முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

I.N.D.I.A கூட்டணியில் அனைவரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை.. தேர்தலில் வெற்றி கிட்டுமா..?

இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ? 

இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ? 

இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ? 

இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ?




இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி. 

இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே... 

விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.  

ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவனியுங்கள். இவர்கள் நாட்டிற்கு எவ்வளவு பெரிய கேடு என்பது புரியும்.

தமிழ்நாட்டில் செந்தில்பாலாஜி, இப்போது பொன்முடி என விரட்டுகிறார்கள். ஆனால் யோசியுங்கள் இது வெறும் ஊழலா ? இல்லை அதிகார திமிரடி மிரட்டலா ? குட்கா வழக்கில் விரட்ட, தலைமை செயலகத்தில் மிரட்ட உடனே ஆட்சியாளரின் காட்சி மாறியது, உசூர் நான் உங்கள் அடிமை என்றார் ஒன்றிய அரசை நோக்கி. இதுற்கு தான் ஊழல் விரட்டல் அப்போது பயன்பட்டது. இதோ இப்போது சரத்பவார் குடும்ப மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரை அதிகார அமைப்புகள் மூலம் விரட்டி விசாரித்து அடிமையாக்கிவிட்டார்கள். இப்போது யார் மீது பல ஆயிரம்கோடி ஊழல் குற்றச்சாட்டு வைத்தார்களோ இன்று அவரே அங்கே நிதி அமைச்சராக இருக்கிறார். எனில் இது ஊழல் ஒழிப்பா இல்லை எங்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொள் இல்லை உன்னை என் அதிகார அமைப்புகள் மூலம் விரட்டுவேன் என்ற வெறி. 

இதனை ஒவ்வொரு மாநில கட்சியும் எதிர்கொள்கிறது. இன்று ஊழலில் உற்றுக்கண்ணே பிஜேபி தான். இதோ கர்நாடகத்தில் அவர்கள் தோற்க அவர்கள் நடத்திய 40% ஊழல் தாண்டவமும், மத தாண்டவமும் தான் காரணம். ஆனால் அதற்காக மட்டுமே அதனை எதிர்க்கவில்லை. என் எதிர்கால சந்ததிக்கு இந்த மூடர்கூட பிஜேபி சொல்லும் இந்த இந்தியா வேண்டாம். இவர்கள் பேசும் மதவாத இந்தியா வேண்டவே வேண்டாம். 

இன்னும் காலமிருக்கிறது. 

மிரட்டல் காட்சிகள் இருக்கிறது. 

கலவரங்கள் இருக்கிறது. 

நாடகங்கள் இருக்கிறது. 

ஆனால் நாம் உரக்க சொல்லவேண்டியது ஒன்றுதான். இந்த பிஜேபியின், ஆர் எஸ் எஸின் பார்ப்பனிய ஏவல்களில் இருந்து விடுபட்ட இந்தியா வேண்டும். நமக்கு நேரு கனவு கண்ட காந்தி உருவாக்க நினைத்த இந்தியா வேண்டும். அதில் குறைகள் இருந்தாலும் நம் உரிமை இருந்தது. அதனை மட்டும் நினைவில் கொள்ளுவோம்... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...