முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிப்பூர் மக்களால் சொல்ல முடிய கதை.. வன்முறைக்கு பின்னால் என்ன ..?

ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை. 



இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர்கள் தான் 48% அனுபவிக்கிறார்கள். ஆனா போதலை. உடனே குறுக்குபுத்தி பார்ப்பனியம் கூட சேர்ந்து எங்களை பழங்குடியினரா சொல்லுங்கனு சொல்றாங்க. 

அதுவும் எங்க சொல்றாங்க.. மக்கள் மத்தியில் இல்லை. நீதிமன்றத்தில். இடஒதுக்கீடை நீதிமன்றம் முடிவு செய்ய கூடாதுனு சட்டம் தெளிவா சொல்லியிருக்கு. அதுக்குதான் சட்டமன்றம் நாடாளுமன்றம் இருக்கே நீ அதுல தலையிடாதேனு சொல்லியிருக்கு. ஆனா பார்ப்பனிய பிஜேபி விடுமா என்ன ? அவங்க கேட்கிறத கொடுக்க பரிசீலிக்கலாமேனு ஒன்றிய அரசுக்கும் மணிப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுக்குது. உடனே போராட்டம் வெடிக்குது… 

உடனே இந்த பிஜேபி சொம்புகள் சொல்வார்கள், அது கோரிக்கை தானேனு. அதுக்கு ஏன் போராட்டம்னு… அட முட்டாபயலே 10% இடஒதுகீடு கூட இன்னும் செல்லுமா செல்லாதா தெரியாத நிலையிலே அது இப்ப திணிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு வராதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குள்ள அவன் நுழைஞ்சு எல்லாத்தையும் அபகரிச்சுடுவான்.

இந்த கூட்டத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து தராதேனு சொல்றங்க. ஆனா அரசு மெளனமா இருக்கு. ஏன்னா இந்த ஊருக்குள்ள இருக்கிற கோஷ்டி அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டும் கும்பல். மலைமேல இருக்கிற பழங்குடியினர் அப்படியில்லை. கூடுதலாக அதில் பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள். அந்த காண்டு வேற. பழங்குடியினரை தீண்டதகாதவர்கள் சொல்லி ஒதுக்கி வைக்கிர மத நாய்களுக்கு, அவன் யார் கும்பிட்டா என்னா ? இந்திய ஜனாதிபதியின் நிலைமை என்ன ? அவர் பழுங்குடியினர் என்றே அவரை அழைக்கமால் அரசு விழாக்கள் நடக்கிறது. அதை கேட்க வக்கில்லாத இந்த கும்பலுக்கு இதை கேட்க அருகதை உண்டா ? அப்புறம் அவன் உங்க வர்ணாசிரம கடவுளை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அவன் பழங்குடியினர் தான். அதை உங்க கடவுளே நொட்ட நினைச்சாலும் முடியாது. அது அவனோட உரிமை. நீ காட்டை வாங்கி என்ன செய்ய போறேனு அவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். அவன் போராடுறான். சண்டைபோடுறான். அதுக்கு தான் நீ அவன் வீட்டு பொம்பளைகளை நிர்வாணமா ரோட்ல கூப்டுவந்தே. இது அரசு ஆசிர்வாதத்தோட நடந்ததுனு அவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். மனசாட்சி உள்ளவனுக்கு புரியும். 

இன்னைக்கு அவங்க, நாளைக்கு நாம. என்னடா இப்டி சொல்றேனு நினைக்காதீங்க… இங்க இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலையோட கனிம வளம் படி. சுத்தி சுத்தி நாலு வழி எட்டுவழி சாலையெல்லாம் எதுக்கு ? கனிம வளங்களை காலி செய்ய தான். ஆனா அவன் அளவுக்கு எல்லாம் நாம எதிர்க்கமாட்டோம். ஏன்னு உங்களுக்கே தெரியும்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...