முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லி அடித்த 'கில்லி' விஜய்க்கு லைஃப் டைம் படம்தான்

கில்லி உண்மையிலே நடிகர் விஜய்க்கு ரொம்பவே முக்கியமான படம். 




அப்பா தயாரிப்பில் நடிக்க தொடங்கிய விஜய்க்கு (1992) பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் பூவே உனக்காக (1996). அதுவரை குடும்ப ஆடியன்ஸ் என்படும் ஜெனரல் ஆடியன்ஸ் விஜய் பக்கம் திரும்பவில்லை. இந்த படம் விஜய் பக்கம் திரும்ப வைத்தது. அது வரைக்கும் வந்த படங்கள் எல்லாமே விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்த படமாகவே அமைந்து போனது. அடுத்து காதலுக்கு மரியாதை (1997 ) இன்னும் அடுத்த கட்டம் அவரை நகர்த்தியது.


காதலுக்கு மரியாதை விஜய் ஒரு டிரெண்ட் செட்டராக மாறிப்போனார். கதையும் மாறிபோனது. தொடர்ந்து அப்படியான படங்களே அமைந்து போனது. காதலுக்காக விஜய் என்றே கதைகள் அமைந்து போனது. ஒரு கட்டத்தில் அது மெல்ல தேய தொடங்கியது. ஏராளமான காதல் கதைகள் வந்து குவிந்தன. 


சரி ஆக்ஷன் பிளாக் என பகவதி, யூத், தமிழன் என முயற்சித்தும் செல்ஃப் எடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் அவரை மீட்க வந்த படம் தான் திருமலை (2003). கொஞ்சம் ஓவர் ஹீரோயிசம் கொஞ்சம் எமோசனல் என கலந்துகட்டிய படம். விஜய் இனி எந்த பாதையின் போகலாம் என்பதை திர்மானமாக சொல்லியபடமும் .


இந்த சூழலில் தான் ஒக்கடு படம் கில்லியாக விஜயிடம்(2004) செல்கிறது. ஏற்கனவே பரபர என கதை சொல்லும் தரணி டீமிடம் இந்த கதை சிக்கியது. அவர்கள் இன்னும் மெருகேற்ற அதுவரை இருந்த விஜய் மேனரிசத்தையே அந்த படம் மாற்றியது, அதன் பிறகு விஜய் கொஞ்சம் தெளிவானர். கில்லி அவரை 'சூப்பர் ஸ்டார்' இருக்கையை நோக்கி நகர்த்திய படங்களில் ரொம்ப முக்கியமானது. 


சில படங்கள் சில ஹீரோக்களுக்கு லைஃப் டைம் படமாக அமைந்து போகும். விஜய்க்கு அப்டி அமைந்த மூன்றாவது படம் கில்லி. முன்னதாக பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை அமைந்து போனது. இன்னும் சிலருக்கு துள்ளாத மனமும் துள்ளும் சொல்லுவார்கள். என் கணக்கில் அது இல்லை.


அவரோட செட் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பூஸ்டர் அது. மற்ற நடிகர்களுக்கும் லைஃப் டைம் படம் கிடைச்சது ஆனா லேட்டா கிடைச்சது. ( உடனே பருத்தி வீரன் கார்த்தினு வர வேண்டாம்.. அவரு விஜய்க்கு ஜூனியர் ). 🐐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...