முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அயோத்தி படக் காட்சி உங்கள் வாழ்விலும் இப்படியொரு சூழலா

  அது ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை. அன்றைக்கு தீபாவளி வேறு. ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் என 13 உடல்கள் வந்திருக்கிறது. ஒரு 13 வயது சிறுவன் தந்தை வெடி வாங்கி தரவில்லை என்ற தற்கொலை செய்திருக்கிறான். அவன் உடலும் அங்கே இருக்கிறது. அவனின் உறவுகள் எல்லாம் வெளியே கதறியபடி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அவன் உடல் வெளியே வருகிறது. ஒட்டுமொத்த சொந்தமும் கதறுகிறது. ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, அங்கே அழுது கொண்டிருக்கும் பெரியவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்யும் ஊழியர்கள், அய்யா இன்னைக்கு தீபாவளி என்கிறார்கள், அவரும் அழுபடியே சட்டைபையில் இருந்து ரூபாய் எடுத்து கொடுக்கிறார். அந்த காக்கி டவுசர் அணிந்த ஊழியர் வாங்கிகொண்டு அடுத்த உடலை எடுக்க செல்கிறார். இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும்  உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும்...

காங்கிரஸ் சித்தாந்தம் இல்லாமல் எப்படி செயல்படுகிறது..?

காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.  யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது. முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை.  அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாற...

குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1000 எதுக்கு தரங்கனு தெரியுமா..?

ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் பெண்கள் அவர்கள் கணவர்கள் பேசினார்கள். அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண்களில் 98% பேரின் ஏடிஎம் கார்டு அவர்கள் கைகளில் இல்லை. கணவர் கைகளில் தான் இருந்தது. அதில் 75% பேருக்கு பாஸ்வேர்டு கூட தெரியாது. இவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை சொல்லி பணம் எடுத்து தர சொல்லுவோம் என்றார்கள். இவர்கள் எல்லாரும் படித்த ஆசிரியர் வங்கி போஸ்ட் ஆபிஸ் என்ற பெரிய வேலையில் இருப்பவர்கள். இன்னொரு  பக்கம் கிராமங்களில் அல்லது எளிய குடும்பங்களில் வேறு கதை. மனைவியின் சம்பளத்துக்கு கணவர்கள் 25ம் தேதியே செலவு கணக்கு எழுதிடுவார்கள். வாடகை, ஈபி பில், வட்டி, சீட்டு என கணக்கு இருக்கும். இவர்கள் பெட்ரோலுக்கு, ஆபிஸ் கொலிக் திருமணத்திற்கு கிப்ட் என நிற்க வேண்டும். அதிலும் அவர்கள் தான் தொகை முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளம் எவ்வளவு, ஏன் குறைவாக கொடுக்கிறார் என்றெல்லாம் மனைவியால் கேட்கவே முடியாது. என் கம்யூனிஸ்டு  தோழர்  ஒருமுறை இதுகுறித்து பேசிய போது ஒன்று சொன்னார், ஒரு பெண் தன் சம்பளத்தில் இருந்து தன் அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் பெண் படிப்பு...

உலகமே புரிய நீங்கள் இங்கு சென்று அமர்ந்து தான் பாருங்களேன்..!

பேருந்தில்லோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் யாருடை காலையாவது தெரியாமல் மிதித்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தெரிந்தே நம் உடனிருப்போர் குரல்வளையை நெரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதை எத்தனை பேர் உணர்த்திருக்கிறோம். ஒரு சில தினங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை மிகப்பெரிய நவீன வசதிகளை கொண்ட பிரபல மருத்துவமனை. என் பெரியப்பா ஐசியூவில் இருப்பதால்... நான் வெளியில் தான் இருக்கவேண்டும்.(பேஸ் மேக்கர் பொருத்தியிருக்கிறார்கள்... பயப்படும்படி தேவையில்லை).  மொத்தம் நான்கு பிளாக்குகள்... என்னிடம் பாஸ் இருப்பதால்.. சரி கொஞ்சம் சுற்றிப்பார்ப்போம்(?!) என பிளாக் பிளாகாக கிளம்பினேன். ஒட்டுமொத்த வார்டில்/ஐசியூவில்... வயதானவர்கள் 25% மட்டுமே.... 45 முதல் 55 வயதுவரை உள்ளவர்களே அதிகம்... காரணம்.. தவறான உணவுகள்.... உடல் பருமனால் மற்ற உறுப்புகள் செயல் இழப்பு... தவறான வாழ்க்கை முறை. ஐசியூவில் என் பெரியப்பாவுக்கு அருகிலிருந்தவர்... மிகப்பெரிய வக்கீல்... அவருக்கான சிகிச்சைக்கு பத்து லட்சம் கட்டவேண்டியிருக்கிறது... அவரது மகன் இப்போது ஏதோ கல்லூரியில் படிக்கிறான் போல... அவர் அழுதுகொ...

உணவிலும் புகுத்தப்படும் அரசியல்... தேவையான விழிப்புணர்வா நாடகமா..!

உணவு சார்ந்த அரசியல் சமீப காலமாக பேசப்பட்டே வருகிறது. மாமிசம் சாப்பிடுறவா கிட்ட  அந்த குணம் இருக்கும்னு யாரோ ஒருத்தர் சட்டை போடமா உக்காந்து பேசிட்டு இருக்கார். இது யாரோ ஒருத்தர் இல்லை. இந்த மாதிரி நிறைய பேரு பேஷிண்டு இருக்கார்கள். நாமும் அதனை நம்பி நல்ல நாளும் பொழுதுமா ஏண்ட கறிங்கிற அளவுக்கு தெளிவா யோசிச்சுட்டு குழம்பி இருக்கோம்.. முதலில் உணவு என்பது சுவை சார்ந்து மட்டுமில்லை. அதன் மூலக்கூறான புரதம் சார்ந்தது. ஒரு அஞ்சு மிளகு எடுத்து வாய்ல போட்டு மென்னு பாருங்க. வயிறு என்ன ரியாக்சன் காட்டுதுன்னு. அதே பத்து மிளகு நல்ல வறுத்து பொங்கல் போட்டு வரும் போது சாப்டு பாருங்க.. வேறுபாடு தெரியும்.  நாம எதையும் பச்சையா சாப்டுறது இல்லை. எல்லாமே வேக வச்சு பொறிச்சு, வதக்கினு ஏகப்பட்ட கொதி நிலைக்கு கொண்டு போறோம். இப்போது நமக்கு கிடைக்க கூடியது எல்லாமே அதன் சத்து சார்ந்தவைகள் மட்டுமே. மாடு பால் கொடுக்கும். கோழி முட்டை கொடுக்கும்.  மாடு குட்டி போடும். கோழி குஞ்சு பொறிக்கும். இப்ப விசயத்துக்கு வரேன் கோழி சேவல் கூட சேரலனாலும் முட்டை போடும். சேவல் கூட சேர்ந்து போடுற முட்டையில தான் குஞ்சு பொ...

அஜித், விஜயை கொண்டாடும் ரசிகர்கள் மட்டுமே மூடர்களா..?

அஜித் ரசிகர் ஒருவர் இறந்து போயிருக்கிறார். உடனே பலரும் அறிவுரைகளை வாரி வழங்குகிறார்கள். உடனே தமிழ்நாட்டு ஆரிய கும்பல் ஒரு கொடி பிடிக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் தான் வடக்கு மக்கள் இங்கே வருகிறார் என சைடு கேப்பில் தன் ஆரிய விசுவாசத்தை காட்டுகிறார்கள். சுயமூளையற்ற அறிவாளிகளே, இங்கே வடக்கன் வருவது தமிழன் வேலை பார்க்க மறுப்பதால் இல்லை. கூலி பிரச்சினை. இன்றைக்கும் சிவகாசி பட்டாசு ஆலையின் அடிப்படை ஊதியம் தெரியுமா ? ஒரு ஆபிசில் ஒரு பெண் வேலைக்கான அடிப்படை சம்பளம் 5000 ரூபாய்.  ஆண் வேலைக்கு 7500 ரூ. ஆனால் அதே ஊரில் டாய்லெட் வசதியுடன் வீட்டு வாடகையே 5,500. இது  தமிழ்நாடு முழுக்க நிலவும் பிரச்சினை. இங்கே நிலவுவது தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற பெரும் பொய்யான கருத்துருவாக்கம் தான். நான் சொல்கிறேன் இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய அவன் தயாராக இருக்கிறான். ஆனால் சம்பளம் தான் முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை விசுவாசம். சமீபத்தில் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர், வேலையை விட்டுவிட்டு  வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். கேட்ட போது அவர் சொன்...

வாழ்க்கை போராட்டத்தில் மன்னிக்க முடியாத மன்னிப்பு..?

கமல் ஒரு படத்தில சொல்லுவாரு மன்னிப்பு கேட்கிறவன் மனுசன். மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்னு சொல்லுவாரு. இங்க தப்பு செய்யாதவனும் இல்லை. மன்னிப்பு கேட்காதவனும் இல்லை. ஆனா மன்னிப்பு கொடுக்கிறவன் இருக்கானானு பார்த்தா ரொம்ப கம்மிங்க. ஏன்னா நம்ம உளவியல் அப்படி. இப்ப ஒரு உறவில X ம் Yம் நெருங்கி இருக்காங்க. ஒரு கட்டத்தில் இந்த X ஏதோ தப்பு செஞ்சுட்டாரு. Yக்கு அதுனால மனசு பாதிப்பு. பொருளாதார பாதிப்பு. இப்படி ஏதோ ஒரு பாதிப்பு. அது பெருசு சிறுசு எல்லாம் அவருக்கு தான் தெரியும். காலமாற்றத்தில் X தன் தவறை உணர்ந்து Yகிட்ட மன்னிப்பு கேட்பாரு. இப்ப Yக்கு சிக்கல். அந்த சூழல் நிலைமை பாதிப்பு எல்லாமே கண் முன்ன வந்து போகும். ஏன்னா அவர் அதை எதிர்கொண்டாவர் Y தானே. இப்ப மன்னிப்பு கொடுக்கலனா இன்னும் ஏதாச்சும் பெருசா வருமோ, இல்லாட்டி ஊர் உலகம் ஏதாச்சும் சொல்லுமோனு பயந்து Xஅ மன்னிப்பாரு. இந்த Xக்கும் ஒரு சந்தோஷம். நிம்மதி எல்லாமே கிடைக்கும். மன்னிப்பு கேட்ட மறுநாளே Y கிட்ட பழைய படி உறவை அன்பை புதுப்பிக்க முயலும். ஆனால் Y ஒரு நாடக தன்மையிலே இருக்கும். ஏன்னா உளவியல் பயம் அப்படி.  சரி இப்ப என்ன செய்றது. Y ...

ஒரு பெண் ஆணை அடிப்பது தீர்வா..? இப்படியே வாழ்வது தான் விதியா.. !

வழக்கமான சேட்டன்கள் மொழியில் கொஞ்சம் குடும்ப உளவியல் பேசியிருக்கும் படம். சும்மா பெண்ணோட சுதந்திரம், நீதி, சமத்துவம் மட்டுமே பேசல. நாம் வாழும் சமூகத்தோட போலி தன்மையை இந்த படம் கடைசி வரை பேசிட்டே வருது. அதுவும் நுட்பமாக. புருசன் அடிச்சா திருப்பி அடிப்பேன். இப்டி ஒரு பொண்னு முடிவெடுத்தா இந்த சமூகம் என்ன நினைக்கும். அந்த குடும்பம் என்ன நினைக்கும். முக்கியமா புருசன் என்ன நினைப்பாங்கிறதுதான் படம். ஜெயா பிறந்ததில் இருந்தே அவளுக்கு சாய்ஸே இல்லை. எல்லாமே சான்ஸ் தான். அதை அவ தக்க வைக்கனும் அதுக்கு தானே கலாச்சாரம் பண்பாடு எல்லாமே இருக்கு.  நம் சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கிற எல்லாமே சான்ஸ் தானே. அவர்களால் தேர்வு செய்ய பெரிதாக வாய்ப்பு இல்லை. நல்ல மார்க்க எடுத்தாலும்  இது நம்மாளுக(?!) காலேஜ், பெரியப்பாவோட சித்தப்பா மக வயித்து கொழுந்தியா இந்த காலேஜ்ல புரொபசர் இருக்கா, வீட்டு பக்கத்தில இப்படித்தான் அமையும். விருப்பபட்ட கல்லூரியோ, படிப்போ நடுத்த குடும்பங்களில் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இன்றைக்கு கொஞ்சம் மாறியிருந்தாலும் எல்லாருக்குமான வாய்ப்பாக இது அமையவில்லை.  படிப்பு, ஆடைகள், வாய்ப...