யாருடா நீங்கலாம் நல்லவன்னு காட்டிக்க ஒரு டிராமா ஸ்டேஜ் பண்றீங்க பாரு... அத தான் சகிச்சுக்க முடியல..!
"நல்ல” என ஒரு சொல் தமிழில் உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழிக்கிறது.
நல்ல மகனா இருப்பது நல்ல கணவனாக, நல்ல தொழிலாளியாக நல்ல பக்தனாக என இந்த ”நல்ல” நீடிக்கும்...
இந்த நல்ல என்பதற்கு சமூகம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்பது "கொத்தடிமையாக இரு" என்பதாக இருக்கும்.
உன் மேல் என்ன அதிகாரம் செலுத்தினாலும் நீ ஏன்னு கேட்கப்பிடாது... எல்லா மதங்களும் அப்டிதான்.. ஏன்னே கேட்க கூடாதுனு இருக்கும். இந்த மதங்கள் எல்லாம் கூடி நல்ல என்ற சொல்லு எல்லா உறவுகளிலும் நிலைகளிலும் விளக்கம் கொடுத்து வைத்திருக்கும். அதன் படி அந்த மத கடவுளே வாழ்ந்தது இல்லை. அது வேறுவிடயம். ஆனாலும் இந்த மத சமூகம் அந்த “நல்ல” என்ற ஒன்றில் நிலைபெற போராடிக்கொண்டிருக்கும்.
சரி ’நல்ல’ வாழ என்ன செய்யனும். ரொம்பவே சிம்பிள். நீங்க இந்த உலகத்தில வாழ வந்த மத்த கோடிக்கணக்கான உசுரு போல ஒரு உசுரு. எதையும் காப்பாத்த அழிக்க வரல. நா இல்லாட்டியும் இந்த உலகம் அது பாட்டுக்கு செயல்படும்.
நா இருந்தாலும் செயல்படும். யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செயல் செய்யல. நானும் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க வரல. எனக்கு இதெல்லாம் புடிச்சிருக்கு அதனால செய்றேன். என் வீட்ல இதெல்லாம் எனக்கு பயிற்சி கொடுத்திருக்காங்க. அதுனால இந்த மாதிரி நான் செய்றேன். வேறு ஒருத்தனுக்கு வேற ஒன்னுல பயிற்சி கொடுத்திருக்காங்க.. அவன் அப்டி செய்றான்.
நான் படிச்சத வச்சு வாழ்வை இப்படி புரிஞ்சு வாழ்றேன்.. அவன் அவன்படிச்சதை வச்சு அவன் புரிஞ்சபடி வாழ்றான். இவ்ளோதான் வாழ்க்கைனு நம்பிட்டா போதும்.இந்த நல்லங்கிற சர்டிபிகேட் விட்டு வெளியே வந்திடலாம்.
நல்ல யோசிச்சா இந்த சர்டிபிகேட் கையில வச்சிருக்கவன் எல்லாம் ஒரு ஆள்பிடிக்கிற புரோக்கர் தான். இதெல்லாம் நல்லது வெளிப்படையா சொல்லுங்க ஒரு குரூப் வந்து கூப்டு போகும். அதெல்லாம் நல்லதுனு சொன்னா இன்னொரு க்ரூப். இவ்ளோதான் இங்க.
நீங்க கூட்டமா வாழ முயற்சி செய்ங்க. கும்பல்ல இருக்க முயற்சி செய்யாதீங்க. கூட்டமா வாழ நிறைய வாழனும்.. கும்பலா வாழ எதுவுமே தேவையில்லை.
நிறைய வாழ, அல்ரெடி வாழ்ந்துட்டு இருக்கிற கொஞ்சம் திருப்பி பாருங்க. எதெல்லாம் சுய தேடல், எதெல்லாம் திணிப்புனு... நிறைய புரியும். அந்த புரிதல் படி வாழுங்க.. அது போதும்
*பி.கு : இது ஒரு "நல்ல" பதிவாக இருக்க வேண்டும் என நான் எண்ணி பதிவு செய்யவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக