முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணிப்பூர் மக்களால் சொல்ல முடிய கதை.. வன்முறைக்கு பின்னால் என்ன ..?

ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை.  இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர...

I.N.D.I.A கூட்டணியில் அனைவரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை.. தேர்தலில் வெற்றி கிட்டுமா..?

இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ?  இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ?  இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ?  இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ? இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி.  இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே...  விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.   ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவன...

திரைகளில் தோன்றும் சாதி ஏற்றத்தாழ்வு..! சினிமாவின் நகர்வில் எது தேவை..?

அந்த படத்தில் அவர் பெரிய பண்ணையக்காரர். அவருக்கு ஒரு ப்ரண்ட். ஆனா அவரு சாதி அந்த பண்ணையக்காரர் சாதிக்கு கீழ தான். இங்கே சனாதன இந்து மதம் அப்டிதானே இருக்கு. என்னதான் ப்ரண்டா பழகினாலும் பண்ணையகாரருக்கு இவர் வேலைக்காரர் தான். நம்பிகையான நட்பான வேலைக்காரர். அது ஒன்னும் தப்பில்லை. இந்த சூழலில் ரெண்டு பேரும் ஒரு பங்ஷனுக்கு போறாங்க… அங்க அந்த பண்ணையக்காரர் அவர் பக்கத்தில அவரோட நண்பர உக்காந்து சாப்பிட சொல்ல… அங்க இருக்கிற எல்லாரும் அத எதிர்க்கிறாங்க, சாப்பிடமாட்டோம்னு எந்திரிச்சு நிக்கிறாங்க, ஏன்னா சாதி. உடனே பண்ணையக்காரரும்.. அவளோதானே டேய் எந்திரிடானு நண்பனை பார்த்து சொல்லவும், நண்பன் சொல்றானு அவனும் எந்திரிக்கிறான். எல்லாரும் சாப்பிட தொடங்கியதும், இந்த பண்ணையக்காரர் இலையை மூடிட்டு சாப்டாம போய்டுறார். நட்பு தான் பெருசுனு. இந்த படம் நல்லா ஓடுச்சு. இந்த சீன் பார்த்து சில்லறையை சிதறவிட்டவங்க உண்டு. இப்ப இப்படி யோசிப்போம்.. ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ப்ரண்ட் நான் ஏண்டா இங்க உக்காந்து சாப்பிட கூடாதுனு ஊரை பார்த்து உரக்க கேட்டிருந்தா ?  ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ஏண்டா இவன் சாப்பிட்டா உங்களு...