முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கடவுள் யாரை ஏமாற்றுகிறீர்கள்..? எல்லா மதத்திற்கும் ஒரு கடவுள் தான்..!

 9 நாளே நானே நடந்துக்குவேனு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசின பையன்.. இப்ப ஊழியம் பத்தியும் தன்னோட ஞான அருள் பத்தியும் பேட்டி கொடுத்திருக்கான். சமூகம் இவனை ரொம்ப சீரியசா எடுத்துக்கல... ஊழியம்ங்கிற பேர்ல இப்ப நிறைய காமெடி எல்லாம் நடக்குது. நகையை போடு. டான்ஸை போடுனு அது ஒரு பக்கம் போகுது. அதுல இதுவும் ஒன்னுனு கடந்து போகுது.  ஆனா எனக்கென்னமோ இந்த பையனை பார்க்கும் போது பெரிய பெரிய மத உபன்யாசகர் மாதிரி தான் தெரிஞ்சது. இங்க எல்லா மத்தையும் சேர்த்து தான் சொல்றேன். மதப் பெரியவர்கள் பேசுற எல்லார் பேச்சிலயும் இருக்கும் அதே நாடகதன்மை தான் இவனோட பேச்சிலயும் இருந்துச்சு. ஒருவேளை கடவுள் இருந்தா... அவருக்கு ஒரு அபிசேஷ மொழியோ, இல்ல அவரோட பெருமைகளை பேச ஊழியங்களோ, அவருக்கும் மனிதர்களுகும் இடையில் மீடியட்டரோ வச்சிருக்க மாட்டார். இதெல்லாம் செஞ்சா பாவம் இவ்ளோ குறையும், அதெல்லாம் கொடுத்த ஸ்பெஷலா சொர்க்கம் போய்டலாம் கண்டிப்பா கடவுள் சொல்லமாட்டார். இவனுக கட்டுன கோவில் ( எல்லா மதமும் தான் ) இவனுக உருவாக்குன மொழி, இவனுக உருவாக்குன சடங்கு, இவனுக உருவாக்குன வழிபாட்டு முறைனு ஒரு நாடகமே நடத்திட்டு இருப்பானுங்க....

அது எப்படி இந்த வயசுல மன அழுத்தம்..? உடையும் உருட்டு நியாயமாயிது..!

பதினாறு வயசுல என்ன மன அழுத்தம்னு நிறையபேரு கேட்கிறத பார்க்க முடியுது... இந்த கேள்வியை கேட்கிறது பெற்றோர்னா.... கொஞ்சம் நிதானமா படிங்க...  மனஅழுத்தத்திற்கும் வயசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வெளிப்படுத்தற விசயத்தில வேணா வயசு தொடர்பாக இருக்கலாம். மற்றபடி மன அழுத்தம்ங்கிறது எல்லா உயிரினங்களுக்கும் எல்லா காலத்திலும் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட யானை அதிக மன அழுத்தத்தில் இருந்து பிறகு மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டதாக எல்லாம் செய்தி உண்டு (சிறிய நினைவூட்டல்).  அதுனால இந்த வயசுல என்ன அழுத்தம்ங்கிற முட்டாள்தனமான வாதங்களை விட்டுவிட்டு குழந்தைகளிடம் பேசுங்கள். கோச்சுக்காதிங்க, இங்கே பாதி பெற்றோர் வெற்று அதிகாரத்தில் தான் அம்மா அப்பானு வாழ்றிங்க... உங்க வெற்று பெருமைக்கு அவன் / அவள் பாடுபடனும் குதிக்கிறிங்க....   கடந்த மூணு மாசம் மட்டும் அவ்ளோ மோசமான பெற்றோர்களை பார்த்தேன். அதுவும் அந்த காலேஜ்ல படிச்சா தான் பெருமனு தரதரனு கொண்டு போய் சேர்த்து, அத மறைக்க அவனுக்கு பைக் ஆப்பிள் போனுனு வாங்கி கொடுத்த நாடககங்களையும் பார்த்தேன்.  உங்க பணம் மத...

அட்லிக்கு அபார காழ்ப்புணர்ச்சி தான் பிளஸா..? இல்ல விஜயின் ரசிகன் என்பதா..?

எஸ்பிமுத்துராமன், ராஜசேகர், பி வாசு, ஹரி... இந்த இயக்குனர்கள் எல்லாரும் வேறு வேறு கால கட்டம். ஆனால் எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது இவர்கள் எடுத்த படங்கள் எல்லாமே லாஜிக் இல்லாத ஹீரோயிச மேஜிக் படங்கள்.  இந்த கதையை இப்படி சொன்னா ஓடும்னு இவங்களுக்கு தெரியும். ஊட்டி வரை உறவு கதையை பட்டி டிங்கரிங் பார்த்தா அது நடிகன். பெரிய இடத்து பெண் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தா அது சகலகலா வல்லவன். மணிசித்திரதாளு பட்டி டிங்கரிங் பார்த்தா அது சந்திரமுகி. இப்படி இவர்கள் எடுத்த படங்களில் பெரும்பாலும் இப்படித்தான். தெய்வமகன், அன்பே வா இப்படி பல படங்கள் அப்படியே சுடப்பட்ட படங்கள் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.  அட்லி தன்னை அந்த வரிசையில் தான் சொல்கிறார். நான் வெற்றிமாறன்,மிஷ்கின், ரஞ்சித் டைப் இயக்குனர் இல்லை. ஹீரோயிச இயக்குனர் தான் என்கிறார். அவரின் முதல் படம் தவிர்த்த மற்ற படங்கள் எல்லாமே நல்ல கரம் மசாலா டைப் படங்கள் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.  ஆனால் வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காத ஒரு காழ்ப்புணர்வு அவருக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு காரணங்கள். ஒன்று அவரின் தோ...

மணிப்பூர் மக்களால் சொல்ல முடிய கதை.. வன்முறைக்கு பின்னால் என்ன ..?

ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை.  இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர...

I.N.D.I.A கூட்டணியில் அனைவரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை.. தேர்தலில் வெற்றி கிட்டுமா..?

இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ?  இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ?  இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ?  இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ? இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி.  இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே...  விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.   ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவன...

திரைகளில் தோன்றும் சாதி ஏற்றத்தாழ்வு..! சினிமாவின் நகர்வில் எது தேவை..?

அந்த படத்தில் அவர் பெரிய பண்ணையக்காரர். அவருக்கு ஒரு ப்ரண்ட். ஆனா அவரு சாதி அந்த பண்ணையக்காரர் சாதிக்கு கீழ தான். இங்கே சனாதன இந்து மதம் அப்டிதானே இருக்கு. என்னதான் ப்ரண்டா பழகினாலும் பண்ணையகாரருக்கு இவர் வேலைக்காரர் தான். நம்பிகையான நட்பான வேலைக்காரர். அது ஒன்னும் தப்பில்லை. இந்த சூழலில் ரெண்டு பேரும் ஒரு பங்ஷனுக்கு போறாங்க… அங்க அந்த பண்ணையக்காரர் அவர் பக்கத்தில அவரோட நண்பர உக்காந்து சாப்பிட சொல்ல… அங்க இருக்கிற எல்லாரும் அத எதிர்க்கிறாங்க, சாப்பிடமாட்டோம்னு எந்திரிச்சு நிக்கிறாங்க, ஏன்னா சாதி. உடனே பண்ணையக்காரரும்.. அவளோதானே டேய் எந்திரிடானு நண்பனை பார்த்து சொல்லவும், நண்பன் சொல்றானு அவனும் எந்திரிக்கிறான். எல்லாரும் சாப்பிட தொடங்கியதும், இந்த பண்ணையக்காரர் இலையை மூடிட்டு சாப்டாம போய்டுறார். நட்பு தான் பெருசுனு. இந்த படம் நல்லா ஓடுச்சு. இந்த சீன் பார்த்து சில்லறையை சிதறவிட்டவங்க உண்டு. இப்ப இப்படி யோசிப்போம்.. ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ப்ரண்ட் நான் ஏண்டா இங்க உக்காந்து சாப்பிட கூடாதுனு ஊரை பார்த்து உரக்க கேட்டிருந்தா ?  ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ஏண்டா இவன் சாப்பிட்டா உங்களு...

தீடிரென பல இடங்களில் காட்சி பெறும் புத்தர்.. பெளத்த தத்துவங்கள் என்ன?

இப்போது புத்தரின் படங்களை பல தளங்களில் பார்க்கிறேன். அவையெல்லாம் புத்தர் குறித்து பேசுவன அல்ல. வாருங்கள் பெளத்தம் ஏற்போம் என்ற அழைப்பின் வெளிப்பாடுகள். அல்லது புத்தர் என்ற குறீயிட்டின் படி தாங்கள் யாரென்பதை சொல்லும் சாதி விசயங்கள்.  அம்பேத்கர் பெளத்தம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்பேத்கர் பெளத்தம் ஏற்றார். அல்லது ஏற்க வைக்கப்பட்டார். அதே அம்பேத்கர் முதலில் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தான் சொல்கிறார். இஸ்லாம் கிறிஸ்தவம் என எங்கும் செல்லுங்கள் என்ற அழைக்கிறார். பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொஞ்சம் நிலை மாறுகிறார், பேசுகிறார். பின்னர் அவர் பெளத்தம் முழுமையாக தழுவுகிறார். ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட ஏதுமில்லை. மதம் என்பது கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உலகெங்கும் நாங்கள் எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா என தற்பெருமை பேசும் நிறுவனங்கள் தானே மதங்கள்.... இதில் எதுவும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொறு மதமும் ஒரு கொடுரத்தை செய்துகொண்டுதான் இருக்கிறது.  ஆனால் நாமெல்லாம...

நம்மிடையே மதம் காலாவதியானல் தான் மனிதம் பிறக்குமா..?

சிறியதை பெரியது விழுங்கும். பெரியதை அதனினும் பெரியது விழுங்கும். இது ஒரு முடிவிலி. தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆலயங்களில் வாசலில் இருப்பவர்கள் கேட்கும் பிச்சையை நாம் கொடுத்தால் நாம் கேட்கும் பிச்சையை ஆண்டவன் தீர்த்து வைப்பார். கிட்டதட்ட எல்லா மதங்களின் சாரம்சம் இதுதான். அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் ஆலயத்தின் முன்னால் நிற்கிறார்கள் நம்மை நம்பி. ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவுதல் என்பது இயல்பான ஒன்று. என்னைப் பொறுத்துவரை அதுதான் வாழ்வியல் அடிப்படை. யாரோ யாருக்கோ உதவிக்கொண்டே இருக்கிறார்கள் உலகில். இதில் இறைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இறை புகுத்தப்படுகிறது. காரணம் சொர்கம், மறுமை, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு என அவைகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. விளைவு மனிதம் தாண்டி இறைவன் பெயரால் தர்மம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். உன்னால் முடியும் தம்பி...படத்தில் ஒரு குருட்டு கிழவியின் கையில் இருந்து வாழைப்பழம் கீழே விழுந்துவிடும். வாயில் மந்திரம் முணுமுணுத்துக்கொண்டே நகரும் ஒரு இளைஞன் அவளுக்கு அந்த பழத்தை எடுத்த தர உதவமாட்டான். காரணம் அவன் அதனினும் பெரிய தர்மமான மந்திரத்தை முணுமுணுத்துக்...