முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவை தானா இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்..? சமூக பார்வையில்

 இந்தியாவும் - ஹேப்பி ஸ்ட்ரீட்டும் :

இந்தியா என்பது ஒரு சாதி சமூகம். பிறகு மத சமூகம். இங்கே சாதி தான் பிரதானம். சாதியை காக்கதான் இங்கே மதம் இருக்கிறது. மதம் காக்க கடவுள் இருப்பதாய் நம்புகிறார்கள். இந்த தேசத்தின் அடிப்படை சாதி பிறகு மதம்.

மனிதன் மண்ணாங்கட்டி எல்லாம் அப்புறம் தான். 

அப்படியான ஒரு மூட தேசத்தில் கொண்டாட்டங்கள் எதன் அடிப்படையில் இருக்கும் ? சாதியின் அடிப்படையில். மதத்தின் அடிப்படையில். இரண்டுமே முட்டாள்தன அடிப்படையிலும், மூடத்தன கூறுகளாலும் நிறைந்திருக்கும். அங்கே மனிதராய் இணைய வாய்ப்பில்லை. சாதியாய் இணையலாம். மதமாய் இணையலாம்.

ஒவ்வொரு ஊரியிலும் அரசின் ஆலயங்கள் இருக்கும். தனியார் ஆலயங்கள் இருக்கும். அரசு ஆலய கொண்டாடங்களில் அதிகாரம் ( பணம், அரசியல், சாதி ) மட்டுமே முக்கியத்துவம் பெறும். தனியார் ஆலயங்களில் சொல்லவே வேண்டாம் சாதிதான் கொண்டாட்டத்தில் முதன்மை பெறும். பக்தி என்ற பெயரில், வழிபாடு என்ற பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். அவ்ளோதான். அதில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது. இதே தான் ஊர்த்திருவிழாவிலும். 

தெருக்கட்டு பொங்கல் என கொண்டாடுவதும் பெரும்பாலும் ஒரே சாதிக்கட்டு அதிகம் இருக்கும் தெருக்களில் தான்... இதுவும் ஒரு விதத்தில் சாதி என்ற நாய்க்கு பக்தி என பிஸ்கட் போடும் வழக்கம் தான். அங்கும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. விதிவிலக்காக சில எலைட் ஏரியாக்கள் உண்டு. ஆனாலும் அங்கும் அது நாடகதனம் தான். 

எனில் இங்கே உண்மையான கொண்டாட்டங்களுக்கு ஏது வழி..? 

கொண்டாட்டங்களுக்கு வழி இல்லாத சமூகம் சினிமா மாயையிலும் பெட்டிங் கிரிக்கெட்டிலும் தன்னை தொலைத்து கத்திக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் இவர்கள் மனிதர்களாக ஒரளவு இணைய முடிகிறது. அங்கும் விஷ வேலைகள் நடந்துகொண்டு இருந்தாலும் அது முழுமையடைய இன்னும் பல பத்தாண்டுகள் ஆகுமென நம்புகிறேன்.

இந்த சூழலில் தான் “ ஹேப்பி ஸ்டீரிட்” நிகழ்ச்சிகள் நடக்கிறது: விளையாட்டு, போட்டிகள், இசைநிகழ்ச்சிகள் என சிறுவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் படி அது இருக்கிறது. அது ஒரு கொண்டாட்ட மனநிலையில் மனிதர்களை மாற்றுகிறது. விருப்பம் ஆர்வம் இருந்தால் நீங்கள் அங்கே பங்கேற்கலாம். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்தமாய் கொண்டாடி தீர்க்கலாம்.



கோவில் விழாக்களில் நீங்கள் பார்க்காத ஆபாச ஆட்டங்களா ? கட்சி மேடைகளில் நீங்கள் பார்க்காத ஆபாச ஆட்டங்களா ? இவையெல்லாம் விட அங்கே எதுவும் மோசமாக நடந்துவிடவில்லை. 

சிலர் உளருவது போல சினிமாவை எடுத்துவிட்டால் இந்த தேசத்தில் மீதம் இருப்பது சாதி கொண்டாட்டம் மட்டுந்தான். அவர்கள் நோக்கமும் அதுதான்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் இறப்பிற்கு கூடியது மதக்கூட்டமா? சாதிக்கூட்டமா ? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது இவர்கள் ஏன் பொதுக் கொண்ட்டாட்டங்களை மறுக்கிறார்கள் என்ற உண்மை.

மக்களை வெறும் மனிதர்களாக கூடுவதற்கு என்னென்ன வழிமுறைகளை நாம் கண்டு பிடித்தாலும் அதனை வெறுக்க அல்லது அழிக்க சங்கீகள் கூட்டமாய் கிளம்பி வருவார்கள். கலாச்சாரம் பண்பாடு என பேசி வருவார்கள். அப்படி வரும் போது நீங்கள் அவர்களிடம் பேசி நேரம் விரையம் செய்யாதீர்கள் உங்கள் நடுவிரல் அழகாய் இருக்கிறதா என கேளுங்கள். அது போதும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...