முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவை தானா இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்..? சமூக பார்வையில்

 இந்தியாவும் - ஹேப்பி ஸ்ட்ரீட்டும் :

இந்தியா என்பது ஒரு சாதி சமூகம். பிறகு மத சமூகம். இங்கே சாதி தான் பிரதானம். சாதியை காக்கதான் இங்கே மதம் இருக்கிறது. மதம் காக்க கடவுள் இருப்பதாய் நம்புகிறார்கள். இந்த தேசத்தின் அடிப்படை சாதி பிறகு மதம்.

மனிதன் மண்ணாங்கட்டி எல்லாம் அப்புறம் தான். 

அப்படியான ஒரு மூட தேசத்தில் கொண்டாட்டங்கள் எதன் அடிப்படையில் இருக்கும் ? சாதியின் அடிப்படையில். மதத்தின் அடிப்படையில். இரண்டுமே முட்டாள்தன அடிப்படையிலும், மூடத்தன கூறுகளாலும் நிறைந்திருக்கும். அங்கே மனிதராய் இணைய வாய்ப்பில்லை. சாதியாய் இணையலாம். மதமாய் இணையலாம்.

ஒவ்வொரு ஊரியிலும் அரசின் ஆலயங்கள் இருக்கும். தனியார் ஆலயங்கள் இருக்கும். அரசு ஆலய கொண்டாடங்களில் அதிகாரம் ( பணம், அரசியல், சாதி ) மட்டுமே முக்கியத்துவம் பெறும். தனியார் ஆலயங்களில் சொல்லவே வேண்டாம் சாதிதான் கொண்டாட்டத்தில் முதன்மை பெறும். பக்தி என்ற பெயரில், வழிபாடு என்ற பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். அவ்ளோதான். அதில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது. இதே தான் ஊர்த்திருவிழாவிலும். 

தெருக்கட்டு பொங்கல் என கொண்டாடுவதும் பெரும்பாலும் ஒரே சாதிக்கட்டு அதிகம் இருக்கும் தெருக்களில் தான்... இதுவும் ஒரு விதத்தில் சாதி என்ற நாய்க்கு பக்தி என பிஸ்கட் போடும் வழக்கம் தான். அங்கும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. விதிவிலக்காக சில எலைட் ஏரியாக்கள் உண்டு. ஆனாலும் அங்கும் அது நாடகதனம் தான். 

எனில் இங்கே உண்மையான கொண்டாட்டங்களுக்கு ஏது வழி..? 

கொண்டாட்டங்களுக்கு வழி இல்லாத சமூகம் சினிமா மாயையிலும் பெட்டிங் கிரிக்கெட்டிலும் தன்னை தொலைத்து கத்திக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் இவர்கள் மனிதர்களாக ஒரளவு இணைய முடிகிறது. அங்கும் விஷ வேலைகள் நடந்துகொண்டு இருந்தாலும் அது முழுமையடைய இன்னும் பல பத்தாண்டுகள் ஆகுமென நம்புகிறேன்.

இந்த சூழலில் தான் “ ஹேப்பி ஸ்டீரிட்” நிகழ்ச்சிகள் நடக்கிறது: விளையாட்டு, போட்டிகள், இசைநிகழ்ச்சிகள் என சிறுவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் படி அது இருக்கிறது. அது ஒரு கொண்டாட்ட மனநிலையில் மனிதர்களை மாற்றுகிறது. விருப்பம் ஆர்வம் இருந்தால் நீங்கள் அங்கே பங்கேற்கலாம். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்தமாய் கொண்டாடி தீர்க்கலாம்.



கோவில் விழாக்களில் நீங்கள் பார்க்காத ஆபாச ஆட்டங்களா ? கட்சி மேடைகளில் நீங்கள் பார்க்காத ஆபாச ஆட்டங்களா ? இவையெல்லாம் விட அங்கே எதுவும் மோசமாக நடந்துவிடவில்லை. 

சிலர் உளருவது போல சினிமாவை எடுத்துவிட்டால் இந்த தேசத்தில் மீதம் இருப்பது சாதி கொண்டாட்டம் மட்டுந்தான். அவர்கள் நோக்கமும் அதுதான்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் இறப்பிற்கு கூடியது மதக்கூட்டமா? சாதிக்கூட்டமா ? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது இவர்கள் ஏன் பொதுக் கொண்ட்டாட்டங்களை மறுக்கிறார்கள் என்ற உண்மை.

மக்களை வெறும் மனிதர்களாக கூடுவதற்கு என்னென்ன வழிமுறைகளை நாம் கண்டு பிடித்தாலும் அதனை வெறுக்க அல்லது அழிக்க சங்கீகள் கூட்டமாய் கிளம்பி வருவார்கள். கலாச்சாரம் பண்பாடு என பேசி வருவார்கள். அப்படி வரும் போது நீங்கள் அவர்களிடம் பேசி நேரம் விரையம் செய்யாதீர்கள் உங்கள் நடுவிரல் அழகாய் இருக்கிறதா என கேளுங்கள். அது போதும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...