முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழியா... இசையா... எது பெருசு..? இளையராஜா Vs வைரமுத்து போர் யார் மேல தப்பு..!

கோழியா  முட்டையாங்கிற மாதிரி பாடலா இசையானு உருண்டுகிட்டு இருக்காங்க..! 





உண்மையிலே வைரமுத்து அந்த பேட்டியில் தெளிவாக சொல்லியிருக்கிறார். சில நேரங்களில் இசை, சில நேரங்களில் பாடல் என சொல்லியிருக்கிறார். அது உண்மையும் கூட. ஆனால் சொல்லியவர் வைரமுத்து என்பதால் பலருக்கு ஒவ்வாமை. அவரவர் கலருக்கு ஏற்றார் போல சிலர் ராஜாவை இழுக்க சிலர் வைரமுத்துவை இழுக்க இது போக கங்கை அமரன் ஏற்றிவிட்ட ஏணி பற்றியெல்லாம் பேசுகிறார். ( அத யார் சொல்றா பாத்திங்களா ? ) 

 

செய்யுள் : கவிதை : பாடல் :


செய்யுள் என்பது இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் ஒரு பாடல் எனலாம். செய்யுளில் அலங்கார சொல்லைவிட கருத்தே முக்கியம் என இருக்கும். நிறைய இருந்தாலும் எல்லாருக்கும் புரிந்த ஒரு செய்யுளை சொல்கிறேன். 


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

 ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

இதில் இசைத்தன்மை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இசைத்தன்மை என சொல்கிறேன். இசையென சொல்லவில்லை. இசைத்தன்மை என்பது வாசிக்கும் முறையே ஒரு தாளக்கட்டுக்குள் இருக்கும். ”முத்தைதரு பத்திதிருநகை “ போல அமையும் இவையெல்லாம் செய்யுள் எனலாம். ஒரு செய்யுளை பாடலாக்க முடியுமா என்றால் அதன் சந்ததோடு மட்டுமே முடியும். இங்கே செய்யுள் எழுதியவரே இசைக்கு சொந்தக்காரர்.


அடுத்து கவிதை. இதில் கொஞ்சம் அதிகம் மெளனங்கள் இருக்கும். 

ஆயிரந்தான் கவிசொன்னேன்

அழகழகாப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஒம்பெரும

ஒத்தவரி சொல்லலியே!


இதுவும் செய்யுள் போலத்தான். ஆனால் கொஞ்சம் இசைத்தன்மை குறைவாக, மெளனம் அதிகமாய் இருக்கும். ஒரு சிறந்த கவிதையை வாசிக்கும் போது நாம் நமக்குள்ளும் ஒரு மெளனத்தை உணரமுடியும். ஒரு கவிதை பாடலாக முடியும். ஆனால் வார்த்தைகளை இசைக்குள் அடக்க அதன் உச்சரிப்பு அல்லது வார்த்தைகளை மாற்றி அந்த கவிதை கொஞ்சம் சிதையும்.


எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்குவேற பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா?


இது கவிதை. இது பாடலாகும் போது கொஞ்சம் வார்த்தைகள் மாறியது. அது கவிதை தன்மையை கொஞ்சம் சிதைக்கிறது என்பதை உணரலாம்.


எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு…

உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா


இசை மொழியை அதன் உச்சரிப்பை இப்படி கேட்கிறது. அதனால் வரிகளை நீட்டி சுருக்கி அதனுள் பொறுத்தினார்கள். இங்கேயும் எழுத்தாளர் கொஞ்சம் இசைக்கு தன்னை தன்னுடைய வார்த்தைகளை கவிதை சொல்ல வரும் மொழியை விட்டுக்கொடுக்கிறார். 


பாடல் : இது வேறு களம். இது தான் காட்சி. இதுதான் காட்சியில் இருக்கும் மாந்தர்கள் நிலை. இதற்கு தான் பாட்டு என்றதுமே அங்கே கவிஞர் இல்லை. வார்த்தைகளை கோர்ப்பவர் வந்துவிடுகிறார். 

செய்யுள் எழுதுபவருக்கு வானமே எல்லை. நா சொல்ல வந்தது இதுதான் என நிற்பார்.

கவிஞருக்கும் அதுதான் நிலை. ஆனால் அது பாடலாகும் போது வேறு ஒரு வார்த்தையை கோர்ப்பார்.

பாடலாசிரியருக்கு மேற் சொன்ன இரண்டுமே இல்லை. அவர் அந்த காட்சி மீட்சி எல்லாம் கேட்டு ஒன்றை உருவாக்க முயல்கிறார். வெகு சிலரே அப்படி எழுதும் போது அது இசைத்தன்மையோட அமைந்து போகிறது. மற்ற எல்லாருமே கொடுக்கப்பட்ட டியூனுக்கு பாடல் எழுதுபவர்கள் தான். இங்கே இசை முதல் தன்மை பெறுகிறது. வரி இரண்டாம் தன்மை பெறுகிறது. வரியை இசை தாங்கி பிடிக்கிறது. அது விட்டுவிட்டால் அங்கே பாடல் நிக்காது. ஏனெனில் அது இசைக்கு உருவாக்கி பாடல். 


”குட்டிச்சுவத்தை எட்டிப்பார்த்தா உசுர கொடுக்க நூறு பேரு”. இந்த வசனத்தை இசை தான் பாடாலாக்குகிறது. ஆக இங்கே இசை முக்கியம். இசையை எடுத்துவிட்டார் அது வெறும் ஒரு வசனம்.


அலைவார் அவர் எல்லாம் தொலைவார்…

இந்த வசனம் தவறு

அலைவார் அவர் தானே அடைவார், இதில் வரி முக்கியம்.


இதுதான் பொதுவான வரையறை. இளையராஜாவே எம் எஸ் வி யோ ரகுமானோ அவர்களுக்கு இயக்குனரால் கொடுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று ஒரு இசையை உருவாக்குகிறார்கள். பாடலாசிரியரோ, கவிஞரோ இயக்குனர் உருவாக்கிய கதை மாந்தர் படி வரிகளை உருவாக்குகிறார்கள். இவர்கள் இருவரையும் ஒரு கட்டுக்குள் வைப்பது இயக்குனர் தான். 


இளையாராஜா சொல்லிய ஒரு டியூனை மறுதலித்து இது வேண்டாம் இன்னொன்னு என கேட்டு வாங்கிய பாடல்கள் அதிகம் இருக்கும். எனில் அங்கே இசையை உருவாக்கியவர் இளையாராஜா உருவாக்க வழி வகை செய்தவர் இயக்குனர் தானே. அவரும் இந்த இசை பாடல் லிஸ்டில் உண்டு.

சினிமா என்பதே கூட்டு முயற்சி. ஒருவர் ஒரு காட்சியை சொல்ல, இன்னொருவர் இந்த காட்சிக்கு இந்த டியூன் என உருவாக்க இன்னொருவர் இந்த வரிகள் என உருவாக்க… இப்டிதான் பாடல்கள் வருகிறது.

”தாந்தான் “ என்ற இறுமாப்பு வந்துவிட்டால் இப்படித்தான். இசை தான் முக்கியம். பாடல் தான் முக்கியம். உருட்டிகிட்டு இருப்பாங்க.

அதே டியூனுக்கு இன்னொரு பாடலும் எழுத முடியும்

அதே பாடலுக்கு இன்னொரு விதமாகவும் இசைக்க முடியும். 


எனில் எது முக்கியம் ? ஒரு ரசிகனுக்கு பாட்டு நல்லாருக்குனு சொன்னா அது இசைக்கும் சேர்த்துதான். ரெண்டுமே கன கச்சிதமா இருக்குனு அர்த்தம். அப்டி இல்லனா ரெண்டுமே அப்டி இல்லைனு அர்த்தம். அவ்ளோதான். 

ஒரு நல்ல இசை உங்களை ஆற்றுப்படுத்தும்

நல்ல இசையோடு கூடிய பாடல் நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தும்.

இது புரிஞ்சுகிட்டா போதும். ஆனா யாரையாச்சும் கொண்டாட யாரையாச்சும் சிறுமை செய்யனும்னு விதியா இருக்கிற காலகட்டத்தில கொஞ்சம் அசந்தா நம்மளா ஒரு குரூப் கூட சேர்த்துடுவாங்க.. உஷார்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...