முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிப்பூர் மக்களால் சொல்ல முடிய கதை.. வன்முறைக்கு பின்னால் என்ன ..?

ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை. 



இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர்கள் தான் 48% அனுபவிக்கிறார்கள். ஆனா போதலை. உடனே குறுக்குபுத்தி பார்ப்பனியம் கூட சேர்ந்து எங்களை பழங்குடியினரா சொல்லுங்கனு சொல்றாங்க. 

அதுவும் எங்க சொல்றாங்க.. மக்கள் மத்தியில் இல்லை. நீதிமன்றத்தில். இடஒதுக்கீடை நீதிமன்றம் முடிவு செய்ய கூடாதுனு சட்டம் தெளிவா சொல்லியிருக்கு. அதுக்குதான் சட்டமன்றம் நாடாளுமன்றம் இருக்கே நீ அதுல தலையிடாதேனு சொல்லியிருக்கு. ஆனா பார்ப்பனிய பிஜேபி விடுமா என்ன ? அவங்க கேட்கிறத கொடுக்க பரிசீலிக்கலாமேனு ஒன்றிய அரசுக்கும் மணிப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுக்குது. உடனே போராட்டம் வெடிக்குது… 

உடனே இந்த பிஜேபி சொம்புகள் சொல்வார்கள், அது கோரிக்கை தானேனு. அதுக்கு ஏன் போராட்டம்னு… அட முட்டாபயலே 10% இடஒதுகீடு கூட இன்னும் செல்லுமா செல்லாதா தெரியாத நிலையிலே அது இப்ப திணிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு வராதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குள்ள அவன் நுழைஞ்சு எல்லாத்தையும் அபகரிச்சுடுவான்.

இந்த கூட்டத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து தராதேனு சொல்றங்க. ஆனா அரசு மெளனமா இருக்கு. ஏன்னா இந்த ஊருக்குள்ள இருக்கிற கோஷ்டி அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டும் கும்பல். மலைமேல இருக்கிற பழங்குடியினர் அப்படியில்லை. கூடுதலாக அதில் பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள். அந்த காண்டு வேற. பழங்குடியினரை தீண்டதகாதவர்கள் சொல்லி ஒதுக்கி வைக்கிர மத நாய்களுக்கு, அவன் யார் கும்பிட்டா என்னா ? இந்திய ஜனாதிபதியின் நிலைமை என்ன ? அவர் பழுங்குடியினர் என்றே அவரை அழைக்கமால் அரசு விழாக்கள் நடக்கிறது. அதை கேட்க வக்கில்லாத இந்த கும்பலுக்கு இதை கேட்க அருகதை உண்டா ? அப்புறம் அவன் உங்க வர்ணாசிரம கடவுளை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அவன் பழங்குடியினர் தான். அதை உங்க கடவுளே நொட்ட நினைச்சாலும் முடியாது. அது அவனோட உரிமை. நீ காட்டை வாங்கி என்ன செய்ய போறேனு அவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். அவன் போராடுறான். சண்டைபோடுறான். அதுக்கு தான் நீ அவன் வீட்டு பொம்பளைகளை நிர்வாணமா ரோட்ல கூப்டுவந்தே. இது அரசு ஆசிர்வாதத்தோட நடந்ததுனு அவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். மனசாட்சி உள்ளவனுக்கு புரியும். 

இன்னைக்கு அவங்க, நாளைக்கு நாம. என்னடா இப்டி சொல்றேனு நினைக்காதீங்க… இங்க இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலையோட கனிம வளம் படி. சுத்தி சுத்தி நாலு வழி எட்டுவழி சாலையெல்லாம் எதுக்கு ? கனிம வளங்களை காலி செய்ய தான். ஆனா அவன் அளவுக்கு எல்லாம் நாம எதிர்க்கமாட்டோம். ஏன்னு உங்களுக்கே தெரியும்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...