முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமெடி ட்ராக்கில் கலக்கிய வடிவேலுவா இப்படி மாறி(ரி)யுள்ளார்..!

நகைச்சுவை நடிகர்கள் திடிரென கொஞ்சம் எமோஷனலாக பேசும் போது கவனிக்கப்படும். வெளிப்பாடுகள் கொஞ்சம் சரியாக அமைந்துவிட்டால் அது கொண்டாடப்படும்.


எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் எல்லாமே அப்படி கொண்டாடப்பட்டவையே. நாகேஷ்க்கு பிறகு நகைச்சுவை கூடவே கொஞ்சம் எமோஷனல் ஆக்டிங் என எவருக்கும் சரியாக வாய்க்கவில்லை என்றே கருதுவேன். 


கவுண்டமணிக்கு என சில படங்கள் இருந்தாலும் அதிலும் கொஞ்சம் செயற்கை தெரிந்தது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் படத்தில் கவுண்டர் நன்றாக நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் ஈர்ப்பை கொண்டுவரவில்லை என்றே சொல்லுவேன்.


நடிகைகளில் மனோராமவிற்கு பிறகு யாருமே அங்கே வரவில்லை. அவர் முடிசூடா ராணியாகவே இருந்தார். நகைச்சுவை + எமோஷனல் என கடைசி வரை நடித்தார்.


நாகேஷ்க்கு பிறகு என்றால் எனக்கு வடிவேலு நியாபகம் வருகிறார். தேவர்மகனில் ஒரு காட்சியில் கலங்கடித்தவர் அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை பக்கமே பயணித்தார். ”பொற்காலம்” படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென டிராக் மாதிரி 4 நிமிட காட்சியில் படத்தையே தன் பக்கம் திருப்பிவிடுவார்.


நிமிடத்துக்கு முகபாவனையும் அதற்கேற்ற உணர்ச்சியும் மாற்ற தெரிந்த நடிகர் அவர். இங்கே திரையுலகில் ஒட்டப்படும் லேபிள்களை எளிதாக எல்லாம் யாரும் மாற்றிவிட முடியாது என்பதில் அவரும் சிக்கிகொண்டார். இன்றும் அவரின் காமெடிகள் கொண்டாடப்படுவது அவரது உடல்மொழி, மற்றும் மொழி உச்சரிப்பினால் தான்.


எம்டன் மகன் படத்தில் அவரின் நடிப்பு படத்தையே நமக்கு புரிய வைக்கும். இத்தனைக்கும் இரண்டு மூன்று காட்சிகள் தான் அவருக்கு நடிக்க இருக்கும். மீதியெல்லாம் வழக்கம் போல காமெடிகள் தான். ஆனால் ஒட்டுமொத்த கதையும் திசைதிருப்பும் காட்சிகள் அவைதான்.


சூரிக்கு விடுதலை ஒகே தான் என்றாலும் அதில் அவர் நகைச்சுவை நடிகராக இல்லை என்றளவில் ஒகே. ஆனால் நடித்திருக்கிறார், ஈர்த்திருக்கிராரா என்றால் இன்னும் ஒரு படம் வரட்டும் என்றே சொல்லுவேன். 




இப்போது மாமன்னன் படத்தில் போஸ்டர் பார்க்கும் போது வடிவேலுவின் அந்த நடிப்பு முகத்திற்கு தீனி கிடைக்கலாமென தெரிகிறது. பார்ப்போம் மாரி செல்வராஜ் சரியாக பயன்படுத்தி இருக்கிறாரா என...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...