முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அது எப்படி இந்த வயசுல மன அழுத்தம்..? உடையும் உருட்டு நியாயமாயிது..!

பதினாறு வயசுல என்ன மன அழுத்தம்னு நிறையபேரு கேட்கிறத பார்க்க முடியுது... இந்த கேள்வியை கேட்கிறது பெற்றோர்னா.... கொஞ்சம் நிதானமா படிங்க... 


மனஅழுத்தத்திற்கும் வயசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வெளிப்படுத்தற விசயத்தில வேணா வயசு தொடர்பாக இருக்கலாம். மற்றபடி மன அழுத்தம்ங்கிறது எல்லா உயிரினங்களுக்கும் எல்லா காலத்திலும் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட யானை அதிக மன அழுத்தத்தில் இருந்து பிறகு மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டதாக எல்லாம் செய்தி உண்டு (சிறிய நினைவூட்டல்). 

அதுனால இந்த வயசுல என்ன அழுத்தம்ங்கிற முட்டாள்தனமான வாதங்களை விட்டுவிட்டு குழந்தைகளிடம் பேசுங்கள்.

கோச்சுக்காதிங்க, இங்கே பாதி பெற்றோர் வெற்று அதிகாரத்தில் தான் அம்மா அப்பானு வாழ்றிங்க... உங்க வெற்று பெருமைக்கு அவன் / அவள் பாடுபடனும் குதிக்கிறிங்க....  

கடந்த மூணு மாசம் மட்டும் அவ்ளோ மோசமான பெற்றோர்களை பார்த்தேன். அதுவும் அந்த காலேஜ்ல படிச்சா தான் பெருமனு தரதரனு கொண்டு போய் சேர்த்து, அத மறைக்க அவனுக்கு பைக் ஆப்பிள் போனுனு வாங்கி கொடுத்த நாடககங்களையும் பார்த்தேன். 

உங்க பணம் மதம் சாதி அதிகாரம் வெற்றுப் பெருமைனு எல்லாத்தையும் அவங்க மேல தான் திணிக்கிறிங்க. எல்லாம் செஞ்சுட்டு நா அவங்களை எப்படி பார்த்துகிறேன் தெரியுமானு உங்களுக்கு நீங்களே பூ போட்டுகிறிங்க.... 

உண்மையில அந்தந்த வயசு ஈர்ப்பு தேடல் சார்புனு இருக்கும். நீங்க எல்லாரும் அத தாண்டிதான் வந்திருப்பீங்க. நீங்க ஒரு பொம்பள புள்ளைய வெறிக்க வெறிக்க பார்க்கிறத வயசு இயல்பு கடந்திங்க. ஆன தற்போது வாட்சப்ல பேசுறது வாய்ச்சுருக்கு. தேடலும் ஈர்ப்பும் ஒன்னுதான். வெளிப்பாடுதான் வேறு, ஆனா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இந்த காலத்து பசங்கனு ராகம் பாடுரிங்க.... 

நீங்க ரஜினிக்கு பூ போட்டீங்க .. உங்க பையன் டிடிஎஃப் வாசனுக்கு பூ போடுறான். உங்களுக்கு நீங்க செய்தது நியாயம்ன உங்க பிள்ளைக்கும் அவன் செய்வதும் நியாயம். அவ்ளோதான்.

பேசுங்க. நாங்க இருக்கோம்னு பேசுங்க. என்ன ஆனாலும் வீட்டுக்கு வா நாம பார்த்துக்கலாம்னு சொல்லுங்க. அதுக்கு முன்னாடி நீங்க கொஞ்சம் சரியா இருந்துகோங்க. உங்களோட பாதி பிரதிபலிப்பு தான் உங்க வாரிசுகள். அந்த பாதி சரியா இருந்தா சமூகம் கொடுக்கிற அழுத்தத்தை எதிர்கொள்ள முடியும்.

கொஞ்சம் அவங்களுக்குனு பெர்சனல் இடம் கொடுங்க. அந்த பெர்சனலை உங்கட்ட பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கொடுங்க. அந்த வாய்ப்பு கொடுக்க நீங்க அவங்க உலகத்தில இருக்கனும். குழந்தைகளை வளர்க்க முயற்சி செய்யாம கூட சேர்ந்து வளர முயற்சி செய்ங்க. அது போதும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...