முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைகளில் தோன்றும் சாதி ஏற்றத்தாழ்வு..! சினிமாவின் நகர்வில் எது தேவை..?

அந்த படத்தில் அவர் பெரிய பண்ணையக்காரர். அவருக்கு ஒரு ப்ரண்ட். ஆனா அவரு சாதி அந்த பண்ணையக்காரர் சாதிக்கு கீழ தான். இங்கே சனாதன இந்து மதம் அப்டிதானே இருக்கு. என்னதான் ப்ரண்டா பழகினாலும் பண்ணையகாரருக்கு இவர் வேலைக்காரர் தான். நம்பிகையான நட்பான வேலைக்காரர். அது ஒன்னும் தப்பில்லை. இந்த சூழலில் ரெண்டு பேரும் ஒரு பங்ஷனுக்கு போறாங்க… அங்க அந்த பண்ணையக்காரர் அவர் பக்கத்தில அவரோட நண்பர உக்காந்து சாப்பிட சொல்ல… அங்க இருக்கிற எல்லாரும் அத எதிர்க்கிறாங்க, சாப்பிடமாட்டோம்னு எந்திரிச்சு நிக்கிறாங்க, ஏன்னா சாதி. உடனே பண்ணையக்காரரும்.. அவளோதானே டேய் எந்திரிடானு நண்பனை பார்த்து சொல்லவும், நண்பன் சொல்றானு அவனும் எந்திரிக்கிறான். எல்லாரும் சாப்பிட தொடங்கியதும், இந்த பண்ணையக்காரர் இலையை மூடிட்டு சாப்டாம போய்டுறார். நட்பு தான் பெருசுனு. இந்த படம் நல்லா ஓடுச்சு. இந்த சீன் பார்த்து சில்லறையை சிதறவிட்டவங்க உண்டு.



இப்ப இப்படி யோசிப்போம்.. ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ப்ரண்ட் நான் ஏண்டா இங்க உக்காந்து சாப்பிட கூடாதுனு ஊரை பார்த்து உரக்க கேட்டிருந்தா ? 

ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ஏண்டா இவன் சாப்பிட்டா உங்களுக்கு என்னடா பிரச்சினை.. நீயும் வாய்ல தானே சாப்பிடுறேனு கேட்டிருந்தா ?

இது ரெண்டுமே அங்க நடக்கல. அதுனால அது நல்ல படம். ரெண்டு ஒன்னு நடந்திருந்தாலும் அது சாதி படம். இவ்ளோதான் இங்க இருக்கிற சாதி பட புரிதல்.

இன்னொரு படத்தில அது சுயசாதி உறவு முறை சிக்கல் பேசும் படம் தான். அதில ஊரே கிளம்பி சாமி கும்பிட போது. குலசாமி. ஊர்ப்பெரியவரை கூப்பிடும் போது அவர் சொல்லுவாரு . இதுக்குதானே போறிங்க.. அதான் எனக்கு இங்கயே கிடைச்சிருச்சே என்பார். அவர் கையில் சரக்கும் கறியும் வச்சிருப்பாரு. அதாவது தண்ணியடிச்சு கறி சாப்பிடதானேடா போறிங்க… இதுக்கு ஏண்டா நா அங்க வரனும் என்பார். உடனே எதிர் ஆள் என்னப்பா இப்படி சொல்றே… நம்ம சாதி சனமெல்லாம் ஒன்னுமண்ணா கூட வேண்டாமா என்பார். உடனே அந்த பெருசு… கோவிலுக்கு சனம் போன சரி. சாதி எதுக்கு போகுது என்பார். இந்த காட்சி எல்லாமே சுயசாதிக்கு உள்ளயே பேசிக்கொள்வார்கள். எடுத்தவரும் அதே சாதி தான் போல. ஒருவேளை அந்த பெருசு வேற சாதியாக இருந்து இந்த வசனத்தை பேசி இருந்தால்… இயக்குநர் வேறு சாதியாக இருந்தால்… போச்சு. அது சாதீப்படம்.

இது சாதி படம் இது சாதீ இல்லாத படம்னு இங்கே எதுவுமே இல்லை. ஒன்னு சுயசாதி படம். இல்லாட்டி ஒரு சாதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுற படம். மூணாவது இது ரெண்டுலயும் வெளிப்படையா சிக்காம, கவனிங்க வெளிப்படையா சிக்காம கல்லா கட்ட மட்டுமே வரும் படம்.  

பெரும்பாலான படங்கள் இங்கே ஒரு சாதி கட்டமைப்பில் தான் இருக்கும். பெண் பெருமை பேசிய படம் கூட இலைமறை காயாக சாதி இருக்கும். புதுமைப்பெண் படத்தில் ரேவதியை பார்ப்பன பெண்ணாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் காட்டுவார்கள். ஏன் ? பெரும்பாலான விசு படங்கள், பாலசந்தர் ஷங்கர் படங்களில் எல்லாம் கதாபாத்திரங்கள் பெயர்களில் அவர்களின் சாதி தெரியும்படியாக பார்த்துக்கொள்வார்கள். இல்லையேல் வீட்டில் அவர்கள் சாமி கும்பிடும் இடத்தில் இவர்கள், அவர்கள் இல்லை என்பதை சொல்வதாக காட்சி அமைத்திருப்பார்கள். இந்தியன் படத்தில் லஞ்சம் கொடுக்க மறுக்கும் ஒருவரை கிரேசிமோகன் என்ற நாமம் போட்டவராகவும், லஞ்சம் வாங்கும் அதிகாரியை நல்ல கருப்பாக செந்திலை காட்டுவதிலும் கூட சாதி உண்டு. இது தவிர சில படங்களில் சாதியை சர்காஸ்டிக்காக சாடுவார்கள். கவுண்டமணி, சத்யராஜ் உள்ளிட்ட சில ஹீரோக்கள் சில படங்களில் அப்படியான வசனத்தை வைத்திருப்பார்கள். ஆனால் அதன் நோக்கம்... கைதட்டல். ஆனால் அதுவும் தேவைதான். கொஞ்சம் மட்டுப்படுத்தும். அல்லது கிண்டலாவது செய்யும். 

இங்க சுயசாதி படங்கள் அதிகம் வந்திருக்கிறது. தேவர்மகனும் அப்படித்தான். முத்துராமலிங்கமும் அப்படித்தான். ஆனால் இரண்டையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. கூடாது. இவை இரண்டும் சுயசாதி பெருமை பேசும் படங்கள். கர்ணனும், பரியேறும் பெருமாளும் பேசிய விசயங்கள் முக்கியமானவை. இது பேசியது சாதி வேற்றுமையால் விளையும் கொடூரங்களை. அசுரன் மெட்ராஸ் பேசியவை முக்கியமானவை. அதில் சில காலக்கோடுகள் தவறாக இருக்கலாம். இயக்குனரின் சில பார்வைகள் தவறாக இருக்கலாம். அதனை விமர்சிக்கவும் செய்யலாம். ஆனால் மறுதலிக்க முடியாது. கூடாது. மதயானைகூட்டம் சுயசாதி படம் தான். ஆனால் அது பேசியது சுயசாதி நரகல்களை. கூர்ந்து கவனியுங்கள். இவர்களை தவிர்த்துவிட்டால் நமக்கு யார் கிடைப்பார்கள். வடக்கே கவனியுக்கள் இராமயாணம், விஷ்ணு புராணம், அனுமார் என எடுக்க வந்துவிட்டார்கள். இல்லையேல் நாட்டை காப்பாற்ற போராடும் கதைகள் என இப்போது சிக்கிவிட்டது. இதனை நான் சொல்லவில்லை, அனுராக் சொல்கிறார். இந்தி சினிமா புது முயற்சிகளை விட்டு விலகி நீண்டகாலமாகி விட்டது என்கிறார்.

சினிமாவில் அரசியல் இல்லை, சாதியில்லை எவரேனும் சொன்னால் போடா முட்டாள் என சொல்லிவிடுங்கள். இருக்கிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பது முக்கியம். அதனை வைத்து தான் நாம் உரையாட தொடங்க முடியும். முதலில் படம் பாருங்கள். இந்த இயக்குனர், இந்த தயாரிப்பாளர் என்ற முன்முடிவுகள் இல்லாமல் படமாக பாருங்கள் . பிறகு பேசுங்கள். ஏன் இப்ப இதனை சொல்ல வேண்டிய அவசியமெனில், வடக்கே கோடிகளை கொட்டுகிறார்கள். இந்த மாதிரி எடுங்கள் என. இங்கேயும் அப்படி முயற்சி செய்தார்கள் ஆனால் படம் எடுபடவில்லை. அப்படி அவர்களிடம் சிக்கிவிட்டால் சநாதன நீதிகளை படமாக எடுப்பார்கள். அது வரும் தலைமுறைகளை மீண்டும் அடிமையாக்கும். ஒரு புத்தகம் கொண்டு சேர்க்கும் விடயங்களை விட ஒரு திரைப்படம் கொண்டு சேர்க்கும் வேகமும் விடயமும் முக்கியம். படம் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அதைவிட முக்கியம் அதுகுறித்து உரையாட கற்றுக்கொள்ளுங்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...