முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மிடையே மதம் காலாவதியானல் தான் மனிதம் பிறக்குமா..?

சிறியதை பெரியது விழுங்கும். பெரியதை அதனினும் பெரியது விழுங்கும். இது ஒரு முடிவிலி. தொடர்ந்து கொண்டே இருக்கும்.




ஆலயங்களில் வாசலில் இருப்பவர்கள் கேட்கும் பிச்சையை நாம் கொடுத்தால் நாம் கேட்கும் பிச்சையை ஆண்டவன் தீர்த்து வைப்பார். கிட்டதட்ட எல்லா மதங்களின் சாரம்சம் இதுதான். அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் ஆலயத்தின் முன்னால் நிற்கிறார்கள் நம்மை நம்பி.


ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவுதல் என்பது இயல்பான ஒன்று. என்னைப் பொறுத்துவரை அதுதான் வாழ்வியல் அடிப்படை. யாரோ யாருக்கோ உதவிக்கொண்டே இருக்கிறார்கள் உலகில். இதில் இறைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இறை புகுத்தப்படுகிறது. காரணம் சொர்கம், மறுமை, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு என அவைகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. விளைவு மனிதம் தாண்டி இறைவன் பெயரால் தர்மம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.


உன்னால் முடியும் தம்பி...படத்தில் ஒரு குருட்டு கிழவியின் கையில் இருந்து வாழைப்பழம் கீழே விழுந்துவிடும். வாயில் மந்திரம் முணுமுணுத்துக்கொண்டே நகரும் ஒரு இளைஞன் அவளுக்கு அந்த பழத்தை எடுத்த தர உதவமாட்டான். காரணம் அவன் அதனினும் பெரிய தர்மமான மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு இருக்கிறான். இதுதான் இங்கே போதிக்கப்படுகிறது. 


சாலையில் உங்கள் முன்னால் கையெந்தி நிற்கும் முதியவருக்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம். ஆனால் ஏற்கனவே உங்கள் பிறந்தாளுக்கு ஏதோ ஒரு ஆசிரமத்தில் நீங்கள் தர்மம் செய்திருக்கிறீர்கள். அது உங்கள் இறைப்பாதையை கொஞ்சம் நீட்டித்திருக்கும். அதுபோதும் என கடந்து செல்வீர்கள். காரணம் உங்கள் முன்னால் நிற்கும் எளிய மனிதனின் குரலைவிட, ஒட்டிப்போன வயிறைவிட... அதை செய்தால் கிடைக்கும் புண்ணியம் உங்கள் மூளையில் உறைந்திருக்கிறது. ஒரு நாள் தர்மம் செய்து அதை கடவுளின் கணக்கில் வரவு வைக்கும் சூத்திரங்கள் உங்களுக்கு உங்கள் மதம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. அதையே நாமும் தேர்வு செய்துகொள்கிறோம். விளைவு எல்லா பக்கமும் ஏதோ ஒரு அழுகுரல் கேட்கிறது. நாமோ வேதம் சொல்கிறோம். பாங்கு ஒதுகிறோம். பிரேயர் செய்கிறோம். தியானம் செய்கிறோம்.


அப்பொதெல்லாம் நான் யோசிப்பேன் கடவுளின் குறித்து வைக்கும் திறன் ஒருநாள் காலவதியானல்... என்ன செய்வார்கள் இவர்கள்... ? ஒரு மனிதன் சக மனிதனுக்கு உதவ மதங்கள் தேவையில்லை.. அவைகளின் போலி போதனைகள் தேவையில்லை.. நீங்களும் அவரை போலவே ரத்தமும் சதையும் விரவி இருக்கும் மனிதன் என்ற எண்ணம் போதும். அது இல்லாத போது மதநிறுவனங்களின் போதனைகள் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...