முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...
சமீபத்திய இடுகைகள்

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...

எப்படியாக இருந்தாலும் மனோஜிடம் தோற்றுவிட்ட பாரதிராஜா

மனோஜ் : தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனரின் மகன். பாரதிராஜா படங்களில் சாதீயம் இருந்தாலும் தமிழகத்தின் கிராமங்களை கொஞ்சம் காட்டியவர் என்ற வகையில் அவர் படங்கள் தமிழ் சினிமாவின் புதியபாதை என சொல்ல முடியும். அவரை யொற்றி சிலர் அவரையும் தாண்டி சென்றார்கள். ஆனாலும் அவரின் பாதை தனிப்பாதைதான். மனோஜ். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக உச்சம் தொட வேண்டியவர். அவரின் முகம் இயல்பாகவே குற்ற உணர்ச்சி கதாபாத்திரத்திற்கு அப்டியே பொறுந்தி போகும் தன்மையுள்ளது. பல படங்களில் மனோஜ் நடித்திருந்தாலும் அல்லி அர்ஜூனா, கடல் பூக்கள் அவர் பயணத்தில் முக்கியமானது.  இரண்டு படங்களில் இறுதிக்காட்சியில் அவர் அந்த கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வியை கொண்டு வந்திருப்பார். ஆனால் இரண்டுமே கண்டுகொளப்படவில்லை.  பெரிய வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அவரும் அமைத்துக் கொள்ளவில்லை. பாரதிராஜா அவருக்கு கொடுத்த துவக்கம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன். கல்லையும் நடிக்க வைப்பார் என்பது பாரதிராஜா பற்றி சொல்லும் சொல். ஆனால் பாரதிராஜாவின் திரைகதையாக்கத்தில் ஒரு கல்லும் நடிகராக தெரியும் என்றே நான் ...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

Instagram Reelsல் கெத்தான பெண்கள்... கேலிக்கூத்தாகும் ஆண்கள்

எப்போது ரீல்ஸ் (Reels) பார்த்தாலும் அதில் பெண்களின் கவர்ச்சி ரீல்ஸ் , ஆண்களுக்கு அதற்கு வாய்ப்பில்லை... அதனால் சில கேலிக்கூத்துகளை செய்து வரும் ரீல்ஸ் ஒரு பக்கம். இரண்டுமே கண்களில் படும். இதனை தாண்டி சில முத்துக்கள்  அரிதாய்.  முதலில் பெண்கள். அவர்கள் அவர்களின் கவர்ச்சியை நம்பியே வருகிறார்கள். இப்படியெல்லாம் சம்பாதிக்கலாமா என்றால் இந்த கேள்வியை நடிகைகள் படத்தில் காட்டிய கவர்ச்சியில் கேட்டிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் இந்த ரீல்ஸ்கள். ஏன் யாரோ கட் சொல்லி வருவது மட்டுந்தான் நடிப்பா... சம்பாத்தியமா , அவர்களே கட் சொல்லி மொபைலில் எடுத்தால் அது தவறாகிவிடுமா ?  எதனை சொல்லி அவர்களை மதங்கள் அடக்கியதோ அதனை முன் வைத்து இப்போது சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். சும்மா திட்டிக்கலாம்... அங்கே அத்தனை லட்சம் வியூ ஆகுதே.... அதெல்லாம் பார்க்கிறது யாரு ? கீழே கமெண்ட் செக்சன் பாத்தா நம்ம கலாச்சாரம் பண்பாடு எல்லாம் தெரியும். அக்கா உங்க கூட ஒரு நாள்.... நு பல கமெண்ட்... டேய் அக்கா கூட எப்டிடானு கேட்க தோணுது. இந்த மாதிரி வீடியோ போடும் “அக்கா”களுக்கு ஃபாலோயர் யாருனு எட்டிப்பாருங்க.. உங்...

விடுதலை - 2 இதெல்லாம் இப்ப பேசலாமா..? கொண்டாட வேண்டுமா..?

விடுதலை - பாகம் இரண்டு :  தமிழ்சினிமா பார்க்காத ரசிக்காத ஒரு கதைக்களம். நக்சலைட் பக்கம் இருந்து கம்யூனிசம் பேசி இருக்கிறது.  இல்லையே அந்த படம் இருக்கிறதே இந்த படம் இருக்கிறதே என்பவர்களுக்கெல்லாம் அந்த படம் தான் பாதிக்கப்பட்டதால் தனக்கு தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டதால் ஹீரோ அரசுக்கு எதிராக மாறுவார். அதுவும் கம்யூனிச பார்வையில் இல்லாமல் ஹீரோயிச பார்வையில். ஆனால் இந்த படத்தில் பெருமாள் வாத்தியார் கருப்பனாக மாற காரணம் அவர் கண் முன் நிகழும் சாதீய வர்க்கப்போர்கள்.அதுதான் படத்தின் பலம். அதுதான் படத்தின் பலவீனம். படம் நெடுக பெருமாள் வாத்தியார் போராடுகிறார் கொல்கிறார் அது யாருக்கு என்பதில் போதிய அழுத்தம் இல்லாமல் கடந்து செல்கிறது.  தமிழகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கோர்த்து ஒரு மாலையாக்கி இருக்கிறார்கள். தமிழ் சினிமா நூற்றாண்டில் பல படங்கள் கம்யூனிசம் பேசி இருந்தாலும் தத்துவார்த்த ரீதியில் உரையாடி முதல் படம் விடுதலை தான்.  பெருமாள் வார்த்தியார் என்ற கருப்பன் இடது சாரி கொள்கைவாதியாக இருந்து அழித்தொழிப்பு இயக்கத்தை தொடங்கி பின்னர் அது சரியான தீர்வல்ல என மீண்டும் எழுத்து பேச்சு ...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...