்கிறார்கள், அவரும் அழுபடியே சட்டைபையில் இருந்து ரூபாய் எடுத்து கொடுக்கிறார். அந்த காக்கி டவுசர் அணிந்த ஊழியர் வாங்கிகொண்டு அடுத்த உடலை எடுக்க செல்கிறார்.


இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும்  உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும் போது அவர்கள் சொல்லுவார்கள் எல்லாரும் கிளம்புங்கள் என்பார்கள். நாம் கண்ணீரோடு திரும்பும் போது அந்த குரல் வரும்.. முதலாளி ஒரு ஐநூறு ரூபாய் என்பார்கள். 


நம்மால் அப்போது ஏதும் செய்ய முடியாது. கோவம் வரும் நிலையில் கூட இருக்கமாட்டோம். அவர் கேட்பதை கொடுப்போமா என தெரியாது ஆனால் ஏதோ ஒரு தொகை கண்டிப்பாக கொடுப்போம். அவர்கள் முதலிலே கண்டுவிடுவார்கள், யார் கொள்ளி வைக்க போகிறார், யாரிடம் எல்லாரும் அனுமதி கேட்பார்கள் என்பதையெல்லாம் தேடி சரியாக கேட்பார்கள். இத்தனைக்கும் முதலிலே விறக்க்கு எவ்ளோ, சடங்கு சாங்கியம் கூலி எல்லாம் சேர்த்து ஒரு 25,000 பேசி வாங்கிவிடுவார்கள். அப்படியும் இது போன்ற பணம் கேட்கும் நிலை நடக்கும். 


இது சரியா தவறா என்றெல்லம் நான் யோசிக்க போவதில்லை. ஒரு மனிதன் தன் உறவொன்றை இழந்து ஒரு வெறுமையில் இருக்கும் சூழலில் ஒருவரால் பணம் கேட்க முடிகிறது எனில், அவரின் வாழ்வு சூழல் எப்படி இருக்கிறது? பணி சூழல் எப்படி இருக்கிறது. என்பதையே நான் யோசிக்கிறேன்.


பிணவறைக்கும், ஆப்ரேசன் தியேட்டருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஒன்று உயிரோடு இருக்கும் போது நடக்கிறது. இன்னொன்று இறந்த பின்னர் நடக்கிறது. இரண்டிலுமே உடல் ஒருவரை நம்பி ஒப்படைக்கபடுகிறது. ஆனால் வாழ்வின் தர சூழல் அவர்களை அப்படி மாற்றிவிடுகிறது.


பிறகு விசாரிக்கும் போது தெரிகிறது அவர்களின் அடிப்படை சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு. இப்படியான தொகை தான் அவர்கள் குடும்பத்தை கொஞ்சமாவது வாழ வைக்கிறது. 


ஒரே ஒரு முறை எம் எல் ஏ அல்லது எம். பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் போதும் சாகும் வரை பென்சன் வரும் , அதோடு இன்ன பிற வசதிகளும் உண்டு என்ற அதே தேசத்தில் தான், வாழ் நாள் முழுக்க இறந்து போன உடல்களோடு மட்டுமே சுவாசிக்கும் ஒருவன் மற்றவர்கள் அழும் போதும் எனக்கு ஏதாவது செய்ங்க முதலாளி (சார்) னு வந்து நிக்கிறான் எனில்... இங்கே யார் திருந்த வேண்டும் ? 

அவனை அப்படி கேட்க வைக்கும் சூழல் எது ? ஏன் இப்படி இவன் கேட்டுகிட்டே இருக்கான்னு நம்மை யோசிக்க வைக்கும் சூழல் எது ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...